இலங்கை செய்தி. செய்திகள் 

நாட்டில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதை தடை

நாட்டில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதை தடை செய்யும் வகையில் உத்தியோகபூர்வ முன்மொழிவொன்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையால் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சிடம் கையளித்து வைக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் நன்மைகளை தடுப்பது இதன் நோக்கம் அல்லவென்பதுடன், சிறுவர்களின் ஆரோக்கியமான முன்னேற்றத்துக்கு உகந்த பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே இம்முன்மொழிவு கையளிக்கப்பட்டமைக்கான நோக்கமென்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர். மேலும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவரும் ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதியுமான இனோகா ரணசிங்க இதற்கான சட்ட ஏற்பாடுகளை தயாரிப்பதுடன், அதற்கான கால அவகாசம் தொடர்பிலும் தெரிவித்தார். இந்தத் தடையை நடைமுறைப்படுத்த நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம், ஆரம்பகால சிறுவர் அபிவிருத்திக்கான தேசிய செயலகம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஆகியவற்றின் ஆலோசனை அவசியப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

திருகோணமலை பகுதியில் புத்தர் சிலை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 4 பிக்குகள் விளக்கமறியலில்

திருகோணமலை பகுதியில் புத்தர் சிலை வைக்கப்பட்டமை தொடர்பான சம்பவத்தின் அடிப்படையில், பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 4 பிக்குகள் மற்றும் மேலும் 6 சந்தேகநபர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. திருகோணமலையிலுள்ள விகாரையொன்றில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையொன்றை அகற்றுவதற்கு முற்பட்டதையடுத்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி அங்கு அமைதியற்ற சூழல் ஏற்பட்டிருந்தது. எனினும், குறித்த கட்டுமானங்கள் அனுமதி இன்றி முன்னெடுக்கப்பட்டதாகக் கூறி, கடற்கரை பாதுகாப்புத் திணைக்களம் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்தது. இந்த நிலையில், புத்தர் சிலையை அகற்ற முயற்சித்த போது, பிக்குகள் மற்றும் பிரதேச மக்களிடமிருந்து பொலிஸாருக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பான வழக்கு திருகோணமலை நீதவான் நீதிமன்றில் இன்று (02) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சம்பந்தப்பட்ட தரப்பினர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, குறித்த குழுவினரை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 09ஆம்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி செய்திகள் 

சுதந்திர தினம் கரிநாள்; பேரணிக்கு வலுசேர்க்க அழைப்பு –

சுதந்திர தினம் கரிநாள்; பேரணிக்கு வலுசேர்க்க அழைப்பு – யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் போராட்டம் சுதந்திர தினம் கரிநாள் என பிரகடனபடுத்தி வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பேரணிக்கு அனைத்து தரப்புக்களும் பங்கேற்று வலுச்சேர்க்க வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்தனர். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (01), இடம்பெற்ற ஊடக சந்திப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினர், முகாமைத்துவ மற்றும் வணிக பீட மாணவர் ஒன்றியத்தினர் இதற்கு அழைப்பு விடுத்தனர். மேலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகளும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு போராட்டத்திற்கு ஆதரவளிக்க அழைப்பு விடுத்தனர்.  

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

விளிம்பில் புவிசார் அரசியல்:உக்ரைன்–ரஷ்யா போர்:

விளிம்பில் புவிசார் அரசியல்: உக்ரைன்–ரஷ்யா போர்: அபாயகரமான தந்திரோபாய–இரசாயன–மூலோபாய கட்டத்திற்குள் நுழைகிறது ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ விரிவடைந்து வரும் உலகளாவிய மோதலுக்கு மத்தியில் ஒரு பலவீனமான இடைவேளை உக்ரைன்–ரஷ்யா மோதல், போர் தொடங்கியதிலிருந்து அதன் மிகவும் சிக்கலானதும் முரண்பாடானதும் ஆன கட்டங்களில் ஒன்றை எட்டியுள்ளது. அமெரிக்க அதிபர் Donald Trump-ன் வேண்டுகோளின் பேரில், Kyiv மீது ரஷ்ய தாக்குதல்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பது, பதற்றம் குறைவதுபோன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கியுள்ளது. ஆனால் இந்த தந்திரோபாய இடைவேளையின் அடியில் — இரசாயனப் போர் குற்றச்சாட்டுகள், ஐக்கிய நாடுகள் சபையில் சட்டப்போர், ஐரோப்பிய ஒன்றியத்தின் தகவல் தடைகள், உளவுத்துறை நடவடிக்கைகள், சீன தொழில்துறை தொடர்புகளைக் கொண்டிருக்கக்கூடிய அதிவேக ஏவுகணை அச்சுறுத்தல்கள் என ஒரு பன்முக மோதல் வேகமாக விரிவடைந்து வருகிறது. மேற்பரப்பில் அமைதியாகத் தோன்றுவது, உண்மையில் ஒரு பெரும் மூலோபாயப் புயலுக்கு முன்பான அமைதியாக…

மேலும் படிக்க
உலக செய்திகள் செய்திகள் 

காசாவில் போர்நிறுத்ததை மீறி இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்

