சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

அபிவிருத்திக் குழுக் கூட்டங்களை முற்றாக புறக்கணிக்க நல்லூர் பிரதேச சபை ஏகமனதாக தீர்மானம்

நல்லூர் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களை முற்றாக புறக்கணிக்க நல்லூர் பிரதேச சபை ஏகமனதாக தீர்மானம் நல்லூர் பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டங்களில் அனைத்து கௌரவ உறுப்பினர்களையும் பங்கெடுப்பதற்காக அழைப்பினை விடுக்காது இருப்பின் அக் கூட்டங்களினை முற்றாக புறக்கணிப்பது என்று இன்று நடைபற்ற பிரதேச சபைக் கூட்டத்தில் தவிசாளர் ம. மயூரன் அவர்கள் கொண்டு வந்த தீர்மானத்தினை சபை ஏகமனதாக ஏற்றுக்கொண்டது குறித்த தீர்மானம் தொடர்பாக தவிசாளர் தன்னுடைய உரையில் நல்லூர் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தவிசாளர், உப தவிசாளர் ஆகியோருடன் வேறு கட்சிகளின் இரு உறுப்பினர் மட்டுமே பங்குபற்ற முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சி சார்பில் பிரதிநிதிகளை அழைத்து பிரச்சனைகளைக் கேட்பதற்கு பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம் ஒன்றும் கட்சிகளின் செயற்பாடுகள் தொடர்பான கூட்டம் அல்ல. அது மக்களின் குறை நிறைகளைத் தீர்க்கின்ற, பிரதேசங்களினை…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

டினோஜாவின் சந்தேகத்தி ற்கிடமான மரணம்; நீதிகோரி வைத்திய சாலையை முற்றுகையிட்ட மக்கள்

சிறுமி டினோஜாவின் சந்தேகத்திற்கிடமான மரணம்; நீதிகோரி வைத்தியசாலையை முற்றுகையிட்ட மக்கள் முல்லைத்தீவு – சிலாவத்தை பகுதியைச்சேர்ந்த குகநேசன் டினோஜா என்னும் சிறுமி அண்மையில் சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்திருந்தார். இந்நிலையில் இவ்வாறு சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதிகோரி 29.12.2025இன்று முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை நுழைவாயிலை முற்றுகையிட்டு பெருந்திரளான மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்தவகையில் சிறுமி டினோஜாவின் மரணத்திற்கு நீதியைப் பெற்றுத்தருமாறு வலியுறுத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள், சிறுமியின் மரணத்திற்கு நீதிகோரும்வகையிலான வாசகங்கள் அடங்கிய பதாதைகளைத் தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது வைத்தியசாலை பணிப்பாளரை குறித்த இடத்திற்கு வரவளைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் சிறுமியின் மரணம் தொடர்பில் கேள்வி எழுப்பியதுடன், குறித்த மரணத்திற்கு நீதிகிடைக்கவேண்டுமெனவும் வலியுறுத்தியிருந்தனர். தொடர்ந்து குறித்த சிறுமியின் சந்தேகத்திற்கிடமான மரணத்திற்கு நீதியைப் பெற்றுத்தருமாறும் இதன்போது மக்களால் மகஜர்களும் கைளிக்கப்பட்டன. அந்தவகையில்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

மத்திய சுகாதார அமைச்சு விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளது

சிலாவத்தைப் பிரதேசத்தில் உணவு ஒவ்வாமை காரணமாக 12 வயதுச் சிறுமி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சு விசாரணைக்கு ஒத்துழைப்பு முல்லைத்தீவு மாவட்டத்தின் சிலாவத்தைப் பிரதேசத்தில் உணவு ஒவ்வாமை காரணமாக 12 வயதுச் சிறுமி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சு விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. இதற்கமைய மத்திய சுகாதார அமைச்சின் விசேட விசாரணைக் குழு முல்லைத்தீவுக்கு சென்றதாகவும் இது தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தனக்கு அறிவித்ததாகவும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் சமன் பத்திரன தெரிவித்தார். 6 விசேட நிபுணர்களைக் கொண்ட அறுவர் அடங்கிய குழு நேற்றய தினம் முல்லைதீவு மாவட்ட பொது மருத்துவமனைக்கு சென்று சிறுமியின் மரணம் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.இவ்வாறிருக்க மாகாணத்துக்குள் ஆரம்பிக்கப்பட்ட நிபுணர் குழுவின் விசாரணை அறிக்கை எதிர்வரும் ஒரு வாரத்தில் கிடைக்குமென்று…

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

72 மணித்தியால தடுப்புக் காவலில் கைதான டக்ளஸ் தேவானந்தா

72 மணித்தியால தடுப்புக் காவலில் கைதான டக்ளஸ் தேவானந்தாஉத்தியோகபூர்வ கைத்துப்பாக்கி காணாமல் போனமை குறித்து விசாரிக்க அனுமதி முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை 72 மணித்தியாலங்கள் (3 நாட்கள்) தடுத்து வைத்து விசாரிக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு (CID) அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சந்தேகநபரை இன்று (27) கம்பஹா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதைதைத் தொடர்ந்து, விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க நீதவான் குறித்த அனுமதியை வழங்கியுள்ளார். முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு வழங்கப்பட்ட துப்பாக்கி காணாமல் போனமை தொடர்பாக இடம்பெற்று வரும் விசாரணைக்கமைய நேற்று (26) அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

டக்ளஸ் தேவானந்தா CID இனால் அதிரடி கைது!

