சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

காவல்துறை யினர்.துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான சிறுவனின் கொலைக்கு நீதி வேண்டி போராட்டம்

யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டி பகுதியில் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான அல்பினோ அருள்  ஃபயாஸ் என்ற சிறுவனின் கொலைக்கு நீதி வேண்டி இன்று யாழ். பஸ் நிலையப் பகுதியில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். மனித உரிமை ஆர்வலர் அமைப்பினரால் முனெடுக்கப்பட்ட குறித்த போராட்டத்தில், சிறுவனின் உறவுகளுடன், வேலன் சுவாமி, குரலற்றவர்களின் குரல் அமைப்பின் தலைவர் கோமகன், யாழ். மாநகர உறுப்பினர் நிசாந்தன் உள்ளிட்ட பலர் கலந்து போராட்டத்துக்கு வலுச்சேர்த்தனர். குறித்த போராட்டத்தின் போது பொலிசாரின் செயலைக் கண்டித்து பல்வேறு சுலோங்கள் தாங்கி கோசமிட்டு தமது எதிர்ப்பை காட்டிய போராட்டக்காரர்கள், குறித்த கொலைக்கு காரணமான பொலிசாரை தண்டிக்க வேண்டும் என்றும் இவ்வாறான மிலேச்சத்தனமான கொலைகளை காவல்துறை. இனி மேற்கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தியதுடன் நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். முன்பதாக கடந்த 10 ஆம் திகதி…

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

ஐரோப்பாவின் பாதுகாப்பு எதிர்காலம்: ஒரு தீர்மானிக்கும் சந்திப்பில்மூலோ பாயப் பிளவுகள்,

ஐரோப்பாவின் பாதுகாப்பு எதிர்காலம்: ஒரு தீர்மானிக்கும் சந்திப்பில் ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ மூலோபாயப் பிளவுகள், எரிசக்தி அழுத்தம் மற்றும் இராணுவ தன்னாட்சிக்கான போட்டி ✧. FCAS: கேள்விக்குறியாகும் €100 பில்லியன் போர் விமானக் கனவு ஐரோப்பாவின் மிக லட்சியமான பாதுகாப்பு விமானத் திட்டமான — எதிர்கால போர் வான்வழி அமைப்பு (Future Combat Air System – FCAS) — இதுவரை இல்லாத அரசியல் மற்றும் தொழில்துறை அதிர்வுகளை சந்தித்து வருகிறது. பெர்லினும் பாரிஸும் இடையிலான இந்த முரண்பாடு வெறும் தொழில்நுட்ப விவாதம் அல்ல; எதிர்கால போர்முறை, இறையாண்மை மற்றும் தொழில்நுட்பக் கோட்பாடுகளைப் பற்றிய ஆழமான தத்துவ வேறுபாடுகளைக் காட்டுகிறது. எமானுவேல் மக்ரோன், அணுத் தாக்குதல் பணிகளையும் மேற்கொள்ளக்கூடிய, விமானம் தாங்கி கப்பல்களில் இருந்து இயங்கக்கூடிய ஆறாம் தலைமுறை போர் விமானம் மூலம் ஐரோப்பாவின் மூலோபாய தன்னாட்சியை நிலைநாட்ட வலியுறுத்துகிறார்.…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

வனஜீவராசிகள் அதிகாரிகளுக்குப் பதக்கங்கள் வழங்கி கௌரவிப்பு

இலங்கை வனஜீவராசிகள் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளின் சேவையைப் பாராட்டி பதக்கங்கள் வழங்கும் கௌரவிப்பு நிகழ்வு முதன்முறையாக நடைபெற்றது. கிரிதலே தேசிய வனஜீவராசிகள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்ற இந்நிகழ்வு, சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக படபெந்தி தலைமையில் இடம்பெற்றது. நாட்டின் வனப்பகுதிகளையும், வனவிலங்குச் சம்பத்துக்களையும் தமது உயிரைப் பணையம் வைத்துப் பாதுகாக்கும் அதிகாரிகளை ஊக்குவிப்பதையும், அவர்களைப் பாராட்டுவதையும் நோக்கமாகக் கொண்டே இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சேவைக்காலம் மற்றும் வனஜீவராசிகள் தொடர்பான களக் கல்வித் திறமை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 அதிகாரிகளுக்கு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் வழங்கி வைக்கப்பட்டன.அதிகாரிகளின் அர்ப்பணிப்பு, தத்துவார்த்த அறிவு, களத்திறன், ஒழுக்கம் மற்றும் விசேட நடவடிக்கைகளில் அவர்கள் காட்டிய உத்வேகம் ஆகியவை இந்தப் பதக்க வழங்கலில் முக்கியமாக எடுத்துக்கொள்ளப்பட்டன.வனஜீவராசிகள் திணைக்களத்தின் வினைத்திறனை…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

விரைவு ரயிலுடன் கெப் வாகனம் ஒன்று மோதியதில்,இருவர் உயிரிழந்துள்ளனர்.

காலியிலிருந்து மருதானை நோக்கிச் சென்ற ‘காலி குமாரி’ விரைவு ரயிலுடன் கெப் வாகனம் ஒன்று மோதியதில், கெப் வாகனத்தில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் இன்று (22) காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மூவர் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 22 மற்றும் 28 வயதுடைய இரண்டு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த ரயில் கடவையில் வர்ண சமிஞ்சை முறைமை சரியாக இயங்கவில்லை எனவும்,  முறையான பாதுகாப்பு கேட் பொருத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது இவ்வாறு ரயிலுடன் மோதிய கெப் வாகனம் அருகில் உள்ள நிர்மாணத் திட்டமொன்றில் பணிபுரியும் ஒருவருடையது என தெரியவந்துள்ள. ரயில் மோதியதையடுத்து கெப் வாகனம் சுமார் 50 மீற்றர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.இந்த விபத்தில் கெப் வாகனத்தின் சாரதி உட்பட மூன்று…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

பெரும்போக அறு வடை நெல்லினை வறிய குடும்பங்க ளுக்கு பகிர்ந்து அளித்த விவசாயி

கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தர்மபுரம் பகுதியில் வசித்து வரும் விவசாயி ஒருவர் ஒவ்வொரு வருடமும் பெரும்போக அறுவடை முடிவடைந்ததும் தாம் மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கையில் அறுவடை செய்த நெல்லினை தமது பகுதியில் நெற்செய்கை  மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ள வறிய குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கும் செயற்பாட்டை மேற்கொண்டு வருகின்றார். நேற்றுமுன்தினம் (20) தர்மபுரம் கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் வைத்து தம்மால் முடிந்த வரையில் அறுவடை செய்த நெல்லின் ஒரு பகுதியில் 30 குடும்பங்களுக்கு ஒரு மூட்டை வீதம் வழங்கினார்.இதன்போது கூறுகையில், தமது பெயரினையோ அல்லது தமது முகத்திலையோ ஊடகங்களுக்கு தெரிவிக்க விரும்பவில்லை எனவும் பிறருக்கு உதவும் மனம் இருந்தால் மட்டும் போதும், என்னால் முடிந்தவரை ஒவ்வொரு வருடமும் இதேபோன்று வழங்கி வருவேன். வழங்குவேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் படிக்க