காணொளி சிறப்புச் செய்தி 

அக்கரை வெளியில் அறுவடை செய்த நெல்லை எடுத்துச்செல் முடியாமல் அவதியுறும் விவசாயிகள்;

  முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் கமநல சேவைநிலையப் பிரிவிற்குட்பட்ட, தமிழர்களின் பூர்வீக அக்கரைவெளி விவசாய நிலங்களுக்குச் செல்லும் வீதி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளமையினாலும், குறித்த வீதியில் அமைந்துள்ள விளாத்தியடிஇறக்கப் பாலம் உடைப்பெடுத்துள்ளதாலும் அக்கரைவெளி விவசாய நிலங்களுக்குச் செல்வதற்குரிய போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

கிபுல் ஓயாஎதிரான போராட்டத்தை காரணமாக வைத்து பழிவாங்கும் பிரதி அமைச்சர்:தவிசாளர் குற்றச்சாட்டு!

கிபுல் ஓயா திட்டத்திற்கு எதிரான போராட்டத்தை காரணமாக வைத்து பழிவாங்கும் பிரதி அமைச்சர்: வவுனியா வடக்கு பிரதேசசபை தவிசாளர் குற்றச்சாட்டு! கிபுல் ஓயாத் திட்டத்தை நிறுத்தக்கோரி இடம்பெற்ற போராட்டத்திற்கு பழி வாங்கும் விதமாக பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க செயற்படுவதாக வவுனியா வடக்கு பிரதேச்சபையின் தவிசாளர் தி.கிருஸ்ணவேணி குற்றம் சாட்டியுள்ளார். வவுனியா தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கிபுல் ஓயாத்திட்டம் தமிழ் மக்களுக்கு வேண்டாம் என்று எமது மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தோம். அந்த போராட்டத்தின் விளைவாக எனக்கு அரச தரப்பால் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அந்வகையில் இன்றையதினம் (03.02) வெலிஓயா என மாற்றப்பட்ட மணலாறு பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இடம்பெற்றது. அதில் நான் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தேன். அந்தகூட்டத்தில் எனக்கு…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

அக்கரை வெளியில் அறுவடை செய்த நெல்லை எடுத்துச்செல் முடியாமல் அவதியுறும் விவசாயிகள்;

அக்கரைவெளியில் அறுவடை செய்த நெல்லை எடுத்துச்செல்முடியாமல் அவதியுறும் விவசாயிகள்; நிலமைகளை நேரில் சென்று ஆராய்ந்தார் – ரவிகரன் எம்.பி முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் கமநல சேவைநிலையப் பிரிவிற்குட்பட்ட, தமிழர்களின் பூர்வீக அக்கரைவெளி விவசாய நிலங்களுக்குச் செல்லும் வீதி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளமையினாலும், குறித்த வீதியில் அமைந்துள்ள விளாத்தியடிஇறக்கப் பாலம் உடைப்பெடுத்துள்ளதாலும் அக்கரைவெளி விவசாய நிலங்களுக்குச் செல்வதற்குரிய போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தற்போது அக்கரைவெளியில் அறுவடைசெய்யப்பட்ட 5000வரையிலான நெல் மூட்டைகள் அங்கிருந்து எடுத்துச்செல்லமுடியாமல் வயல்வெளிகளிலும், வீதிகளிலும் நீண்டநாட்களாக அடுக்கிவைக்கப்பட்டுள்ளதுடன், விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் விவசாயிகளின் முறையீட்டிற்கு அமைவாக அப்பகுதிக்குச் சென்ற வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் விவசாயிகள் எதிர்நோக்கும் பாதிப்புநிலமைகள் தொடர்பில் பார்வையிட்டதுடன், விவசாயிகள் எதிர்நோக்கியள்ள பாதிப்பு நிலமைகளைச் சீர்செய்வதற்கு தம்மால் கவனஞ்செலுத்தப்படுமெனத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் கமநலசேவைநிலையப்…

