சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

எந்தவொரு பயங்கரவாத் தடுப்புச் சட்டமும் தேவையில்லை சாவகச்சேரி நகரசபையில் தீர்மானம்

சனநாயகத்திற்கு விரோதமாகவும், அடிப்படை மனித உரிமைகளைக் கேள்விக்குள்ளாக்கும் வகையிலும் தற்பொழுதும் வலுவிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கோர முகத்தினை நேரடியாக அனுபவித்த மக்கள் என்ற அடிப்படையில்; முன்மொழிப்பட்டுள்ள பயங்கரவாத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைபினை மீளப் பெறவும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை நீக்கவும், எந்தவொரு பயங்கரவாத் தடுப்புச் சட்டமும் தேவையில்லை என சாவகச்சேரி நகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சாவகச்சேரி நகராட்சி மன்றின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் தவிசாளர் வ.ஶ்ரீபிரகாஸ் தலைமையில் இடம்பெற்றது.இதன்போது உபதவிசாளர் ஞா.கிஷோர் புதிய பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பான பிரேரணையினை சபையில் முன்வைத்து உரையாற்றினார்.இதன்போது தேசிய மக்கள் சக்தியின்  உறுப்பினர்கள் சபை நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படாத குறித்த விடயத்தினை சபையில் பிரேரிக்க முடியாது என தமது எதிர்ப்பை வெளியிட்டனர். எனினும் தேசிய மக்கள் சக்தியின் 3 உறுப்பினர்கள் தவிர்ந்த ஏனைய உறுப்பினர்களின் ஆதரவோடு பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தமிழ்நாடு இந்தியா செய்திகள் 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இரா.நல்லகண்ணு காலமானார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இரா.நல்லகண்ணு காலமானார் அவருக்கு வயது 101. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில், ” நல்லகண்ணு உடல் நலக்குறைவு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 24 தினங்களாக சிகிச்சையின் போது அவரது உடல் நிலையில் ஏற்றதாழ்வுகள் இருந்து வந்தன. ” என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்,” பல்துறை மருத்துவக்குழு தீவிர சிகிச்சையையும், அதிதீவிர கண்காணிப்பையும் தொடந்து வந்தனர். இன்று அதிகாலை முதல் மருந்துகளை ஏற்கும் தன்மை படிப்படியாக குறைந்து, அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்தது.” என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ‘அதிதீவிர சிகிச்சையில் இருந்தபோதும் முக்கிய உடலுறுப்புகள் அனைத்தும் செயல் இழந்ததால், நல்லக்கண்ணு 25. 02. 2026 அன்று பிற்பகல் 1. 55 மணியளவில் காலமானார்.’ என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

இராணுவத்தினர் அடாவடித் தனமாக தமது நெல்லை சந்தைப் படுத்துகி ன்றனர்;- ரவிகரன் எம்.பி சீற்றம்.

விவசாயிகள் நெல்லை சந்தைப்படுத்துவதில் நெருக்கடிக்குளாகும்போது இராணுவத்தினர் அடாவடித்தனமாக தமது நெல்லை சந்தைப்படுத்துகின்றனர்; இராணுவத்தினர் உடனடியாக வெளியேறவேண்டும் – ரவிகரன் எம்.பி சீற்றம். விவசாயிகள் நெல்சந்தைப்படுத்தல் சபையினூடாக தமது நெல்லை சந்தைப்படுத்துவதற்கு பாரிய நெருக்கடிளுக்கு முகங்கொடுத்துவருவதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், தமிழ் மக்களிடமிருந்து ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளில் உற்பத்தி செய்யப்பட்ட தமது நெல்லினை இராணுவத்தினர் அடாவடியாக நெல்சந்தைப்படுத்தல் சபையூடாக சந்தைப்படுத்தல் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு, நீராவிப்பிட்டிப் பகுதியில் அமைந்துள்ள நெல்சந்தைப்படுத்தல் சபைக்குரிய நெற்களஞ்சியசாலையில் 24.02.2026 அன்று விவசாயிகள் தமது நெல்லினை சந்தைப்படுத்துவதற்காக காத்திருந்தபோது அடாவடியாக அங்கு நுழைந்த இராணுவத்தினர் இவ்வாறு தமது 70மூட்டைகளுக்கும் மேற்பட்ட நெல்லினை சந்தைப்படுத்தல் செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். இந்நிலையில் இராணுவத்தின் இத்தகைய அடாவடிச் செயற்பாட்டை வன்மையாக கண்டித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர், முல்லைத்தீவு உட்பட வடக்கு கிழக்கெங்குமுள்ள இராணுவத்தினர் உடனடியாக வெளியேறவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். இவ்விடயம்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

