செய்திகள் தாயகச் செய்தி 

அணைக்கட்டு மற்றும் நீர்ப்பாசன வாய்க்காலை அமைக்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்க – ரவிகரன்

பெரியவிளாத்திக்குளம் புல்மோட்டைவெளி அணைக்கட்டு மற்றும் நீர்ப்பாசன வாய்க்காலை அமைக்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்க – ரவிகரன் எம்.பி வலியுறுத்து. வவுனியா – ஓமந்தை கமநலசேவைநிலையப் பிரிவிற்குட்பட்ட பெரியவிளாத்திக்குளம் கமக்கா அமைப்பின் கீழ் காணப்படும் புல்மோட்டை வயல்வெளிக்குரிய அணைக்கட்டை அமைப்பதுடன், நீர்ப்பாசன வாய்க்கால் சீரமைப்பை மேற்கொள்ளுமாறும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் கூடியவிரைவில் உரிய திட்டங்களில் உள்வாங்கப்பட்டு குறித்த புல்மோட்டை வெளிக்குரிய அணைக்கட்டை அமைக்கவும், நீர்ப்பாசன வாய்க்காலைச் சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமென வவுனியா பிரதேசசெயலாளர் மற்றும் ஓமந்தை கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரால் பதில் வழங்கப்பட்டுள்ளது. வவுனியா பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் 13.02.2026நேற்று இடம்பெற்ற நிலையிலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதுதொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், ஓமந்தை கமநலசேவைநிலையப் பிரிவிற்குட்பட்ட பெரியவிளாத்திக்குளம் கமக்கார அமைப்பின்கீழுள்ள புல்மோட்டை வெளிக்கான அணைக்கட்டு அமைக்கவும்,…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

தமிழரசுக் கட்சியின் முடிவுகள் தீர்மானங்களை விமர்சித்தால் கடும் நடவடிக்கை – சுமந்திரன் எச்சரிக்கை

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முடிவுகள் தீர்மானங்களை பகிரங்க வெளியில் விமர்சிக்கின்ற கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே அத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவதை கட்சி உறுப்பினர்களும் பிரமுகர்களும் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கட்சி உறுப்பினர்களுக்கு எச்சரித்துள்ளார். கட்சியின் தீர்மானங்களை விமர்சிப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டிருக்கின்றன என்பதைக் கட்சி உறுப்பினர்களுக்குத் தமிழரசுக் கட்சியின் பிரதேச சபைகளின் தவிசாளர்கள் தெரியப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. அவர் அனைத்து முறைப்பாடுகள் சம்பந்தமாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாய தேவை இருப்பதினால் மேலும் எவரையும் சங்கடத்திற்கு உட்படுத்தாமல் நடந்து கொள்ளுமாறு கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என்று தவிசாளர்களைக் கேட்டிருக்கின்றார். கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதேச சபை தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு இது பற்றிய தகவல்களை…

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

கிளிநொச்சியில் ஆரம்பமான அநீதிக்கான ஒன்றுகூடல்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) நாடாளுமன்ற குழுத்தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சியில் கண்டன கூட்டம் ஒன்று நடைபெறுகின்றது. கிளிநொச்சி பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இந்த அநீதிக்கான ஒன்றுகூடல் இன்று (14) காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.இந்த கண்டனக் கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்கள், பொது மக்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர். நாடாளுமன்ற குழுத்தலைவர் பதவியிலிருந்து சிவஞானம் சிறீதரன் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்தப் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் நியமிக்கப்பட்டிருந்தார்.இலங்கைத் தமிழரசுக் கட்சியின்அரசியல் குழுவின் ஆலோசனையை நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் ஏற்க மறுத்தமையால், அவரை நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து நீக்கக் கட்சி தீர்மானித்துள்ளதாகக் கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் அண்மையில் தெரிவித்திருந்தார். கட்சியின் எந்த உயர் சபை…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

காணிக்குள் கால் வைத்தால் சுடுவோமென மிரட்டுகிறார்கள்! நீதி கோரும் வெற்றிலைக்கேணி விவசாயிகள்