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

அணுஆயுதக் கட்டுப்பாட்டின் சரிவு, நிரந்தரப் போர் பொருளாதாரங்கள் மற்றும் உலகளாவிய பாதுகாப்பின் சிதைவு

விளிம்பில் உலகம்: அணுஆயுதக் கட்டுப்பாட்டின் சரிவு, நிரந்தரப் போர் பொருளாதாரங்கள் மற்றும் உலகளாவிய பாதுகாப்பின் சிதைவு ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ New START ஒப்பந்தக் காலாவதி: அணுஆயுதக் கட்டுப்பாட்டின் முடிவு வரவிருக்கும் New START ஒப்பந்தத்தின் காலாவதி, உலகளாவிய அணுஆயுத ஒழுங்கமைப்பில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பிளவை உருவாக்குகிறது. அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் மூலோபாய அணுஆயுதக் களஞ்சியங்களை கட்டுப்படுத்திய கடைசி எஞ்சிய கட்டமைப்பு இதுவே. இதன் வீழ்ச்சி, வெறும் ஒரு இராஜதந்திரத் தோல்வி மட்டுமல்ல; ஐந்து தசாப்தங்களாக கட்டியெழுப்பப்பட்ட நிறுவன நம்பிக்கையின் முறிவுமாகும். குறியீட்டு ரீதியிலான மறுஉலக முடிவு கடிகாரம் (Doomsday Clock) வேகமெடுக்கக்கூடும் என்ற டிமிட்ரி மெட்வெடேவின் எச்சரிக்கை, வெறும் அரசியல் நாடகமல்ல. ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தங்கள் ஆயுதங்களை முற்றிலும் அழிப்பதில்லை; ஆனால் அவை முடிவெடுக்கும் செயல்முறைகளை மந்தமாக்குகின்றன, எதிர்பார்ப்புகளை நிலைப்படுத்துகின்றன, தவறான கணிப்புகளைத் தவிர்க்கின்றன. சரிபார்ப்பு வழிமுறைகள்…

மேலும் படிக்க
காணொளி சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

காணாமல் ஆக்கப் பட்டோரின் உறவினர் கள்.காவல்துறை யால் மிரட்டல். கஞ்சா கடத்தியதாக குற்றச்சாட்டு.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்.காவல்துறையால் மிரட்டல்.கஞ்சா கடத்தியதாக குற்றச்சாட்டு.

மேலும் படிக்க
செய்திகள் புலச் செய்திகள் 

இலங்கையின் சுதந்திர தினம் தமிழர்களுக்கு கரிநாளாகும் லண்டனில் போராட்டம்

இலங்கையின் 78ஆவது சுதந்திர தினம் தமிழர்களுக்கு கரிநாள் என கூறி வடக்கில் கிளிநொச்சியிலும் கிழக்கில் மட்டக்களப்பிலும் மாபெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது அந்த வகையில் இந்த போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக புலம்பெயர் தேசங்களிலும்  சுதந்திர தினம் தமிழர்களுக்கு கரிநாள் என கூறி போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறது. அந்தவகையில் பிரித்தானியாவிலும் இன்றையதினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது . தமிழர்களின் தன்னாட்சிக்கான உரிமைக் குரலாகவும், இலங்கையின் சுதந்திர தினம் தமிழர்களுக்கு கரிநாளாகும் என்பதை வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. லண்டனில் அமைந்துள்ள இலங்கை உயர்ஸ்தானிகர்  கரியாலயம் முன்பாக இன்றையதினம் (04) காலை 11.00 மணியளவில் இந்தப் போராட்டம் ஆரம்பமாகி பேரணியாக  பாராளுமன்றம் வரை சென்று நிறைவடைந்தது இதில் லண்டனில் வாழும் புலம்பெயர் தமிழர்கள், லண்டன் மக்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு, இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், தமிழர்களின்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

தமிழர்கள் மீதான அடக்குமுறைகள் வலுப்பதாலேயே போராட்டங்களும் வலுப்பெறுகின்றன – ரவிகரன் எம்.பி