யாழ்.ஊடக அமையத்தின் ஒழுங்கமைப்பில் ‘கிவுல் ஓயா அபாயத்தின் குறியீடா?’ என்ற தலைப்பிலான திறந்த கலந்துரையாடல்

யாழ்.ஊடக அமையத்தின் ஒழுங்கமைப்பில் ‘கிவுல் ஓயா அபாயத்தின் குறியீடா?’ என்ற தலைப்பிலான திறந்த கலந்துரையாடல் யாழ்.ஊடக அமையத்தின் மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்றது. ஊடக அமையத்தின் ஸ்தாபகர் இ.தயாபரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், நாடாளுமன்ற உ றுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், து.ரவிகரன், ப.சத்தியலிங்கம் ஆகியோரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன், தவத்திரு வேலன் சுவாமிகள், சட்டத்தரணி ஐங்கரன் குகதாசன், மற்றும் யாழ்.பல்கலைகழக கலைப்பீட பீடாதிபதி எஸ்.ரகுராம், யாழ்.பல்கலைழகமாணவர் ஒன்றிய பிரதிநிதிகள், எல்லைக் கிராமங்களை சேர்ந்த மக்கள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமான மேற்படி கலந்துரையாடலில், கிவுல் ஓயா திட்டத்தின் ஊடாக தமிழ் மக்களின் நிலங்கள் அபகரிக்கப்படும் விவகாரம் மற்றும் சுற்றுசூழல் பாதிப்புகள், யானை – மனித மோதல், போன்ற பாதகமான விளைவுகள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன்,…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி புலச் செய்திகள் 

ஒக்ஸ்போர்ட் யூனியனில் நாமல் ராஜபக்ஷ உரை இரத்து இனப்படுகொலையே காரணம். தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

தமிழர்கள் மீது ராஜபக்ஷக்கள் நிகழ்த்திய இனப்படுகொலை காரணமாகவே, ஒக்ஸ்போர்ட் யூனியனில் நாமல் ராஜபக்ஷ நிகழ்த்தவிருந்த உரை இரத்துச் செய்யப்பட்டுள்ளது என்று பிரிட்டன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.இது தொடர்பில் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ளதாவது:- “ஒக்ஸ்போர்ட் யூனியன் ஏற்பாடு செய்த உரை அல்லது உரையாடல் நிகழ்வுகள் எந்தக் காரணத்துக்காகவும் இரத்துச் செய்யப்படுவதில்லை. அவ்வாறு இரத்துச் செய்வதை கருத்துச் சுதந்திரம் மீதான தாக்குதலாகவும், தன் புகழுக்கான இழுக்காகவும் அந்த நிறுவனம் கருதுகின்றது. இவ்வாறான நிலையில், நாமல் ராஜபக்ஷவின் ஒக்ஸ்போர்ட் உரை இரத்துச் செய்யப்பட்டமை அரிதான மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவாகும். இதற்கு, நாமலின் குடும்பத்தால் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலையே காரணம். நாமல் ராஜபக்ஷவின் குடும்பம் தமிழர்களுக்கு எதிராக இழைத்த போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் சொல்லொண்ணாத் துயரங்கள் உலகறிந்தவை. அந்தப் பாதகமான…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

பல்கலைக்கழகத்தில் கறுப்புக் கொடிற்ற ப்பட்ட சம்பவம் மாணவர்கள் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை

இலங்கையின் சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் ஏற்றப்பட்டிருந்த தேசியக் கொடி இறக்கப்பட்டு, அதற்குப் பதிலாக கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக 30 மாணவர்கள் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது எனத் தெரியவருகின்றது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் வட்டாரங்கள் தெரிவிக்கும் தகவல்களின்படி, இது தொடர்பான இறுதி முடிவு ஆணைக்குழுவின் அடுத்த கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்துமாறு இம்மாதம் 11ஆம் திகதி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்தைக் கோரியிருந்தது.இதனைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்தின் இன நல்லிணக்கப் பிரிவுக்குப் பொறுப்பான பேராசிரியர், மாணவர் ஒழுக்காற்று அதிகாரி மற்றும் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரைக் கொண்ட குழுவொன்று விசாரணைகளை முன்னெடுத்தது.குறித்த விசாரணை அறிக்கையானது கடந்த வாரம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.தேசிய புலனாய்வு முகவரியினால் வழங்கப்பட்ட வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்பட ஆதாரங்களின்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

