செய்திகள் தாயகச் செய்தி 

யாழ் போதனா மருத்துவமனையை தேசிய மருத்துவ மனையாக தரம் உயர்த்த நடவடிக்கை

யாழ் போதனா மருத்துவமனையை தேசிய மருத்துவ மனையாக தரம் உயர்த்த நடவடிக்கை மருத்துவர் நிஹால் அபேசிங்கே   தேவையான அளவுகோல்களை பூர்த்தி செய்த பின்னர், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையை, தேசிய மருத்துவமனையாக தரம் உயர்த்த விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சுகாதார அமைச்சின் செயலாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சு தொடர்பான நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழு கடந்த 21ஆம் நாள் நாடாளுமன்றத்தில் மருத்துவர் நிஹால் அபேசிங்கே தலைமையில் கூடியது. இதன்போது, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் நிறுவன மதிப்பாய்வு இடம்பெற்றது. இதன்போது தற்போது வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் மற்றும் சேவைகளை மேலும் மேம்படுத்தவும் மேலதிக ஊழியர்களின் தேவை அதிகரித்து வருவதாக யாழ்ப்பாண மருத்துவமனை அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.மருத்துவமனையை தேசிய மருத்துவமனையின் நிலைக்கு மேம்படுத்த வேண்டியதன் அவசியமும் எடுத்துக் கூறப்பட்டது இந்த நிலையில் தேவையான அளவுகோல்களை பூர்த்தி…

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

மத்திய கிழக்கு – பதற்றத்தின் விளிம்பில் ஈரான், டிரம்ப், மற்றும் மீண்டெழும் ‘விளிம்புநிலை போர்’

மத்திய கிழக்கு – பதற்றத்தின் விளிம்பில் ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ ஈரான், டிரம்ப், மற்றும் மீண்டெழும் ‘விளிம்புநிலை போர்’ (Brinkmanship War) ✦ ஆயுதமாக மாறும் காணொளி அமெரிக்க கடற்படை வலிமைக்கு எதிரான ஈரானின் உளவியல் தாக்குதல் ஈரானின் அரசு கட்டுப்பாட்டிலுள்ள ‘இஸ்லாமிய சித்தாந்தப் பரப்புரை அமைப்பு’, அமெரிக்காவின் USS Abraham Lincoln விமானம் தாங்கி போர்க்கப்பல் மீது ‘ஃபத்தாஹ்’ (Fattah) அதிவேக ஏவுகணை தாக்கி இரண்டாகப் பிளப்பது போன்ற ஒரு துல்லியமான சித்தரிப்பு காணொளியை வெளியிட்டுள்ளது. வெளிப்படையாகப் பார்க்கையில் இது ஒரு போர் திட்டம் போலத் தோன்றினாலும், உண்மையில் இது ஒரு மூலோபாயத் தகவல் தொடர்பு ஆயுதமாக (Strategic Communication Weapon) தான் புரிந்துகொள்ளப்பட வேண்டும். இந்த வெளியீட்டின் பின்னணி மற்றும் நோக்கம் * நேரத் தேர்வு: அமெரிக்க carrier strike group மத்திய கிழக்கு பிராந்தியத்திற்குள் நுழைந்த…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

இன்றையதினம் (29) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக வரண்ட வானிலை.

இன்றையதினம் (29) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக வரண்ட வானிலை நிலவுமென எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் பதுளை, காலி, மாத்தறை, அநுராதபுரம் மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.   கடல் பகுதிகளில் மழை நிலைமை: நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. களுத்துறையிலிருந்து கொழும்பு மற்றும் புத்தளம் ஊடாக மன்னார் வரையிலும் மற்றும் மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில்…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டீன் அம்மையார்,யாழ்பல்கலைக் கழகத்துக்கு விஜயம்

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டீன் அம்மையார், நேற்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். கடந்த இரு நாட்களாக வடக்குக்குக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள கனேடிய உயர்ஸ்தானிகர் நேற்று செவ்வாய்க்கிழமை காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்து, பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவைச் சந்தித்து கலந்துரையாடினார். அதன் பின்னர் பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள், பதிவாளர்,நிதியாளர், நூலகர் மற்றும் அரசறிவியல், பொருளியல் மற்றும் மொழிபெயர்ப்புக் கற்கைகள் துறைகளின் தலைவர்களைச் சந்தித்தும் கலந்துரையாடினார். இச்சந்திப்புகளின் போது, அரசியல் பொருளாதார நிலைமைகள் உட்பட சமகால விடயங்கள் பற்றியும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கனேடியத் தூதரக அனுசரணையுடன் மேற்கொள்ளப்படும் செயற்றிட்டங்கள் பற்றியும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

