அண்மை செய்தி தாயகச் செய்தி 

டிப்பர் வாகனத்தை இடைமறித்து சாரதி மீது தாக்குதல்

மாங்குளத்திற்கும், முறிகண்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் டிப்பர் வாகனத்தை இடைமறித்து சாரதி மீது மது போதையில் வந்த இருவர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் இன்று(10) இடம் பெற்றுள்ளது.சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டுவரும் இருவரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சட்டவிரோத மணல் அகழ்வில் தாங்கள் ஈடுபடும் தகவலை பொலிஸாருக்கு வழங்கினார் எனத் தெரிவித்தே தாக்குதல் நடத்தப்பட்டதாக பாதிக்கப்பட்ட தரப்பு தெரிவித்துள்ளது.இதுதொடர்பான காணொளி தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

யாழ். மருத்துவ பீடத்தில் நவீன நரம்புத் தூண்டல் முறை குறித்து கலந்துரையாடல்

நவீன நரம்புத் தூண்டல் முறையான Transcranial Magnetic Stimulation (TMS) தொடர்பான கலந்துரையாடல், யாழ். பல்கலைக்கழக மருத்துவப்பீட CTRB மண்டபத்தில் இன்று  இடம்பெற்றது.அமெரிக்காவைச் சேர்ந்த “நவீன நரம்புத் தூண்டல்” (TMS)  வைத்திய நிபுணர் தாரிக் பெரேரா வளவாளராக கலந்துகொண்டிருந்தார். இதன்போது TMS முறையின் அடிப்படை கோட்பாடுகள், மருத்துவப் பயன்பாடுகள் மற்றும் மனநலத் துறையில் அதன் எதிர்கால பங்கு குறித்து விளக்கமளிக்கப்பட்டது.யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவப் பீடத்தின் மனநல மருத்துவத் துறை ஏற்பாட்டில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

யாழ் – இளவாலை பகுதியில் இளம் குடும்பஸ்தர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு.

யாழ்ப்பாணம் – இளவாலை பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக  மீட்கப்பட்டுள்ளார். டச்சுவீதி, பெரியவிளான், இளவாலை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,அவரது குடும்பத்தினர் நேற்றுமுன்தினம் காங்கேசன்துறை பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்வுக்கு சென்றுள்ளனர். பின்னர் நேற்று அதிகாலை வீட்டிற்கு வந்து பார்த்தவேளை குறித்த குடும்பஸ்தர் சடலமாக தூக்கில் தொங்கியவாறு காணப்பட்டுள்ளார். இது குறித்து இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில், சடலத்தை மீட்ட இளவாலை பொலிஸார் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
அண்மை செய்தி சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

துப்பாக்கிச் சூட்டுக் குப் பலியான சிறுவனின் கொலை க்கு நீதி வேண்டி போராட்டம்

கடந்த பெப்ரவரி 19 ஆம் திகதியன்று அல்லைப்பிட்டி பகுதியில் காவல்துறையினரின் துப்பாக்கிச்  சூட்டுக்குப் பலியான அல்பினோ அருள் ஃபயாஸ் சிறுவனின் கொலைக்கு நீதி வேண்டி இன்று ஊர்காவற்றுறை காவல்துறை நிலையம் முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மனித உரிமை ஆர்வலர் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டத்தில், சிறுவனின் உறவுகள் காவல்துறைனருக்கு எதிரான கோசங்கள் தாங்கிய பதாகைகளுடன் கலந்துகொண்டனர். குறித்த போராட்டம் ஊர்காவற்றுறை நீதிமன்றின் முன்பாக காலை 11 மணிக்கு ஆரம்பமானது.போராட்டம் ஆரம்பமான சில நிமிடங்களில், நீதிமன்ற காவல்துறையினரால் நீதுமன்றுக்கு முன்பாக போராட்டம் நடத்த முடியாது எனக் கூறி நீதிமன்ற வளாகத்தை கடந்து போராட்டத்தை முன்னெடுக்குமாறு வலியுறுத்தப்பட்டது. காவல்துறையினரின் கோரிக்கையை ஏற்ற போராட்டக்காரர்கள், ஊர்காவற்றுறை காவல்துறை நிலையம் முன்பாக ஒன்றுகூடி போராட்டத்தை முன்னெடுத்தனர். இதன்போது,  காவல்துறையினரின் செயலைக் கண்டித்து பல்வேறு சுலோங்கள் தாங்கி கோசமிட்டு தமது எதிர்ப்பை காட்டிய…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழில் பெருந் தொகை தங்கத்தை கடத்தி செல்ல முற்பட்ட இருவரை கடற் படையினர் கைது