டக்ளஸ் தேவானந்தா CID இனால் அதிரடி கைது!- கைத்துப்பாக்கி விவகாரம் தொடர்பில் விசாரணை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார். அத்திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று (26) கைது செய்யப்பட்டதாக,  காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இராணுவத்தினால் அவருக்குத் தற்காப்புக்காகச் சட்டபூர்வமாக வழங்கப்பட்டிருந்த பிஸ்டல் ரக கைத் துப்பாக்கி ஒன்று, 2019 ஆம் ஆண்டு வெலிவேரிய பகுதியில் உள்ள ஒரு பாலத்திற்கு அருகிலுள்ள பற்றைக்காட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இந்தத் துப்பாக்கி மீட்கப்பட்டிருந்த நிலையில், அது தொடர்பான மேலதிக விசாரணைகளின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக  காவல்துறை ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. குறித்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மாகந்துரே…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

ஆழிப்பேரலை 21ஆம்ஆண்டு நினைவேந்தல்; கண்ணீரில் மிதந்தது கள்ளப்பாடு

ஆழிப்பேரலை 21ஆம்ஆண்டு நினைவேந்தல்; கண்ணீரில் மிதந்தது கள்ளப்பாடு கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலை அனர்த்தத்தினால் முல்லைத்தீவு – கள்ளப்பாட்டைச் சேர்ந்த பொருந்திரளான மக்கள் உயிரிழந்தனர். இந் நிலையில் இவ்வாறு உயிரிழந்தவர்களின் 21ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 26.12.2025இன்று கள்ளப்படு உதயம் விளையாட்டுக்கழக மைதானத்தில் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் ஈகைச்சுடர் மற்றும் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகின. தொடர்ந்து ஆழிப்பேரலையின்போது உயிரிழந்த உறவுகளின் திருஉருவப்படத்திற்கு மலர்தூவப்பட்டு, சுடரேற்றப்பட்டதுடன், ஆழிப்பேரலையினால் காவுகொள்ளப்பட்டவர்களின் உறவினர்கள் கதறி அழுது, கண்ணீர் சொரிந்து தமது அஞ்சலிகளை உணர்வெழுச்சியுடன் மேற்கொண்டனர். மேலும் இந்த நினைவேந்தல் நிகழ்வில் வன்னிமாவட்டநாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் மகாதேவா குணசிங்கராசா கரைதுறைப்பற்று பிரதேசசபை செயலாளர் திருமதி.இராஜஜோகினி ஜெயக்குமார், ஒட்டுசுட்டான் பிரதேச காணி உத்தியோகத்தர் சோதிநாதன் சேந்தன், கிராம உத்தியோகத்தர்கள்,…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

முன்னாள் போராளி வைதேகி நேற்றைய தினம் 23.12.2025 சுகயீனம் காரணமாக ஆஸ்திரேலியாவில் சாவடைந்துள்ளார்

தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் மகளிர் படையணியில் தேசவிடுதலைக்காக பல களங்கள் பல்துறை பணிகளிலும் இறுதிவரை பயணித்த மகளிர் போராளி வைதேகி 23.12.2025 இன்று சுகயீனம் காரணமாக ஆஸ்திரேலியாவில் சாவடைந்துள்ளார்.அவருக்கு எமது இறுதிவணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

முல்லை மாவட்டத்தில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள விசேட கவனம் அமைச்சர் ஆனந்த விஜேபால

முல்லைத்தீவு மாவட்டத்தில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் நிவாரணம் வழங்கவும் அரசாங்கத்தால் விசேட கவனம் செலுத்தப்பட்டு நிதி ஒதுக்கப்படுமென்று அமைச்சர் ஆனந்த விஜேபால வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் நிவாரணம் வழங்கவும் அரசாங்கத்தால் விசேட கவனம் செலுத்தப்பட்டு நிதி ஒதுக்கப்படுமென்று அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் அனர்த்த நிவாரணப் பணிகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். வெள்ள அனர்த்த நிலைமை தொடர்பாக ஆராயும் சிறப்பு முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று முன்தினம் அம்மாவட்டச் செயலகத்தின் பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால தலைமையில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை மற்றும் அதனால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பாகவும் நிவாரணப்பணிகள் தொடர்பாகவும் குளங்கள், வீதிகள் பாலங்களுக்கு ஏற்பட்டுள்ள…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

தமிழ் தே. ம. மு. கோரிக்கை க்கு தமிழ்நாடு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் இணைந்து விடுத்துள்ள கூட்டறிக்கை

ஈழத் தமிழினப் படுகொலைக்கான சர்வதேச விசாரணை கோரிக்கையை மூடி மறைக்கவும், சுதந்திரத் தமிழீழக் கோரிக்கையை நீர்த்துப் போகச் செய்யவும் சிங்கள அரசின் மறைமுக நடவடிக்கைதான் தற்போதைய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கோரிக்கை! மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, திராவிட தமிழர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் கோவை இராமகிருஷ்ணன், மே-17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவர் தியாகு, தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் மணியரசன், விடுதலை தமிழ்ப் புலிகள் குடந்தை அரசன், தற்சார்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ஈரோடு வே.பொன்னையன், இயக்குநர் புகழேந்தி தங்கராஜ்,…

மேலும் படிக்க