சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

காவல்துறை யினர்.துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான சிறுவனின் கொலைக்கு நீதி வேண்டி போராட்டம்

யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டி பகுதியில் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான அல்பினோ அருள்  ஃபயாஸ் என்ற சிறுவனின் கொலைக்கு நீதி வேண்டி இன்று யாழ். பஸ் நிலையப் பகுதியில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். மனித உரிமை ஆர்வலர் அமைப்பினரால் முனெடுக்கப்பட்ட குறித்த போராட்டத்தில், சிறுவனின் உறவுகளுடன், வேலன் சுவாமி, குரலற்றவர்களின் குரல் அமைப்பின் தலைவர் கோமகன், யாழ். மாநகர உறுப்பினர் நிசாந்தன் உள்ளிட்ட பலர் கலந்து போராட்டத்துக்கு வலுச்சேர்த்தனர். குறித்த போராட்டத்தின் போது பொலிசாரின் செயலைக் கண்டித்து பல்வேறு சுலோங்கள் தாங்கி கோசமிட்டு தமது எதிர்ப்பை காட்டிய போராட்டக்காரர்கள், குறித்த கொலைக்கு காரணமான பொலிசாரை தண்டிக்க வேண்டும் என்றும் இவ்வாறான மிலேச்சத்தனமான கொலைகளை காவல்துறை. இனி மேற்கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தியதுடன் நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். முன்பதாக கடந்த 10 ஆம் திகதி…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

பெரும்போக அறு வடை நெல்லினை வறிய குடும்பங்க ளுக்கு பகிர்ந்து அளித்த விவசாயி

கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தர்மபுரம் பகுதியில் வசித்து வரும் விவசாயி ஒருவர் ஒவ்வொரு வருடமும் பெரும்போக அறுவடை முடிவடைந்ததும் தாம் மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கையில் அறுவடை செய்த நெல்லினை தமது பகுதியில் நெற்செய்கை  மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ள வறிய குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கும் செயற்பாட்டை மேற்கொண்டு வருகின்றார். நேற்றுமுன்தினம் (20) தர்மபுரம் கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் வைத்து தம்மால் முடிந்த வரையில் அறுவடை செய்த நெல்லின் ஒரு பகுதியில் 30 குடும்பங்களுக்கு ஒரு மூட்டை வீதம் வழங்கினார்.இதன்போது கூறுகையில், தமது பெயரினையோ அல்லது தமது முகத்திலையோ ஊடகங்களுக்கு தெரிவிக்க விரும்பவில்லை எனவும் பிறருக்கு உதவும் மனம் இருந்தால் மட்டும் போதும், என்னால் முடிந்தவரை ஒவ்வொரு வருடமும் இதேபோன்று வழங்கி வருவேன். வழங்குவேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

நிழல் அமைச்சர்களை நியமித்து ஆட்சியைக் கொண்டுநடத்துமாறு ஆளுநர் வேதநாயகனு க்கு உத்தரவு! கஜேந்திரகுமார்

இன அழிப்புப் போரில் ஈடுபட்ட இராணுவத்தின் கோரமுகமே தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரை. இந்த விடயத்தில் அரசு தலையிட்டு காணிகளை இழந்த மக்களுக்கு நீதியை வழங்க வேண்டும்.என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையில் அவர் மேலும் கூறியதாவது:- “தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரை தொடர்பில் கொழும்பில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இந்தக் கலந்துரையாடலில், பௌத்த சாசன அமைச்சின் அதிகாரிகளும், அரச அதிகாரிகளும், திஸ்ஸ விகாரையின் விகாராதிபதியும் கலந்துகொண்டனர். ஆனால், காணிகளை இழந்த மக்கள் இதில் கலந்துகொள்ள அழைக்கப்படவில்லை. இது எந்த வகையில் நியாயம்? தையிட்டி திஸ்ஸ விகாரைக்கும் அரசுக்கும் அல்லது பௌத்தத்துக்கும் தொடர்பில்லை. இராணுவமே இந்த ஆக்கிரமிப்பைச் செய்தது. அப்போதைய இராணுவத் தளபதி சவேந்திர சில்வாதான் இந்த விகாரையை அமைப்பதில் முழுமூச்சாகச் செயற்பட்டார்.…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

கிளிநொச்சியில் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் ஒன்றிணைந்து, போராட்டம்