யாழ்ப்பாணத்தில் இருந்து பெருந்தொகை தங்கத்தை கடத்தி செல்ல முற்பட்ட இருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மாதகல் கடல் வழியாக இந்தியாவிற்கு படகொன்றில் தங்கம் கடத்தி செல்லப்படுவதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த படகினை கடலில் வழிமறித்து கடற்படையினர் சோதனையிட்ட வேளை படகில் இருந்து 6 கிலோ 85 கிராம் தங்க கட்டிகளை மீட்டுள்ளனர்.அதனை அடுத்து படகில் இருந்து இருவரையும் கடற்படையினர் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட இருவரையும் , மீட்கப்பட்ட தங்கத்தையும் , தங்கத்தை கடத்தி செல்ல பயன்படுத்தப்பட்ட படகினையும் மேலதிக நடவடிக்கைக்காக காங்கேசன்துறை சுங்க அதிகாரிகளிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்

மேலும் படிக்க
அண்மை செய்தி சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

ஈரானின் தற் போதைய போக்கு ஈழத்தமிழர் மீதான இனப்படு கொலை யினை மீளவும் நினைவு படுத்துகிறது: சிறீதரன்

ஈரானின் தற்போதைய போக்கு ஈழத்தமிழர் மீதான இனப்படுகொலையினை மீளவும் நினைவுபடுத்துகிறது: சிறீதரன் எம்.பி தெரிவிப்பு……! ​”சர்வதேச போர் விதிகளை மீறி ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசு நிகழ்த்திய அதே கொடூரமான கொத்துக்குண்டுத் தாக்குதல்களை, இன்று ஈரான் இஸ்ரேல் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளது” எனப் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கவலை வெளியிட்டுள்ளார். ​”சுதந்திரப்பறவைகள்” மகளிர் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற பன்னாட்டு மகளிர் தின நிகழ்வில், முதன்மை அழைப்பாளராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ​அவர் மேலும் தெரிவிக்கையில்: ​”ஈழப் போராட்ட வரலாற்றில் பெண்கள் வெறும் சாட்சிகளாக மட்டுமல்ல, களத்தில் நின்ற போராளிகளாகவும், குடும்பத்தைத் தாங்கும் தூண்களாகவும் விளங்கியவர்கள். உலகமே வியந்து பார்த்த ஒரு போரியல் வாழ்வை வாழ்ந்தவர்கள் ஈழத்தமிழ்ப் பெண்கள். இன்றும் காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளுக்காக எட்டு ஆண்டுகள் கடந்தும் தாய்மார்கள் வீதியில் நின்று…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் வன்முறை கும்பலால் வீடு, தீக்கிரை.

வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் நேற்று இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில், வீடொன்றின் மீது பெற்ரோல் ஊற்றித் தீவைக்கப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழல் நிலவியது. பூந்தோட்டம் பாடசாலைக்கு அருகிலுள்ள வீட்டில் வசித்து வருபவர்களுக்கும், வெளியில் இருந்து வந்த வன்முறைக் கும்பல் ஒன்றுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு பாரிய மோதலாக மாறியுள்ளது. வாள்கள் மற்றும் பொல்லுகளுடன் வந்த அந்தக் கும்பல், இளைஞர்களைத் தாக்கும் நோக்குடன் வீட்டிற்குள் நுழைய முயன்றுள்ளது. இதையடுத்து, அந்த இளைஞர்கள் வீட்டிற்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டனர். ஆத்திரமடைந்த வன்முறைக் கும்பல், வீட்டின் ஜன்னல்களை உடைத்துச் சேதப்படுத்தியதுடன், கதவின் வழியாகப் பெற்ரோல் ஊற்றித் தீயிட்டுள்ளனர். வீட்டிற்குள் பெண்கள் மற்றும் சிறுவர்கள் இருந்த நிலையில், அவர்கள் கதறி அழுது தங்களைக் காப்பாற்றும்படி கெஞ்சியுள்ளனர். இருப்பினும், வன்முறையாளர்கள் அதைப் பொருட்படுத்தாமல் தீவைத்துக் கொழுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். வீட்டிற்குள் தீ பரவத் தொடங்கிய…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

இராணுவத்தி னரிடம் கையளித்த உறவுகள் எங்கே? முல்லையில் மாபெரும் கவனயீர் ப்புப் போராட்டம்!