கொக்குத்தொடு வாயில் மக்களின் காணிகளை ஊடறு த்து யானைவேலி மற்றும் உப்பளம் அமைக்கும் செயற்பாடு;

கொக்குத்தொடுவாயில் தமிழ் மக்களின் காணிகளை ஊடறுத்து யானைவேலி மற்றும் உப்பளம் அமைக்கும் செயற்பாடு; முல்லை மாவட்டசெயலரின் கவனத்திற்கு கொண்டுவந்த – ரவிகரன் எம்.பி முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் கமநல சேவைநிலயப்பிரிவிற்குட்பட்ட தமிழ் மக்களின் நெற்செய்கைக் காணிகளை ஊடறுத்து மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினால் யானைவேலி அமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருவதுடன், கோட்டைக்கேணி பகுதியில் தமிழ் மக்களின் பூர்வீக விவசாய நிலங்களை ஆக்கிரமித்து உப்பளம் ஒன்றை அமைப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக கொக்குத்தொடுவாய் கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகளால் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிடம் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொக்குத்தொடுவாய் கமக்கார அமைப்பு பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட முறையீடுகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் 23.02.2026இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலாளருக்குத் தெரியப்படுத்தியதுடன், குறித்த விடயங்கள் தொடர்பில் கவனஞ்செலுதனதுமாறும் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு மாவட்டத்தில், கொக்குத்தொடுவாய் கமநலசேவைநிலையப் பிரிவிலுள்ள கூமாவடிக்கண்டல்,…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. சிறப்புச் செய்தி 

ஒக்ஸ்போர்ட் யூனியனும் நாமல் ராஜபக்ஷவின் உரையை இரத்து செய்துள்ளது.

இலண்டன் கேம்பிரிட்ஜ் யூனியனைத் தொடர்ந்து, ஒக்ஸ்போர்ட் யூனியனும் (Oxford Union) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் உரையை இரத்து செய்துள்ளது. நிகழ்வு நடைபெற 24 மணித்தியாலங்களே இருந்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியத் தமிழ் அமைப்புகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர் அமைப்புகள் ஒன்றிணைந்து மேற்கொண்ட தொடர் போராட்டங்கள் மற்றும் எதிர்ப்புப் பிரச்சாரங்களே இந்த இரத்து நடவடிக்கைக்கு முக்கிய காரணமாகும். போர்க்கால மீறல்கள், ராஜபக்ஷ குடும்பத்தின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் மனித உரிமை மீறல்களைச் சுட்டிக்காட்டி இந்த எதிர்ப்புக்கள் முன்னெடுக்கப்பட்டன.உரை நிகழ்வுகள் இரத்து செய்யப்பட்ட போதிலும், நாமல் ராஜபக்ஷ தற்போது பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.இலண்டனில் உள்ள சிங்கள பௌத்த அமைப்புகள் மற்றும் பௌத்த துறவிகளை அவர் சந்தித்து வரும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.  

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க கோரியும் தாயகம் எங்கும் கையெழுத்து சேகரிக்கின்ற பணி

நாட்டிலிருந்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க கோரியும் புதிதாக கொண்டுவரப்பட இருக்கின்ற பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாத்தல் எனும்  புதிய சட்டத்தையும் நீக்க கோரியும் வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் கையெழுத்து சேகரிக்கின்ற பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இன்றைய தினம் (22) அம்பாறை மாவட்டம் திருக்கோவில் தம்பிலுவில் மத்திய சந்தைக்கு முன்பாகவும் கையெழுத்து சேகரிக்கும் பணி ஒன்று   முன்னெடுக்கப்பட்டது.இக்கையெழுத்து சேகரிக்கும் பணியானது வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட வழிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணி, மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீபன், சமூக செயற்பாட்டாளர் துரையப்பா காந்தன்,ரெலோவின் மாவட்ட பொறுப்பாளர் ,தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள், மதகுருமார்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்டோரும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்து உறுப்பினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொது…

மேலும் படிக்க