செய்திகள் தாயகச் செய்தி 

கிவுல் ஓயா திட்டத்தை மீளாய்வு செய்யுங்கள்; இல்லையேல் நடைமுறைப்படுத்த இடமளியோம் சத்தியலிங்கம் எம்.பி

கிவுல் ஓயா திட்டத்தை மீளாய்வு செய்யுங்கள்; இல்லையேல் நடைமுறைப்படுத்த இடமளியோம் – மணலாறில் சத்தியலிங்கம் எம்.பி இறுக்கமாக தெரிவிப்பு…! கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் விளக்கமளிக்கும் கூட்டமொன்று இன்றைய தினம் (09.02.2025) மணலாறு பகுதியில் உள்ள மகாவலி அதிகாரசபையின் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது. பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க மற்றும் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி கூட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், வவுனியா முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேசசபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர். இந்த கூட்டத்திற்காக திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் பிரதேசங்களை சேர்ந்த பிரதேசசபை உறுப்பினர்கள், கமக்காரர் அமைப்புக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக கூட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டாலும், தமிழ் பகுதிகளை சேர்ந்த பிரதேசசபை உறுப்பினர்கள், கமக்காரர் அமைப்புக்களுக்கு முறையாக அறிவிக்கப்படவில்லை. இது தொடர்பில் கூட்டத்தின்போது பாராளுமன்ற…

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

மத்திய கிழக்கு: ஒரு கத்தியின் முனையில் ஈரான் – அமெரிக்கா – இராஜதந்திரம்: போரின் ஆபத்தான சங்கமம்

மத்திய கிழக்கு: ஒரு கத்தியின் முனையில் ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ ஈரான் – அமெரிக்கா – இராஜதந்திரம்: போரின் ஆபத்தான சங்கமம் மத்திய கிழக்கு மீண்டும் ஒரு மூலோபாயத் திருப்புமுனையை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஓமான் நாட்டின் மத்தியஸ்தத்துடன் முன்னெடுக்கப்பட்ட மறைமுக இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள், தற்போது நேரடி மோதலாக வெடிக்கும் அபாயத்தில் தள்ளப்பட்டுள்ளன. போர்க் கப்பல்கள், போர் விமானங்கள், பொருளாதாரத் தடைகள் மற்றும் குடிமக்கள் வெளியேற்ற உத்தரவுகளின் நிழலில் இந்தப் பேச்சுவார்த்தைகள் தள்ளாடுகின்றன. வாஷிங்டன் மீது தெஹ்ரானின் கடும் அதிருப்தி “போர்க் கப்பல்களின் நிழலில் இராஜதந்திரம் சுவாசிக்க முடியாது” ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெஹ்ரானின் இதுவரையிலான மிகத் தெளிவான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்: மிரட்டலும் இராஜதந்திரமும் ஒன்றாகப் பயணிக்க முடியாது. மஸ்கட்டில் நடைபெற்ற மறைமுகப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, அமெரிக்காவின் “நேர்மையை” அவர் வெளிப்படையாகக் கேள்விக்குள்ளாக்கினார். இதற்குக் காரணமாக அவர் சுட்டிக்காட்டிய…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

குடமுருட்டிப் பாலத்தை நிர்மாணிக்க வலியுறுத்திய ரவிகரன் எம்.பி

குடமுருட்டிப் பாலத்தை நிர்மாணிக்க வலியுறுத்திய ரவிகரன் எம்.பி; பாலத்தை அமைக்க நிதிஒதுக்கீடுசெய்யப்படும் – பிரதமசெயலாளர் தனுஜா முருகேசன் பதில் வவுனியாவடக்கு பாரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட நெடுங்கேணி கூழாங்குளம் வீதியில் அமைந்துள்ள குடமுருட்டிப் பாலத்தை நிர்மாணிக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார். வவுனியா வடக்கு மாவட்டசெயலக மாநாட்டுமண்டபத்தில் 10.02.2026இன்று இடம்பெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் விமல் ரத்நாயக்கவிடமே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இக்கோரிக்கையினை முன்வைத்திருந்தார். அதற்கமைய குறித்த பாலம் தொடர்பில் அமைச்சர் விமல் ரத்நாயக்க வீதி அபிவிருத்தித் திணைக்களத்திடம் விளக்கங்கோரியிருந்தார். அந்தவகையில் 19மீற்றர் நீளமான குறித்த குடமுருட்டிப் பாலத்தை அமைப்பதற்கு ஏறத்தாள 80மில்லியன்ரூபா அளவில் நிதி தேவைப்படுமென வவுனியா மாவட்ட வீதி அபாவிருத்தித் திணைக்கள பிரதம பொறியியலாளர் கே.கௌசிகன் பதில் வழங்கியிருந்தார். இந்நிலையில் மிகவும் பின்தங்கிய…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

யாழில் துப்பாக்கி சூட்டு வாகனத்திலிருந்து மீட்கப்பட்ட வாள்

சமிக்ஞையை மீறி சென்றதாக கூறி இன்று அதிகாலை அல்லைப்பட்டி பகுதியில் வைத்து, ஹையேஸ் வாகனம் ஒன்றின் மீது ஊர்காவல்துறை காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் வட்டுக்கோட்டை – சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்தான். இந்நிலையில் குறித்த வாகனத்தில் இருந்து வாள் ஒன்று காவல்துறையினரால் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த சம்பவத்தின் போது மேலும் இரண்டு இளைஞர்கள் குறித்த வாகனத்தில் இருந்த நிலையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவர்களை 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

வடக்கு மற்றும் கிழக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்

வடக்கு மற்றும் கிழக்கு உலக வங்கியின் 1,000 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவித் திட்டத்தின் கீழ், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஒருங்கிணைந்த அபிவிருத்திக்காக 100 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 2026 முதல் 2031 வரை முன்னெடுக்கப்படவுள்ள இத்திட்டத்தின் மூலம் சுற்றுலா, மீன்பிடித் துறை மேம்பாடு மற்றும் தனியார் முதலீடுகளைக் கவருதல் ஊடாகப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க எதிர்பார்க்கப்படுகிறது

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

வருமானத்தை அதிகரிக்க 2017 ஆம் ஆண்டின் உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் திருத்தம்!

அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்கவும், வரி முறையை வலுப்படுத்தவும் 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2025.05.19 இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, திருத்தப்பட்ட சட்டமூலம் சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்காக சட்டமா அதிபரின் அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளது.குறித்த புதிய சட்டமூலத்தை விரைவில் அரச வர்த்தமானியில் வெளியிடவும், பாராளுமன்ற அங்கீகாரத்தை பெறவும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் எனும் வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.  

மேலும் படிக்க