அண்மை செய்தி சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

துப்பாக்கிச் சூட்டுக் குப் பலியான சிறுவனின் கொலை க்கு நீதி வேண்டி போராட்டம்

கடந்த பெப்ரவரி 19 ஆம் திகதியன்று அல்லைப்பிட்டி பகுதியில் காவல்துறையினரின் துப்பாக்கிச்  சூட்டுக்குப் பலியான அல்பினோ அருள் ஃபயாஸ் சிறுவனின் கொலைக்கு நீதி வேண்டி இன்று ஊர்காவற்றுறை காவல்துறை நிலையம் முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மனித உரிமை ஆர்வலர் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டத்தில், சிறுவனின் உறவுகள் காவல்துறைனருக்கு எதிரான கோசங்கள் தாங்கிய பதாகைகளுடன் கலந்துகொண்டனர். குறித்த போராட்டம் ஊர்காவற்றுறை நீதிமன்றின் முன்பாக காலை 11 மணிக்கு ஆரம்பமானது.போராட்டம் ஆரம்பமான சில நிமிடங்களில், நீதிமன்ற காவல்துறையினரால் நீதுமன்றுக்கு முன்பாக போராட்டம் நடத்த முடியாது எனக் கூறி நீதிமன்ற வளாகத்தை கடந்து போராட்டத்தை முன்னெடுக்குமாறு வலியுறுத்தப்பட்டது. காவல்துறையினரின் கோரிக்கையை ஏற்ற போராட்டக்காரர்கள், ஊர்காவற்றுறை காவல்துறை நிலையம் முன்பாக ஒன்றுகூடி போராட்டத்தை முன்னெடுத்தனர். இதன்போது,  காவல்துறையினரின் செயலைக் கண்டித்து பல்வேறு சுலோங்கள் தாங்கி கோசமிட்டு தமது எதிர்ப்பை காட்டிய…

மேலும் படிக்க
அண்மை செய்தி சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

ஈரானின் தற் போதைய போக்கு ஈழத்தமிழர் மீதான இனப்படு கொலை யினை மீளவும் நினைவு படுத்துகிறது: சிறீதரன்

ஈரானின் தற்போதைய போக்கு ஈழத்தமிழர் மீதான இனப்படுகொலையினை மீளவும் நினைவுபடுத்துகிறது: சிறீதரன் எம்.பி தெரிவிப்பு……! ​”சர்வதேச போர் விதிகளை மீறி ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசு நிகழ்த்திய அதே கொடூரமான கொத்துக்குண்டுத் தாக்குதல்களை, இன்று ஈரான் இஸ்ரேல் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளது” எனப் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கவலை வெளியிட்டுள்ளார். ​”சுதந்திரப்பறவைகள்” மகளிர் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற பன்னாட்டு மகளிர் தின நிகழ்வில், முதன்மை அழைப்பாளராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ​அவர் மேலும் தெரிவிக்கையில்: ​”ஈழப் போராட்ட வரலாற்றில் பெண்கள் வெறும் சாட்சிகளாக மட்டுமல்ல, களத்தில் நின்ற போராளிகளாகவும், குடும்பத்தைத் தாங்கும் தூண்களாகவும் விளங்கியவர்கள். உலகமே வியந்து பார்த்த ஒரு போரியல் வாழ்வை வாழ்ந்தவர்கள் ஈழத்தமிழ்ப் பெண்கள். இன்றும் காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளுக்காக எட்டு ஆண்டுகள் கடந்தும் தாய்மார்கள் வீதியில் நின்று…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் வன்முறை கும்பலால் வீடு, தீக்கிரை.

வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் நேற்று இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில், வீடொன்றின் மீது பெற்ரோல் ஊற்றித் தீவைக்கப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழல் நிலவியது. பூந்தோட்டம் பாடசாலைக்கு அருகிலுள்ள வீட்டில் வசித்து வருபவர்களுக்கும், வெளியில் இருந்து வந்த வன்முறைக் கும்பல் ஒன்றுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு பாரிய மோதலாக மாறியுள்ளது. வாள்கள் மற்றும் பொல்லுகளுடன் வந்த அந்தக் கும்பல், இளைஞர்களைத் தாக்கும் நோக்குடன் வீட்டிற்குள் நுழைய முயன்றுள்ளது. இதையடுத்து, அந்த இளைஞர்கள் வீட்டிற்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டனர். ஆத்திரமடைந்த வன்முறைக் கும்பல், வீட்டின் ஜன்னல்களை உடைத்துச் சேதப்படுத்தியதுடன், கதவின் வழியாகப் பெற்ரோல் ஊற்றித் தீயிட்டுள்ளனர். வீட்டிற்குள் பெண்கள் மற்றும் சிறுவர்கள் இருந்த நிலையில், அவர்கள் கதறி அழுது தங்களைக் காப்பாற்றும்படி கெஞ்சியுள்ளனர். இருப்பினும், வன்முறையாளர்கள் அதைப் பொருட்படுத்தாமல் தீவைத்துக் கொழுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். வீட்டிற்குள் தீ பரவத் தொடங்கிய…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

இராணுவத்தி னரிடம் கையளித்த உறவுகள் எங்கே? முல்லையில் மாபெரும் கவனயீர் ப்புப் போராட்டம்!