காசாவில் கடந்த ஒக்டோபர் 10 இல் ஏற்பட்ட போர்நிறுத்ததை மீறி இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் இன்று (31) காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 31 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 6 இற்கும் மேற்பட்டோர் குழந்தைகள் என்று தெரியவந்துள்ளது.காசா நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு, பொலிஸ் நிலையம், கான் யூனிஸில் உள்ள ஒரு அகதிகள் கூடார முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. குறிப்பாக கான் யூனிஸ் அகதிகள் முகாம் மீதான தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டனர். காசா நகர் குடியிருப்புத் தாக்குதலில் 3 குழந்தைகள், அவர்களது அத்தை மற்றும் பாட்டி என 5 பேர் பலியாயினர்.காசா நகரில் உள்ள பொலிஸ் நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

பெந்தோட்டை பகுதியில் போதைப் பொருளுடன் இரு சந்தேகநபர்கள் கைது

அளுத்கம, பெந்தோட்டை பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (31) அதிகாலை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையில் 5.105 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பெந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 40 மற்றும் 45 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதன் தெரு மதிப்பு ரூ. 7 கோடிக்கும் அதிகமென தெரிவிக்கப்படுகின்றது.மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

கட்டளையை மீறிச் சென்ற  பாரவூர்தி மீது காவல்துறை யினர் துப்பாக்கிப் பிரயோகம்

கிளிநொச்சியில் காவல்துறையின் கட்டளையை மீறிச் சென்ற  பாரவூர்தி ஒன்றின் மீது காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இன்று (01) அதிகாலை கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச் சென்ற பாரவூர்தியின் சில்லுகள் மீதே துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. துப்பாக்கிப் பிரயோகத்தின் பின்னர் சந்தேகநபரான பாரவூர்தியின் சாரதி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

யாழ் தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டம்.

யாழ்ப்பாணம் – தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டம் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது. குறித்த விகாரைக்கு எதிராக ஒவ்வொரு பௌர்ணமி தினத்திற்கு முந்தைய நாள் மாலையும் பௌர்ணமி தினத்தில் காலையில் இருந்து மாலை வரையும் போராட்டம் முன்னெடுக்கப்படுவது வழமை.அந்தவகையில் இன்று (01) காலை கொட்டும் மழைக்கு மத்தியிலும் தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிக்கு அருகில் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. இந்தப் போராட்டத்தில் காணி உரிமையாளர்கள், அரசியல் கட்சி உறுப்பினர்கள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ள நிலையில் ஏராளமான காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர் இதேவேளை  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தையிட்டி விகாரை தொடர்பில் உண்மைக்கு அப்பாற்பட்ட விடயங்களை யாழ்ப்பாணத்தில் வைத்து கூறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்..  

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

இலங்கையின் சுதந்திர தின நாளில் வடக்கு கிழக்கு தழுவிய மாபெரும் போராட்டம் :

எதிர்வரும் 04ம் திகதி இலங்கையின் சுதந்திர தினமாகவும் தமிழருக்கு கறுப்பு தினமாகவும் பிரகடனப்படுத்தப்படுத்தி வடக்கு கிழக்கு தழுவிய மாபெரும் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.வவுனியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் த.யதுசன் இதனைக் குறிப்பிட்டார்.தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், குறிப்பாக இப்போராட்டமானது வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்படவுள்ளது. அந்தவகையில் வடக்கு மாகாணத்திலே கிளிநொச்சி மாவட்டத்திலும், கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு ஆகிய இரு மாவட்டங்களை மையப்படுத்தி குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்படவுள்ளது. மேலும் இப் போராட்டத்தினை வலுவடையச் செய்வதற்காக பல்வேறுபட்ட அமைப்புக்களுடன் சந்திப்புக்களையும், உரையாடல்களையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றோம். அந்தவகையில் கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும் தற்போது வவுனியாவிலும் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே இப்போராட்டமானது சிறப்பாக நடைபெறுவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.” என தெரிவித்தார்.…

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

ஈரான் வரைந்துள்ள சிவப்புக் கோடு.ஈழத்து நிலவன்

ஈரான் வரைந்துள்ள சிவப்புக் கோடு ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ ✦. மேற்கு ஆசியாவில் தற்காப்பு நிலையிலிருந்து உடனடித் தாக்குதல் நிலைக்கு மாற்றம் மத்திய கிழக்கு பகுதி முன்னெப்போதையும் விட மிக அபாயகரமான கட்டத்தை எட்டியுள்ளது. ஈரான் தனது போர் விதிமுறைகளில் (Rules of Engagement) அடிப்படையான மாற்றத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அமெரிக்கா அல்லது இஸ்ரேல் மேற்கொள்ளும் எந்தவொரு தாக்குதலும்—அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும்—உடனடிப் பதிலடித் தாக்குதலை உருவாக்கும் என தெஹ்ரான் கடுமையாக எச்சரித்துள்ளது. அடையாளத் தாக்குதல்கள், தாமதமான பதிலடிகள், சர்வதேச இராஜதந்திரக் கணக்கீடுகள் ஆகியவற்றின் காலம் முடிவடைந்துவிட்டதாக ஈரான் இராணுவத் தலைமை வலியுறுத்துகிறது. இராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் முகமது அக்ரமினியா இதனைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்: “இது இரண்டு மணிநேரப் போர் அல்ல.” இனிமேல், சிறிய ஆக்கிரமிப்பைக்கூட ஒரு பிராந்தியப் போரின் தொடக்கமாகவே தெஹ்ரான் கருதும். ✦. ஈரானின்…

மேலும் படிக்க