உலக அரசியல். கட்டுரை 

உலகளாவிய அதிகார மாற்றங்களும் நிழல் போர்களும்: ஒரு மூலோபாய உளவுத்துறை ஆய்வு

உலகளாவிய அதிகார மாற்றங்களும் நிழல் போர்களும்: ஒரு மூலோபாய உளவுத்துறை ஆய்வு ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ ➤ நார்ட் ஸ்ட்ரீம் அதிர்வலைகள்: உளவுத்துறை, ரகசியம் மற்றும் நாசவேலை அரசியல் நார்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிப்புகளைச் சுற்றிய சர்வதேச சர்ச்சையை ஒரு முக்கிய புலனாய்வு வெளிப்பாடு மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. உக்ரைனின் நாசவேலைத் திட்டம் குறித்து அமெரிக்க உளவுத்துறைக்கு முன்கூட்டியே தகவல் இருந்ததாகவும், பின்னர் அதை மேற்கொள்ள வேண்டாம் என்று எச்சரித்ததாகவும் அறிக்கை கூறுகிறது. மேலும், இந்தத் திட்டம் உக்ரைன் அதிபரின் நேரடி அங்கீகாரம் இன்றி, ராணுவ கட்டளை அமைப்புக்குள் ஒப்புதல் பெற்றதாகவும் குறிப்பிடப்படுகிறது. இந்தக் கூற்றுகள் உண்மையாக இருந்தால், அவை தீவிரமான புவிசார் அரசியல் விளைவுகளை உருவாக்கும். போர்கால முடிவெடுக்கும் அமைப்புக்குள் உட்புற முரண்பாடுகள் இருந்திருக்கலாம் என்பதையும், சில ராணுவத் தீர்மானங்கள் சிவில் அரசியல் கட்டுப்பாட்டை மீறி எடுக்கப்பட்டிருக்கலாம் என்பதையும்…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

புளியம்பொக்கணை ஆலய வருடாந்த ஆலோசனைக் கூட்டம்

கிளிநொச்சி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான புளியம்பொக்கணை ஆலய வருடாந்த பொங்கல் விழா எதிர்வரும் 25.03.2026 அன்று விளக்கு வைக்கும் வைபவத்துடன் ஆரம்பமாகும். வரலாற்றுச் சிறப்புமிக்க கிளிநொச்சி, கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தரப் பொங்கல் உற்சவம் எதிர்வரும் 25.03.2026 அன்று விளக்கு வைக்கும் வைபவத்துடன் ஆரம்பமாகி, 01.04.2026 அன்று பிரதான பொங்கல் உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது. இப் பொங்கல் உற்சவத்தினை சிறப்பாக நடாத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் பொருட்டு முக்கிய ஆலோசனைக் கூட்டம் ​கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சு. முரளிதரன் அவர்களின் தலைமையில் 20.02.2026 நேற்றையதினம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், எதிர்வரும் உற்சவ காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. ​பக்தர்களுக்கான போக்குவரத்து, குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துவது பற்றியும்,…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

வடமராட்சி ஊடக இல்லத்தின் ஏற்பாட்டில் யாழ் பருத்தித்துறையில் கவனயீர்ப்புப் போராட்டம்

யாழ் கலிகைச் சந்தியில் வைத்து 15.02.2007 அன்று சிறிலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் சு.இராமச்சந்திரன் ஈபிடிபியினருடன் இணைந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துக்கு நீதி கோரி இன்று சனிக்கிழமை (21.02.2026) சற்றுமுன் வடமராட்சி ஊடக இல்லத்தின் ஏற்பாட்டில் யாழ் பருத்தித்துறையில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது சிரேஷ்ட ஊடகவியலாளர் மதிவாணன் கைகளும், கால்களும் இரும்புச் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு, இரத்தக் கறை படிந்திருப்பது போன்ற ஆடை அமைப்புடன்ன நீதி கோரிய காட்சி காண்பவர்கள் அனைவரையும் கண் கலங்க வைத்தது. இதன்போது கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்களுக்காகவும் குரல் எழுப்பப்பட்டது.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் இன்று (21) அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்ற விபத்து

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் இன்று (21) அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர். ஹட்டன் பகுதியிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த வர்த்தக லொறி ஒன்று, வட்டவளை சிங்கள பாடசாலைக்கு அருகில் உள்ள பாதாள மதகு ஒன்றிற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.லொறிக்குள் இறுகிய நிலையில் சிக்கிக்கொண்ட சாரதி மற்றும் உதவியாளரை, பொலிஸாரும் பொதுமக்களும் சுமார் 1 மணிநேரம் போராடி மீட்டனர்.காயமடைந்தவர்கள் முதலில் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை களைப்பு காரணமாகவே இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பாக வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

நிழல் அமைச்சர்களை நியமித்து ஆட்சியைக் கொண்டுநடத்துமாறு ஆளுநர் வேதநாயகனு க்கு உத்தரவு! கஜேந்திரகுமார்

இன அழிப்புப் போரில் ஈடுபட்ட இராணுவத்தின் கோரமுகமே தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரை. இந்த விடயத்தில் அரசு தலையிட்டு காணிகளை இழந்த மக்களுக்கு நீதியை வழங்க வேண்டும்.என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையில் அவர் மேலும் கூறியதாவது:- “தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரை தொடர்பில் கொழும்பில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இந்தக் கலந்துரையாடலில், பௌத்த சாசன அமைச்சின் அதிகாரிகளும், அரச அதிகாரிகளும், திஸ்ஸ விகாரையின் விகாராதிபதியும் கலந்துகொண்டனர். ஆனால், காணிகளை இழந்த மக்கள் இதில் கலந்துகொள்ள அழைக்கப்படவில்லை. இது எந்த வகையில் நியாயம்? தையிட்டி திஸ்ஸ விகாரைக்கும் அரசுக்கும் அல்லது பௌத்தத்துக்கும் தொடர்பில்லை. இராணுவமே இந்த ஆக்கிரமிப்பைச் செய்தது. அப்போதைய இராணுவத் தளபதி சவேந்திர சில்வாதான் இந்த விகாரையை அமைப்பதில் முழுமூச்சாகச் செயற்பட்டார்.…

மேலும் படிக்க