ஈழ அரசியல் ஆய்வு கட்டுரை 

சிதறடிக்கப்பட்ட ஓர் தேசத்தின் புலம்பல் — போர், புலம்பெயர்வு மற்றும் நினைவுகளிலிருந்து செதுக்கப்பட்ட ஓர் அழுகை —

꧁༺ சிதறடிக்கப்பட்ட ஓர் தேசத்தின் புலம்பல் ༻꧂ — போர், புலம்பெயர்வு மற்றும் நினைவுகளிலிருந்து செதுக்கப்பட்ட ஓர் அழுகை — ❀••┈┈•┅━┅┉┈ ┈┉┅━┅•┈┈••❀ ❖ இன்னும் மூச்சுவிடும் போர் ❖ போர் முடிந்துவிட்டது என்றார்கள், ஆனால் காற்று இன்னும் துப்பாக்கிச் சூட்டுப் போல நடுங்குகிறது. மண் இன்னும் புகையையும் உப்பையும் மணக்கிறது, கடலோ இன்னும் பெயரற்ற நினைவுகளை சுமந்து வருகிறது, அந்த நினைவுகள் உச்சரிக்கத் துணியாதவையாக. இடப்பெயர்வு காலடிச் சுவடுகளால் மட்டுமல்ல— அது எலும்புகளுக்குள் குடியேறி, அந்நிய அறைகளில் பாடப்படும் தாலாட்டுகளில், தாயகமற்ற வரைபடங்களில் உறைந்து கிடக்கிறது. ❖ ஒரே இனத்தின் இரு ஆன்மாக்கள் ❖ ஒரு ஆன்மா தீபம் போல எழுகிறது, விடுதலைக்காக அமைதியாய் எரிகிறது, மொழியை புனித நெருப்புப் போலக் காக்கிறது, வரலாற்றை காயமடைந்த குழந்தை போலத் தாங்குகிறது. மற்றொரு ஆன்மா அந்நியக் காற்றில்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வடக்கில் இந்துநாகரீம் மற்றும் சங்கீத பாட ஆசிரிய ஆட்சேர்ப்பு விண்ணப்பங்கள் கோரப்படவேண்டும் – ரவிகரன்

வடக்கில் இந்துநாகரீம் மற்றும் சங்கீத பாட ஆசிரிய ஆட்சேர்ப்பு விண்ணப்பங்கள் கோரப்படவேண்டும் – ரவிகரன் எம்.பி வேண்டுகோள்; சமச்சீரற்ற ஆசிரிய வளப் பரவலாக்கத்தை சீர்ப்படுத்துமாறும் வலியுறுத்து. பட்டதாரிகளைஆசிரியர் சேவையில் உள்ளீர்ப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளபோதும், கர்நாடக சங்கீதம், இந்துநாகரீக பாடங்களுக்கான விண்ணப்பங்கள் வடமாகாணத்தில் இதுவரை கோரப்படவில்லை என வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி அமைச்சரும், பிரதமருமான ஹரிணி அமரசூயவின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார். கர்நாடக சங்கீத பாடத்திற்கு யாழ்ப்பாணத்தில் 81ஆசிரியர்கள் மிகையாக உள்ளபோதும் வன்னியில் 46ஆசிரியர்கள் பற்றாக்குறை காணப்படுவதாகவும், அதேபோல இந்துநாகரீக பாட ஆசிரியர்களும் வடமாகாணத்தில் சமச்சீரற்ற விதத்தில் சமச்சீரற்ற விதத்தில் பரவலாக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது சுட்டிக்காட்டினார். எனவே வடக்குமாகாணத்தில் நிலவும் இவ்வாறான சமச்சீரற்ற ஆசிரியர் வளப்பரவலாக்கத்தை சீர்ப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் பிரதமர் ஹரிணி…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

டைனமைட் வெடிபொருள் பாவித்து மீன் பிடியில் ஈடுபட்ட ஒருவர் மீனுடன் கைது

மன்னார் ஓலைத்தொடுவாய் கடற்கரை பகுதியில் சட்ட விரோதமாக டைனமைட் வெடிபொருள் பாவித்து மீன் பிடியில் ஈடுபட்ட ஒருவர் மீனுடன்  நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளால் நேற்று  கைது செய்யப்பட்டுள்ளார். ஓலைத்தொடுவாய்  பகுதியைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக  நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த நபரிடம் இருந்து டைனமைட் வெடிபொருள் பாவித்து பிடிக்கப்பட்ட சுமார் 450 கிலோ மீன் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட மீன், வாகனம் ஒன்றும், மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கிரான் பாலத்தினை ஊடறுத்து வெள்ள நீர் பாய்வதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் மட்டு கிரான் பாலத்தினை ஊடறுத்து வெள்ள நீர் பாய்வதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கன மழையால் தாழ் நிலப் பகுதிகள் நீரில் மூழ்க ஆரம்பித்துள்ளதுடன் போக்குவரத்துப் பாதைகளிலும் நீர் தேங்க ஆரம்பித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று முதல் பெய்து வரும் கன மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெரும்போக அறுவடைகள் நடைபெற்றுவருவதன் காரணமாக விவசாயிகள் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதையும் காணமுடிகின்றது. அறுவடை செயற்பாடுகள் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதுடன் அறுவடை செய்தவர்கள் நெல்லை பாதுகாப்பதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் இலங்கை மத்திய வங்கிக்கு விஜயம்

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீயேவா, இலங்கைக்கு மேற்கொண்டுள்ள உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக நேற்று (17) இலங்கை மத்திய வங்கிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இலங்கை சர்வதேச நாணய நிதியத்தில் உறுப்பினராகி 75 ஆண்டுகள் நிறைவடைவதையும், இலங்கை மத்திய வங்கியின் 75வது ஆண்டு நிறைவையும் ஒட்டியே இந்த விஜயம் அமைந்தது. மத்திய வங்கி வளாகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது, கலாநிதி ஜோர்ஜீயேவா, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளைச் சந்தித்தார். தற்போதைய நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் வழங்கப்பட்ட உறுதியான ஆதரவிற்கும், முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு மீள்வதற்கு உதவும் வகையில் கடன் மறுசீரமைப்பு செயல்முறையை நிறைவு செய்ய தீவிரமாக ஒத்துழைத்தமைக்கும் முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் அவரது குழுவினருக்கு ஆளுநர் தமது மனமார்ந்த…

மேலும் படிக்க