சர்வதேச மகளிர் தினம் எமக்குத் துக்க தினம்; இராணுவத்தினரிடம் கையளித்த உறவுகள் எங்கே? முல்லையில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்! இராணுவத்திடம் கையளித்த தமது உறவுகள் எங்கே? இவர்களுக்கு என்ன நடந்தது இந்த விவகாரத்துக்கு சர்வதேச நீதி விசாரணையே வேண்டும் எனக் கோரி வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரால் இறுதி யுத்தத்தின் சாட்சியாக காணப்படும் வட்டுவாகல் பாலத்தில் நேற்று (8) மாபெரும் கவனயீர்ப்பு.போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டமானது ஒன்பது ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் சர்வதேச மகளிர் தினமான நேற்று மகளிர் தினம் எமக்கு துக்க தினம் என தெரிவித்து தமக்கு சர்வதேச விசாரணையே தீர்வு எனக் கோரி போராட்டத்தை முன்னெடுத்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது உறவுகளை இராணுவத்திடம் ஒப்படைத்ததுடன், தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என இதுவரை இலங்கை அரசாங்கத்தால் எந்த தகவலும் வெளியிடவில்லை எனவும் இனப்படுகொலையாளிகளை…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

அத்துமீறிய உப்பளம் அமைக்கும் முயற்சி; மகாவலி பணிப்பாளர் நாயகத்திற்கு – ரவிகரன் எம்.பி கடிதம்

கொக்குத்தொடுவாயில் தமிழர் காணிகளில் சிங்கள வர்த்தகரின் அத்துமீறிய உப்பளம் அமைக்கும்முயற்சி; சட்டவிரோதமான அத்துமீறல்களை உடனடியாக தடுக்குமாறு மகாவலி பணிப்பாளர் நாயகத்திற்கு – ரவிகரன் எம்.பி கடிதம். முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவில் குஞ்சுக்கால்வெளி பகுதியிலுள்ள தமிழ்மக்களின் பூர்வீக தனியார்காணிகளை, மகாவலி அதிகார சபை தென்பகுதியைச் சேர்ந்த சிங்கள வர்த்தகருக்கு சட்டவிரோதமாக குத்தகைக்கு வழங்கியுள்ளது. இந்நிலையில் மகாவலி அதிகாரசபையிடமிருந்து சட்டவிரோத குத்தகை அனுமதியைப் பெற்றுக்கொண்ட குறித்த பெரும்பான்மையின வர்த்தகர் தமிழ்மக்களின் தனியார்காணிகளில் அத்துமீறி நுழைந்து உப்பளம் அமைக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதால் இனமுறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த சட்டவிரோதமான அத்துமீறிய செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மாகாவலி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகத்திற்கு 07.03.2026 இன்று கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. சிறப்புச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழ்.படைத் தலைமையகம் அகற்றப்பட மாட்டாது.பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர,

யாழ்ப்பாணத்திலுள்ள பாதுகாப்புப் படைகளின் தலைமையகத்தை அகற்றுவதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று  பாதுகாப்பு அமைச்சு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, இது தொடர்பாகப் பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை எனத் தெரிவித்து விரிவான விளக்கமளித்தார். “யாழ்ப்பாணம் படைத் தலைமையகம் அகற்றப்படவுள்ளதாகச் சிலர் திட்டமிட்டுப் பொய்யான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். மிகக் குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளவும், மக்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தவுமே இவ்வாறான பொய்ப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.” – என்றும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்புத் தரப்பினரின் வசமுள்ள காணிகளை விடுவிப்பது குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும் அவர் இதன்போது தெளிவுபடுத்தினார்: “நாட்டின் எந்தவொரு பகுதியிலும் காணிகளை விடுவிக்கும் போது, ‘தேசிய பாதுகாப்பு’ என்பற்கே முதலிடம் வழங்கப்படும். பாதுகாப்புத் தேவைகளைக் கருத்திற்கொண்டு,…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. சிறப்புச் செய்தி பொதுவான செய்திகள் 

ஈரானிய போர் கப்பலிலிருந்து, சுமார் 80 உடல்கள் மீட்பு இலங்கை பாதுகா ப்புச் செயலாளர்