யாழ்ப்பாணம் – வடமராட்சிக் கிழக்கு வெற்றிலைக்கேணி கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் விவசாயிகள் விவசாயம் செய்துவந்த பல ஏக்கர் அரச காணி தனி நபர் ஒருவரால் அடாத்தாக சுவீகரிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது அத்தோடு குறித்த பகுதிக்கு செல்ல முற்பட்டால் இடியன் துவக்கால் சுடுவோம் என்றும், பொலிசாரை வைத்து கைது செய்வோம் என மிரட்டுவதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். சம்பவம் தொடர்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த விவசாயிகள், யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி J/ 432 கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மக்கள்  விவசாயம் செய்துவந்த நிலையில் அப்பகுதியில் காணப்பட்ட பல ஏக்கர் கணக்கான அரச காணி தனி நபர் ஒருவரால் சுவீகரிக்கப்பட்டுள்ளது. அத்துமீறி அடைக்கப்பட்ட குறித்த காணி அரசகாணி எனவும் நிலைமை தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கிராம சேவையாளருக்கு பிரதேச செயலர் உத்தரவிட்டுள்ள நிலையில் இதுவரை உரிய அதிகாரிகளால்…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி வழிபாடுகளுக்கு இடமளிக்கப்படவேண்டும்; ரவிகரன்

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சுதந்திரமான சிவராத்திரி வழிபாடுகளுக்கு இடமளிக்கப்படவேண்டும்; ரவிகரன் எம்.பி வலியுறுத்து வவுனியா வடக்கு பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட, ஒலுமடு வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சைவமக்கள் சுதந்திரமாக சிவராத்திரி தின வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு இடமளிக்கப்படவேண்டுமெனவும், சைவ மக்களின் வழிபாட்டுரிமை பாதுக்கப்படவேண்டுமெனவும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் இம்முறை வெடுக்குநாறி மலையில் சைவமக்கள் சிவராத்திரி தின வழிபாடுகளில் ஈடுபடுவதற்குரிய வழிவகைகள் ஏற்படுத்தப்படுமென வவுனியாவடக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர் உபாலி சமரசிங்கவால் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் 13.02.2026இன்று இடம்பெற்ற நிலையில், குறித்த கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், வெடுக்குநாறி மலையில் கடந்த ஆண்டுகளில் இடம்பெற்ற சிவராத்திரி தின வழிபாடுகளில் இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. குறிப்பாக சிவராத்திரி தின வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த பக்தர்கள்…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

யாழ்.மாசாரில் 105 லட்சம்  ரூபா மதிப்பிலான கேரள கஞ்சா மீட்பு

மாசாரில் 105 லட்சம்  ரூபா மதிப்பிலான கேரள கஞ்சா மீட்பு! பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாசார் பகுதியில்  105 லட்சம்  ரூபா மதிப்பிலான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இலங்கை இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று (12) பளை பொலிஸாருடன் மாசார் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கூட்டுச் சோதனையின்போது சுமார் 105 இலட்ச ரூபாய் மதிப்பிலான 14 கேரள கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பாக பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

களஞ்சியசாலைகள் இன்மையால் நெருக்கடி ரவிகரன் எம்.பியிடம் முறையீடு

முறிப்பில் நெற்கொள்வனவை ஆரம்பித்த நெல் சந்தைப்படுத்தல் சபை; களஞ்சியசாலைகள் இன்மையால் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக ரவிகரன் எம்.பியிடம் முறையீடு முல்லைத்தீவு – முறிப்பு பகுதியில் நெல் சந்தைப்படுத்தல் சபையினர் விவசாயிகளிடமிருந்து நெற்கொள்வனவை ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்ற வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நெல் சந்தைப்படுத்தல் சபையின் நெற்கொள்வனவுச் செயற்பாடுகளை நேரடியாகப்பார்வையிட்டு நிலமைகளைக் கேட்டறிந்துகொண்டார். இந்நிலையில் நெல் சந்தைப்படுத்தல் சபையினால் ஒரு விவசாயியிடமிருந்து 14வீத ஈரப்பதன் உடைய 2500கிலோக்கிரம் நெல் கொள்வனவுசெய்யப்பட்டுவருவதாக இதன்போது நெல் சந்தைப்படுத்தல் சபையின் உதவிப் பிராந்திய முகாமையாளர் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்துள்ளார். அத்தோடு முறிப்பிலுள்ள நெல் சந்தைப்படுத்தல் சபையின் நெற்களஞ்சியசாலையில் மாத்திரமே நெல்லை கொள்வனவுசெய்து சேகரித்து வைப்பதற்கான இடவசதிகள் இருப்பதாகவும், ஏனைய களஞ்சியசாலைகளில் இடவசதிகள் இன்மையால் நெற்கொள்வனவை மேற்கொள்வதில் நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

