ஜனாதிபதி மின்சார சபையின் பொறியி யலாளர் தொழிற் சங்கப் பிரதிநிதி களுக்கிடையி லான கலந்துரையாடல்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கிடையிலான கலந்துரையாடல் இன்று (12) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு செயல்முறை குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. நுகர்வோருக்கு நியாயமான விலையில், வினைத்திறனான மற்றும் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்துவதும், புதிய நிறுவனங்களின் உரிமையை அரசாங்கத்தின் கீழ் பேணுவதன் மூலம் ஒரு நாடாக வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுமே இந்த மறுசீரமைப்பின் நோக்கம் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இலங்கை மின்சார சபையின் ஊழியர்களுக்குரிய அனைத்து உரிமைகளும் இந்தச் செயல்முறையின் போது புதிய நிறுவனங்களுக்குள்ளும் உறுதிப்படுத்தப்படும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, மின்சார சபையாக இருக்கும் போதே தீர்க்கப்பட வேண்டிய, ஆனால் இதுவரை தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சினைகள் குறித்தும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் விரிவாகக் கலந்துரையாடினார். இது ஒரு…
மேலும் படிக்க