மக்களின் நலன்களில் கவனம் செலுத்துவதே அரசாங்கத்தின் பொறுப்பு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

மக்களின் நலன்களில் கவனம் செலுத்துவதே அரசாங்கத்தின் பொறுப்பு என்றும், நாடு என்ற வகையில் அடையப்படும் அனைத்து பொருளாதார நன்மைகளும் மக்களுக்கும் சமூகத்திற்கும் செல்வதை உறுதி செய்வதற்காகவே அரசாங்கம் இந்தப் பணியைத் தொடங்கியுள்ளது என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். டித்வா சூறாவளியால் சேதமடைந்த மதத் தலங்களை புனரமைப்பதற்கான ‘கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்’ தேசிய வேலைத்திட்டத்தின் மாத்தளை மாவட்ட ஆரம்ப நிகழ்வு, நேற்று (27) பிற்பகல் மாத்தளை, கவடயாமுன புராண ரஜமஹா விஹாரையில் நடைபெற்றபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். பொருளாதாரம், சமூகம் மற்றும் கலாசார ரீதியாகவும் வளர்ச்சியடைந்த ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்றும், சமூகத்தில் இழந்து வரும் அனைத்து தார்மீகப் பண்புகளையும் மீண்டும் கொண்டுவருவதற்காக நாட்டின் அனைத்துத் துறைகளிலும் புதிய மறுமலர்ச்சியை உருவாக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அதன்போது, கிராமங்களுக்கும் மத வழிபாட்டுத் தலங்களுக்கும்…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

நெல்சந்தைப்படுத்தல் தாமதமாகினால் மாவட்ட செயலகத்தை முற்றுகை ரவிகரன் எம்.பி

நெல்சந்தைப்படுத்தல் சபையினூடான நெற்கொள்வனவு தாமதமாகினால் மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் இடம்பெறும்; ரவிகரன் எம்.பி எச்சரிக்கை நெல் சந்தைப்படுத்தல் சபையினூடாக நெல் கொள்வனவு கடந்த 26ஆம் திகதி மேற்கொள்ளப்படுமெனத் தெரிவிக்கப்பட்ட நிலையிலும் இதுவரை நெற்கொள்வனவு மேற்கொள்ளப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், நெல்சந்தைப்படுத்தல் சபையினூடான நெற்கொள்வனவு தாமதமாகினால் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக விவசாயிகளுடன் இணைந்து முற்றுகைப் போராட்டம் ஒன்று இடம்பெறும் எனவும் எச்சரித்துள்ளார். முல்லைத்தீவு – மாவட்டசெயலகத்தில் 27.01.2026இன்று இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், பெரும்போக நெல்அறுவடை வன்னி உட்பட வடக்கு கிழக்கெங்கும் மும்முரமாக இடம்பெற்றுவரும்நிலையில் நெல் சந்தைப்படுத்தல் சபையினூடாக விரைந்து நெற்கொள்வனவை மேற்கொள்ளுமாறு கடந்த 20.01.2026 அன்று பாராளுமன்றில் உரையாற்றியிருந்தேன். அதனைத்தொடர்ந்து கடந்த 21.01.2026அன்று…

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

எரிசக்திப் போர்கள், இறையாண்மை நெருக்கடிகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஒழுங்கின் சிதைவு