பழக்கடைகளை அகற்றுவது தொடர்பில் முற்றுகையிட்டு போராட்டம்

யாழ். மாநகர சபை உறுப்பினர் தர்சானந்தின் பழக்கடைகளை அகற்றுவது தொடர்பில் கொண்டுவரப்படும் பிரேரணையை எதிர்த்து மாநகர சபையை  முற்றுகையிட்டு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.யாழ். மத்திய பேருந்து நிலைய சூழலில் அமைந்துள்ள பழக்கடை வியாபாரிகள் இன்றையதினம் (13) குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். அத்துடன் மாநகர சபை உறுப்பினர் தர்சானந், ஒவ்வொரு மாதமும் குறளிவித்தை காட்டி தன்னை பிரபல்யப்படுத்த முயற்சிக்கும் சுயநினைவற்றவர் என்று யாழ். நகர பழக்கடை உரிமையாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.நீதிமன்றின் உத்தரவில் தமக்கு அன்றைய ஈ.பி.டி.யின் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜாவின் ஆட்சியில் வழங்கப்பட்ட கடைகளை காழ்புணர்ச்சியின் காரணமாகவே அகற்ற முயற்சிக்கின்றார் என்றும் தெரிவித்துள்ளனர். இங்கு கருத்து தெரிவித்த போராட்டக்காரர்கள், “நாம் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவே போராடுகின்றோம். ஆனால் எமது நிலையை மாநகரின் உறுப்பினர் தர்சானந்த் உணரவில்லை. அவர் சுயநினைவின்றியே இருப்பதாக தோன்றுகின்றது.

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

அதிகரித்துள்ள கசிப்பு உற்பத்தியை விரைந்து கட்டுப்படுத்துக; பொலிஸ் அத்தியட்சகரிடம் ரவிகரன் வலியுறுத்து

அதிகரித்துள்ள கசிப்பு உற்பத்தியை விரைந்து கட்டுப்படுத்துக; முல்லைத்தீவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் ரவிகரன் எம்.பி வலியுறுத்து முல்லைத்தீவட்டத்தில் புதுக்குடியிருப்பு மற்றும் முல்லைத்தீவு பொலிஸ்பிரிவிற்குட்பட்ட சிலகிராமங்களில் சட்டவிரோதமான கசிப்பு உற்பத்திச் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக மக்களால் தமக்கு முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே சட்டவிரோத கசிப்பு உற்பத்திச் செயற்பாடுகளை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் முல்லைத்தீவு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் இவ்வாறான கசிப்பு உற்பத்திச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த தம்மால் விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென முல்லைத்தீவு மாவட்ட்சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நாடாளுமன்ற உறுப்பினரிடம் உதன்போது உறுதியளித்தார். பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், முல்லைத்தீவு பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி ஆகியோருக்கிடையில் 11.02.2025நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போதே இவ்விடயம் தொடர்பில் பேசப்பட்டுள்ளது. இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

கொக்கிளாய் பாலத்தை அமைக்க வலியுறுத்திய ரவிகரன் எம்.பி;

கொக்கிளாய் பாலத்தை அமைக்க வலியுறுத்திய ரவிகரன் எம்.பி; மே மாதத்திற்குள் சாத்தியவள அறிக்கை கிடைத்தால் அடுத்தாண்டு நிதி ஒதுகீடு – அமைச்சர் விமல் ரத்நாயக்க பதில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை ஆகியபகுதிகளை இணைக்கும் இணைப்புப்பாலத்தை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அமைச்சர் விமல் ரத்நாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளார். கொக்கிளாய் பாலத்தை அமைப்பதற்கான சாத்தியவள அறிக்கையினை எதிர்வரும் மேமாதத்திற்குள் துறைசார்ந்தவர்கள் கையளித்தால் எதிர்வரும் 2027ஆம் ஆண்டிக்கான வரவுசெலவுத்திட்டத்தில் குறித்த கொக்கிளாய் – புல்மோட்டை இணைப்புப் பாலத்தை அமைப்பதற்கு தம்மால் நிதி ஒதுக்கீடு செய்யப்படுமென போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகரஅபிவிருத்தி அமைச்சர் விமல் ரத்நாயக்க பதிலளித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் 11.02.2026நேற்று இடம்பெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன்…

மேலும் படிக்க