நாடகநடிகர்களைப்போல செயற்படும் ஆட்சியாளர்கள்; தமிழர்கள் மீதான அடக்குமுறைகள் வலுப்பதாலேயே போராட்டங்களும் வலுப்பெறுகின்றன – ரவிகரன் எம்.பி ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுக்கு பாரிய உதவிகளைச் செய்வதாக நாடகநடிகர்களைப்போல் ஒருபுறம் செயற்பட்டுக்கொண்டு, மறுபுறம் தமிழ் மக்கள்மீது பல்வேறு வழிகளிலும் அடக்குமுறைகளைப் பிரையோகிப்பதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். அந்தவகையில் ஆட்சியாளர்களின் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகள் வலுப்பெறுவதனாலேயே, அடக்குமுறைகளுக்கு எதிரான தமிழ் மக்களின் போராட்டங்களும் வலுப்பெறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். இலங்கையின் சுதந்திரநாளினை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் 04.02.2026நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியில் பங்கேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையின் சுதந்திரநாள் தமிழர்களுக்கு கரிநாள் என்ற தொனிப்பொருளில் வருடாவருடம் இதேநாளில் எமது போராட்டம் தொடர்சியாக இடம்பெற்றுவருகின்றது. இலங்கையின் ஆட்சியாளர்கள் கடந்த 1948ஆம் ஆண்டிலிருந்து…

மேலும் படிக்க
காணொளி சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

சுதந்திரநாளினை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி கிளியில் மாபெரும் கவனயீர்ப்பு ஆரப்பாட்ட பேரணி

சுதந்திரநாளினை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்பு ஆரப்பாட்ட பேரணி இலங்கையின் 78ஆவது சுதந்திரநாளை தமிழர்களின் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி 04.02.2026இன்று கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் பல்கலைகமகழக சமூகம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், சிவில் சமூக அமைப்புக்கள், தமிழ் அரசியல் பிரமுகர்களின் பங்கற்புடன் இடம்பெற்ற இந்த மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணியானது கிளாநொச்சி கந்தசுவாமிகோவில் முன்றலில் இருந்து ஆரம்பித்து, பசுமைப்பூங்கா வரையில் இடம்பெற்றது.இவ்வார்ப்பட்டப் பேரணியில் பங்குபற்றியோர் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கான நீதி, வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி எனபவற்றைக் கோரி கோசங்களை எழுப்பியதுடன், தமிழ் இனப்பிரச்சிற்கான தீர்வை வலியுத்தியும், தமிழர்தாயகப்பரப்பில் இடம்பெறும் நில ஆக்கிரமிப்புக்களை நிறுத்துமாறு வலியுறுத்தியும் கோங்களை எழுப்பியவாறும், பதாதைகளைத் தாங்கியவாறும் கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டப்பேரணியில் ஈடுபட்டிருந்தனர். அதேவேளை தமிழர்கள் இந்த நாட்டில் அடிமைப்படுத்தப்படுவதையும், கொடுமைப்படுத்தப்படுவதையும் வெளிப்படுத்தும் வகையிலான காட்சிப் பொருட்களைத்…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

தமிழர்களுக்கான சுதந்திரத்தை எந்த அரசாங்கத்தாலும் பெற்றுக்கொடுக்க முடியவில்லை வேலன் சுவாமிகள்

யுத்தம் நடைபெற்று பல ஆண்டுகள் கடந்தும் இன்றும் தமிழர்களுக்கான சுதந்திரத்தை எந்த அரசாங்கத்தாலும் பெற்றுக்கொடுக்க முடியவில்லை என சைவ சமயத் தலைவர்களில் ஒருவரான நல்லூர் சிவகுரு ஆதீனம் தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற கரிநாள் பேரணியில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே இதனை கூறியள்ளார்.அத்தோடு, இலங்கை அரசாங்கத்தின் நீதித்துறை நீதிக்கு எதிராகவே செயற்படுகிறது என்றும் கூறியுள்ளார்.இவ்வாறு சட்டமா அதிபர் திணைக்களத்துக்குள்ளே வழக்குகள் கொண்டு செல்லப்பட்டு முடக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.

மேலும் படிக்க