கிளிநொச்சியில் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் ஒன்றிணைந்து, போராட்டம் ஆரம்பித்து 16 ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில், கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இந்த போராட்டம் இன்று (20) காலை 11 மணியளவில் ஏ 9 வீதி நகர் பிள்ளையார் கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்டு கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் பிராந்திய அலுவலகம் முன் நின்று தங்களின் எதிர்ப்புகளை வெளிப்படுத்திய பின்னர்  டிப்போ சந்தி அண்மித்த மீனாட்சி அம்மன் ஆலய முன்றலில் நிறைவடைந்தது. “வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களாகிய நாங்கள் யுத்தம் முடிவடைந்து 16 வருடங்களை கடந்தும் தொடர்ச்சியாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை கிளிநொச்சி மாவட்டத்தில் கந்தசாமி கோவில் முன்றலில் 20.02.2017 அன்று ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்றுடன் 3287 நாட்களைக் கடந்தும் எந்த வித பதிலும் நீதியும் கிடைக்கப்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

வரலாற்றில் ஒரே நேரத்தில் அதிக தங்கப் பதக்கங்களை வென்ற மாணவி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கல்வி கற்ற யாழ்.நயினாதீவு மண்ணைச் சேர்ந்த செல்வி. அபிராமி நற்குணம் தனது மருத்துவப் படிப்பின் பல்வேறு துறைகளிலும் தனது சிறப்பான திறமையை வெளிப்படுத்தி இன்று வியாழக்கிழமை (19.02.2026) ஆரம்பமான யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் ஆரம்ப நாளில் 8 தங்கப் பதக்கங்களைச் சுவீகரித்துள்ளார். இதன்மூலம் இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவப் பீட வரலாற்றில் ஒரே நேரத்தில் அதிக தங்கப் பதக்கங்களை வென்ற மாணவியாக மேற்படி மாணவி இடம்பிடித்துள்ளார். மருத்துவப் படிப்பின் அனைத்துக் கட்டங்களிலும் (Final MBBS) முதலிடம், சத்திரசிகிச்சை (Surgery), மகப்பேற்றியல் (Obstetrics and Gynaecology) மற்றும் குழந்தை மருத்துவம் (Paediatrics) போன்ற துறைகளில் விசேட சித்தி, மருத்துவப் பீடத்தின் சிறந்த மாணவிக்கான விருது ஆகியவற்றுக்காகவே குறித்த தங்கப் பதக்கங்கள் மாணவி அபிராமிக்கு வழங்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

பிரித்தானிய பிரதிப் பிரதமருடன் தமிழ் தேசியக் கட்சிகள் சந்திப்பு!

பிரித்தானிய பிரதிப் பிரதமருடன் தமிழ் தேசியக் கட்சிகள் சந்திப்பு! இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட பிரித்தானிய பிரதிப் பிரதமர் Rt Hon. David Lammy மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் (Andrew Patrick) ஆகியோருக்கும் தமிழ் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றைய தினம் கொழும்பில் நடைபெற்றது. ​மேற்படி கலந்துரையாடலில் நல்லிணக்கம், நீதி மற்றும் தமிழ் சமூகங்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது. அர்த்தமுள்ள முன்னேற்றத்திற்கு ஆதரவளிக்கவும், நீதி மற்றும் சமத்துவத்தை ஊக்குவிக்கவும், தமிழ் பிரதிநிதிகளின் குரலை தொடர்ந்து ஒலிக்கச் செய்யவும் ஐக்கிய இராச்சியம் உறுதியாக இருப்பதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது. ​ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளும் தேசிய இனப் பிரச்சினை மற்றும் அதற்கான தீர்வுத் திட்டங்கள் குறித்து இந்தச் சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன், இன நல்லிணக்கம் மற்றும் நீதியை நிலைநாட்டும் விடயங்களில் தமிழர்களுடன்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

காணிகளை பறித்து சிங்களவர்களுக்கு வழங்கும் ஒரு கட்டமைப்பாகவே தமிழர்கள் மகாவலியை நோக்குகின்றனர்;