இலங்கையின் தெற்கு கடற்பரப்பிற்கு அப்பால் சர்வதேசக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானிய போர் கப்பலிலிருந்து, சுமார் 80 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தாக்குதலின் தீவிரத்தை விளக்கும் வகையில் இலங்கையிலுள்ள ஐக்கிய அமெரிக்க தூதரகத்தினால் கடலில் இருந்து பெறப்பட்ட வீடியோக் காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளன.இலங்கையின் தெற்கு கடற்பரப்பிற்கு அப்பால் சர்வதேசக் கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ என்ற போர்க்கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று ஏவுகணைத் தாக்குதல் மூலம் மூழ்கடித்திருப்பதை அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். வாஷிங்டனில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், சர்வதேசக் கடற்பரப்பில் தாம் பாதுகாப்பாக இருப்பதாக ஈரான் கருதிய போதிலும், அமெரிக்காவின் விரைவுத் தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றினால் ஏவப்பட்ட ஒரேயொரு ‘மார்க் 48’ ரக ஏவுகணை (Torpedo) மூலம்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி பொதுவான செய்திகள் 

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை

இலங்கையில் நீண்டகாலமாக சர்ச்சைக்குரியதாக இருந்து வரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் அல்லது அதன் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான முக்கிய குழு மீண்டுமொருமுறை வலியுறுத்தியுள்ளது. பிரித்தானியா, கனடா, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மசிடோனியா ஆகிய நாடுகள் அடங்கிய இந்த முக்கிய குழுவின் சார்பில், பிரித்தானியாவின் மனித உரிமைகள் தூதுவர் எலினோர் சாண்டர்ஸ் இந்த விசேட அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளார். தற்போது முன்மொழியப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்புச் சட்டம்’, முந்தைய சட்டத்தை விடவும் பாரிய மனித உரிமை மீறல் கவலைகளைத் தோற்றுவிப்பதாகக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.எந்தவொரு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமும் இலங்கையின் சர்வதேச மனித உரிமைப் பொறுப்புகளுக்கு இணங்க அமைவது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இராணுவத்தின் வசமுள்ள காணிகள் சில விடுவிக்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொண்டாலும், அந்தச் செயல்முறை…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. சிறப்புச் செய்தி பொதுவான செய்திகள் 

வெளிவிவகார, வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு அவசர உதவிப் பிரிவு

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம் இலங்கை பிரஜைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு அவசர உதவிப் பிரிவை அமைத்துள்ளது.மத்திய கிழக்கில் வாழும் மற்றும் பணிபுரியும் இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிப்பதே இந்த பிரிவின் முக்கிய நோக்கமாகும். இலங்கையர்கள் மட்டுமின்றி, இலங்கையில் உள்ள வெளிநாட்டு பிரஜைகளும் தற்போதைய சூழ்நிலையால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்கும் தேவையான உதவிகள் வழங்கப்படும். மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் தீவிர பதற்றத்தைக் கருத்தில் கொண்டு, அரசாங்கம் இலங்கையர்களின் பாதுகாப்பிற்கு மிக உயர்ந்த முன்னுரிமை வழங்குகிறது. தொடர்பு விபரங்கள் இந்த அவசர உதவிப் பிரிவு வார இறுதி நாட்கள் உட்பட தினமும் காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை செயல்படும். தொலைபேசி எண்கள்: +94 117…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தமிழ்நாடு இந்தியா செய்திகள் 

இன ஒடுக்குமுறைக்கு எதிராக வீறு கொண்டு களமாடியவர், நல்லகண்ணு! கவிஞர் காசி ஆனந்தன்

இன ஒடுக்குமுறைக்கு எதிராக தமிழீழ விடுதலைப் போர்க்களத்தில் வீறு கொண்டு களமாடியவர், நல்லகண்ணு! கவிஞர் காசி ஆனந்தன் கண்ணீர் அஞ்சலி!! சென்னை, பிப். 26   ‘பொதுவாழ்வில் தூய்மையாக வாழ்ந்த பொதுவுடைமையாளரை இழந்தோம். நெஞ்சம் நிமிர்த்தி உரிமை இழந்தோர் விடியலுக்காய் நெருப்பை எரிந்து வெடித்த தீப்பந்தமாய் அணைந்தது. வீறு கொண்ட தலைவராய் வாழ்ந்து ஆண்டுகள் நூறு கண்ட வீரவேங்கை விழி மூடியது. உலக விடுதலையாளர் நல்லகண்ணு ஐயா உயிர் மூச்சை நிறுத்தினார்.’ இவ்வாறு தமிழீழ நட்புறவு மையத்தின் தலைவர் காசி ஆனந்தன், நல்லகண்ணு ஐயா மறைவுக்குறித்த தனது இரங்கல் அஞ்சலியில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் பதிவு செய்திருப்பதாவது:- நல்லகண்ணு ஐயாவின் முதலானிய ஒடுக்குமுறைக்கு எதிரான தொழிலாளர் போராட்டங்கள்-உழவர் போராட்டங்கள் – உயர் சாதிக்காரர்களின் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான சாதி ஒழிப்புப் போராட்டங்கள் – ஆணாதிக்க ஒடுக்குமுறைக்கு எதிரான…

மேலும் படிக்க