குறுக்குச் சந்தியில் ஐரோப்பா ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ எரிசக்திப் போர்கள், இறையாண்மை நெருக்கடிகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஒழுங்கின் சிதைவு ✧ பிரஸ்ஸல்ஸின் REPowerEU வியூகம்: எரிசக்தி சுதந்திரமா, அல்லது மத்தியமயமாக்கப்பட்ட கட்டாயமா? 2027-ஆம் ஆண்டிற்குள் ரஷ்ய எரிவாயு இறக்குமதிகளை முழுமையாக நிறுத்தும் நோக்கில், ஐரோப்பிய ஒன்றியம் (EU) ஒரு அதிரடியான ஒழுங்குமுறைக்கு அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளித்துள்ளது. இது, இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஐரோப்பாவின் எரிசக்தி அமைப்பில் நிகழும் மிகப்பெரிய மூலோபாய மாற்றங்களில் ஒன்றாகும். REPowerEU திட்டத்தின் கீழ், * ஜனவரி 2027-க்குள் ரஷ்ய திரவ இயற்கை எரிவாயு (LNG) மீது முழுத் தடை * 2027-ஆம் ஆண்டின் இலையுதிர் காலத்திற்குள் குழாய் வழி ரஷ்ய எரிவாயு இறக்குமதிக்கு முற்றுப்புள்ளி எனும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்த நடவடிக்கையை, எரிசக்தி சுதந்திரம், பாதுகாப்பு மற்றும் நீடித்த நிலைத்தன்மை ஆகியவற்றை…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

வவுனியாவில் செட்டிகுளம் பகுதியில் விபத்தில் சிக்கி நால்வர் படுகாயம்

வவுனியாவில் விபத்தில் சிக்கி நால்வர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் வவுனியா, செட்டிகுளம் பகுதியில் இன்று (27-01-2026) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மன்னாரில் இருந்து மாதவாச்சி நோக்கி பயணித்த கூலர் ரக வாகனமும் மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கி பயணித்து ஜீப் ரக வாகனமும் செட்டிக்குளம் பிரதேச செயலகத்திற்கு அருகாமையில் மோதியே இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் சிக்கியவர்கள், வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செட்டிக்குளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தானது வீதியில் நின்ற கட்டாக்காலி மாடுகளினால் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிவிக்கப்படுகின்றது. மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அனைவரின் மனதையும் உலுக்கியுள்ளது. குறித்த இளைஞனின் சடலம் விடியல் விளையாட்டு மைதான கிணற்றில் இருந்து நேற்று பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு 10ம் வட்டாரம் பகுதியில் வசித்து வரும் 24 வயதுடைய பாலசுப்பிரமணியம் சாம்சன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கடந்த 25 ஆம் திகதி இரவு சுமார் 7.30 மணியளவில், குறித்த இளைஞன் வீட்டிற்கு வந்த நபர் ஒருவர் வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் குறித்த இளைஞனை ஏற்றி சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதன் பின்னர் அவர் தொடர்பில் எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும், இதுவரை வீடு திரும்பவில்லை என்றும் அவரது அம்மா, புதுக்குடியிருப்பு காவல் நிலையத்தில் இன்று காலை முறைப்பாடு பதிவு செய்திருந்தார். குறித்த முறைப்பாட்டையடுத்து சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் காணாமல் போன…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

முல்லை கடற்கரையில் மாபெரும் பட்டத்திருவிழா;

முல்லை கடற்கரையில் மாபெரும் பட்டத்திருவிழா; முல்லைத்தீவு சுற்றுலாக் கடற்கரையில் 25.01.2026 நேற்றையதினம். மாபெரும் பட்டத்திருவிழாஇடம்பெற்றது. அந்தவகையில் வட்டுவாகல் புலம்பெயர் உறவுகள் மற்றும் வட்டுவாகல் கிராமமக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த மாபெரும் பட்டத்திருவிழா நிகழ்வில் முதன்மை விருந்தினராக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றார். அந்தவகையில் மரபுவழியில் விருந்தினர்களது வரவேற்புடன் தொடங்கிய இந்நிகழ்வில் தொடர்ந்து மங்கலவிளக்கேற்றல் இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து பட்டத்திருவிழாவிற்கான பட்டங்கள் விருந்தினர்களால் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து பட்டத்திருவிழா இனிதே ஆரம்பித்தது. அந்தவகையில் மிகவும் பெருந்திரளான மக்கள் இந்தப் பட்டத்திருவிழாவில் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில் முல்லைத்தீவு கடற்கரையின் வான்பரப்பானது அழகிய வண்ணப் பட்டங்களால் நிறைந்திருந்தது. அந்தவகையில் இந்த மாபெரும் பட்டத்திருவிழாவில் விருந்தினர்களாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன்,. கரைதுறைப்பற்று பிரதேசசபையின் செயலாளர் திருமதி. இராஜயோகினி ஜெயக்குமார், கரைதுறைப்பற்று உதவிப் பிரதேசசெயலாளர் எனப் பலரும்…

மேலும் படிக்க