தமது காணிகளை பறித்து சிங்களவர்களுக்கு வழங்கும் ஒரு கட்டமைப்பாகவே தமிழர்கள் மகாவலியை நோக்குகின்றனர்; பாதகமான கிவுல் ஓயா திட்டத்தை ஒருபோதும் ஏற்கோம் என கடுமையாக எதிர்த்த – ரவிகரன் எம்.பி தமது காணிகளை பறித்து பெரும்பான்மையினத்தவர்களுக்கு பகிர்ந்தளிக்கின்ற ஒரு கட்டமைப்பாக மகாவலி அதிகாரசபையை தமிழ் மக்கள் வெறுப்போடு நோக்குவதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். அதேவேளை மகாவலி அதிகாரசபையினால் முன்னெடுப்பதற்கு முயற்சிக்கப்படும் தமிழ் மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதகமான கிவுல் ஓயாத் திட்டத்தினை ஒருபோதும் தமிழ்மக்கள் ஏற்கமாட்டார்கள் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரால் கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் 17.01.2026இன்று கமத்தொழில், கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த தலைமையில் கிவுல் ஓயாத்திட்டம் தொடர்பான விசேடகலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போதே நாடாளுமன்ற உறுப்பினரால் இவ்வாறு கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. குறித்த…

மேலும் படிக்க
ஈழ அரசியல் ஆய்வு கட்டுரை சிறப்புச் செய்தி 

ஆனையிறவுப் பெருஞ்சமர் 2000: ஈழத்தமிழரின் போரியல் மேலாதிக்கமும் கரும்புலிகளின் தொழில்நுட்பப் பாய்ச்சலும்

ஆனையிறவுப் பெருஞ்சமர் 2000: ஈழத்தமிழரின் போரியல் மேலாதிக்கமும் கரும்புலிகளின் தொழில்நுட்பப் பாய்ச்சலும் ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ 📝 முன்னுரை ஈழப்போரின் வரலாற்றில் 2000-ஆம் ஆண்டு நிகழ்ந்த ‘ஓயாத அலைகள் – 3’ சமர், ஒரு விடுதலை அமைப்பு மரபுவழி இராணுவமாக (Conventional Army) முழுமை பெற்றதை உலகிற்கு நிரூபித்த தருணமாகும். பல தசாப்தங்களாக இலங்கை இராணுவத்தின் பிடியில் இருந்த, இயற்கையிலேயே பாதுகாப்புக் கோட்டையாக விளங்கிய ஆனையிறவு (Elephant Pass) தளம் வீழ்த்தப்பட்ட விதம், உலக இராணுவ ஆய்வாளர்களை இன்றும் வியப்பில் ஆழ்த்தும் வரலாற்றுப் பாடமாகும். 🌊 குடாரப்பு தரையிறக்கம்: ஒரு இராணுவ அதிசயம் ஆனையிறவுத் தளத்தை வீழ்த்துவதற்கான குடாரப்பு தரையிறக்கம், புலிகளின் போரியல் வரலாற்றில் மிகத் துணிச்சலான நகர்வாகும். * மறைமுகத் தாக்குதல் வியூகம்: தளத்தின் முன் கதவை உடைக்காமல், கடல் வழியாகப் பின்வாசல் வழியில் நுழைந்து எதிரியை நிலைகுலையச்…

மேலும் படிக்க
காணொளி சிறப்புச் செய்தி 

ஆதி லிங்கேஸ்வரர் ஆலய சிவராத்திரி வழிபாடுகளுக்கு சைவப் பெருமக்கள் அணிதிரளவேண்டும் – ரவிகரன்

வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலய சிவராத்திரி வழிபாடுகளுக்கு சைவப் பெருமக்கள் அணிதிரளவேண்டும் – ரவிகரன் எம்.பி அழைப்பு வவுனியா வடக்கில் அமைந்துள்ள தமிழர்களின் பூர்வீக வழிபாட்டுத் தலமான ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் 15.02.2026 நாளையதினம் இடம்பெறவுள்ள சிவராத்திரி தின விசேட வழிபாடுகளில் கலந்துகொள்வதற்காக சைவப்பெருமக்கள் அனைவரும் அணிதிரண்டு வருகைதரவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அழைப்பு விடுத்துள்ளார். வெடுக்குநாறி தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடம் என்ற உரிமையை தொடர்ந்தும் நிலைநாட்டிட அனைத்துச் சைவப்பெருமக்களும் அணிதிரண்டு கலந்துகொள்ளவேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த அழைப்புச்செய்தியினூடாகத் தெரிவித்துள்ளார். மேலும் கடந்தகாலங்களில் ஆட்சியாளர்களாலும், அரச இயந்திரங்களாலும் வெடுக்குநாறி மலையில் இடம்பெற்ற சிவராத்திரி வழிபாடுகளின்போது சைவப்பெருமக்களின் வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இம்முறை சைவப்பெருமக்களின் வழிபாடுகளுக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்படாதென கடந்த வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் அரசாங்கத்தரப்பு பிரதிநிதிகளால் உறுதியளிக்கப்பட்டிருப்பதாகவும்…

மேலும் படிக்க