சர்வதேச மகளிர் தினம் எமக்குத் துக்க தினம்; இராணுவத்தினரிடம் கையளித்த உறவுகள் எங்கே? முல்லையில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்! இராணுவத்திடம் கையளித்த தமது உறவுகள் எங்கே? இவர்களுக்கு என்ன நடந்தது இந்த விவகாரத்துக்கு சர்வதேச நீதி விசாரணையே வேண்டும் எனக் கோரி வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரால் இறுதி யுத்தத்தின் சாட்சியாக காணப்படும் வட்டுவாகல் பாலத்தில் நேற்று (8) மாபெரும் கவனயீர்ப்பு.போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டமானது ஒன்பது ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் சர்வதேச மகளிர் தினமான நேற்று மகளிர் தினம் எமக்கு துக்க தினம் என தெரிவித்து தமக்கு சர்வதேச விசாரணையே தீர்வு எனக் கோரி போராட்டத்தை முன்னெடுத்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது உறவுகளை இராணுவத்திடம் ஒப்படைத்ததுடன், தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என இதுவரை இலங்கை அரசாங்கத்தால் எந்த தகவலும் வெளியிடவில்லை எனவும் இனப்படுகொலையாளிகளை…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

முல்லை இளையோ ரின் விளையாட்டு திறனை மேம்படு த்தும் நோக்கில் பூப்பந் தாட்ட பயிற்சி முகாம்

முல்லைத்தீவு மாவட்ட இளையோரின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் நோக்கில் பூப்பந்தாட்ட பயிற்சி முகாம் மற்றும் போட்டி   முல்லைத்தீவு மாவட்ட இளையோரின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் நோக்கில் 13 வயதிற்குட்பட்ட ஆண் மற்றும் பெண் இளையோருக்கான பூப்பந்தாட்ட பயிற்சி முகாம் மற்றும் போட்டி நிகழ்வு நேற்றையதினம் 07.03.2026 சனிக்கிழமை முல்லைத்தீவு மாவட்ட பூப்பந்தாட்ட உள்ளக அரங்கில் நடைபெற்றது. முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு துறை பூப்பந்தாட்ட சங்கம் மற்றும் வடமாகாண பூப்பந்தாட்ட சங்கம் இணைந்து, தமிழர் புலம்பெயர் பூப்பந்தாட்ட அமைப்பான UBF அமைப்பின் நிதி அனுசரணையுடன் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இளையோரின் பூப்பந்தாட்ட விளையாட்டு திறனை வளர்த்தெடுத்து எதிர்காலத்தில் சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கும் நோக்கில் இந்த பயிற்சி செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் சுமார் 60 இளையோர் கலந்து கொண்டு பயிற்சியிலும் போட்டியிலும் உற்சாகமாக பங்கேற்றனர். நிகழ்வின் ஆரம்ப…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வீடொன்றில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த பெற்றோலை காவல் துறையினர். மீட்டுள்ளனர்

வீடொன்றில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி பெற்றோலை கல்முனை தலைமையக காவல் துறையினர். மீட்டுள்ளனர். கல்முனை தலைமையக  காவல் துறை.பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் கடை ஒன்றுடன் இணைந்த வீடொன்றில் பெற்றோல் பதுக்கி வைக்கப்பட்டு  விற்பனை செய்யப்பட்டு வருவதாக இன்று மாலை கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.ஏ.எல்.லசந்த களுஆராச்சிக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய ஊழல் ஒழிப்பு பிரிவு உப  பொலிஸ் பரிசோதகர்  கே.எல்.எம் முஸ்தபா  தலைமையிலான காவல் துறையினர். சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இதன் போது குறித்த வீட்டின் கட்டிலின் கீழ் சூட்சுமமாக போத்தல் மற்றும் கலன்களில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில்  சுமார் 32 லீட்டர் பெற்றோல் மீட்கப்பட்டுள்ளன.அத்துடன் 39 வயது மதிக்கத்தக்க பெண்  சந்தேக நபர்  கைதான நிலையில் காவல் துறையினர். பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.மேலும்  குறித்த வழக்கு நாளை  கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில்…

மேலும் படிக்க