சிறப்புச் செய்தி செய்திகள் 

பல்கலை மாணவர்களின் கவனயீர்ப்பிற்கு தமிழர்கள் அனைவரும் அணிதிரள்க – ரவிகரன் எம்.பி அழைப்பு

வடக்கு கிழக்கு தமிழர்களுக்கு இதுவரை சுதந்திரம் கிடைக்கவில்லை; பல்கலை மாணவர்களின் கவனயீர்ப்பிற்கு தமிழர்கள் அனைவரும் அணிதிரள்க – ரவிகரன் எம்.பி அழைப்பு இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்து 78ஆண்டுகள் ஆகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றபோதும் வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்களுக்கு இதுவரை சுதந்திரம் கிடைக்கவில்லையென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே 04.02.2026நாளையதினம் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகமாணவர்களின் ஒழுங்குபடுத்தலில் வடக்கில் கிளிநொச்சியிலும், கிழக்கில் மட்டக்களப்பிலும் இடம்பெறவுள்ள “ஸ்ரீலங்காவின் சுதந்திரநாள் தமிழர்களுக்கு கரிநாள்” என்னும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் மக்கள் அனைவரும் அணிதிரண்டு ஆதரவு நல்கவேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அழைப்புவிடுத்துள்ளார். குறித்த “ஸ்ரீலங்காவின் சுதந்திரநாள் தமிழர்களுக்கு கரிநாள்” எனும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்புவிடுக்கும்வகையில் ஊடகங்களுக்கு 03.02.2026இன்று கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கடந்த 1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்ததாகக் கூறப்படும்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி செய்திகள் 

இலங்கையின் சுதந்திர தினம் என்பது கலப்படமற்ற கறுப்பு தினமே.இயக்குநர் வ.கௌதமன்!

இலங்கையின் சுதந்திர தினம் என்பது கலப்படமற்ற கறுப்பு தினமே – தென்னிந்திய இயக்குநர் வ.கௌதமன்! இலங்கையின் சுதந்திர தினம் என்பது கலப்படமட்ட ஒரு கறுப்பு தினம் எனவும், சுதந்திர தினத்திற்கு எதிராக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்த கறுப்பு தின போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக தென்னிந்திய பிரபல திரைப்பட இயக்குனரும், தமிழ் பேரரசு கட்சியின் நிறுவுனருமாகிய வ.கௌதமன் தெரிவித்துள்ளார். சுதந்திர தினத்தை கறுப்பு தினமாக அனுஷ்டிக்க ஆதரவு தெரிவித்து அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சுதந்திரம் பெற்ற இலங்கை தேசம் வேண்டும் என்ற அடிப்படையில் உறுதியாகவும், உக்கிரமாகவும் போராடிய பங்கு தமிழர்களுக்கும் உண்டு. இந்திய ஒன்றியத்திலும், இலங்கையிலும் தமிழ் தலைவர்களின் போராட்டமும் சுதந்திரத்துக்கு காரணமாக அமைந்தது. அந்தவகையில் எஸ்.ஜே.வி.செல்வநாயகம், பொன்.அருணாசலம், பொன்.இராமநாதன், ஜி.ஜி.பொன்னம்பலம், ஈ.எம்.வி.நாகநாதன்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு – போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் சிறிதரன்

போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வேண்டுகோள் போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவரது இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களுக்கு சுதந்திரம் கிடைக்காத நிலையில் நாளைய தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்கப்படவுள்ளது.பல்கலைக்கழக மாணவர்கள் நாளையதினம் முன்னெடுக்கும் போராட்டமானது மிகவும் பெறுமதியானயானது.நாம் இனப்படுகொலை செய்யப்பட்ட இனம் எமக்கு இந்த நாட்டில் சமஷ்டி முறையிலாக தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சனைகள் 07 ஆண்டுகளைத் தாண்டியும் தீர்க்கப்படவில்லை.எனவே சுதந்திர தினத்தன்று இடம்பெறும் கரிநாளுக்கு வர்த்தக சங்கம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் என்றார்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

இலங்கை வாழ் மக்கள் இன்னமும் முழுமையான சுதந்திரத்தை அடையவில்லை.மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

இலங்கை வாழ் மக்கள் இன்னமும் முழுமையான சுதந்திரத்தை அடையவில்லையென கொழும்பு பேராயர் கர்தினால்  மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். ஆகையால் இலங்கை மக்கள் முழுமையான சுதந்திரத்தை அடைவதற்கு இன்னும் முயற்சி செய்ய வேண்டியுள்ளதாகவும் அதற்கு சட்டத்தின் ஆட்சி (Rule of Law) வலுப்படுத்தப்படுவது அவசியமெனவும் அவர் குறிப்பிட்டார். சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிட்ட  விசேட  செய்தியிலேயே அவர் இவ்வாறு  தெரிவித்தார். அதில் அவர் மேலும் தெரிவித்ததாவது, “முழுமையான சுதந்திரத்தை அடைய சட்டத்தின் ஆட்சி இன்றியமையாதது.  சட்டத்தை  சமமாகவும் நீதியுடனும் கடைப்பிடிக்கும்  சமூகமே  உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்க முடியும்.  நாட்டின் தற்போதைய நிலையை அவதானிக்கும்போது  பொருளாதாரம், அரசியல், சமூகம் மற்றும் பண்பாட்டுத் துறைகளில் இலங்கை பெரிதளவில் முன்னேற்றம் கண்டுள்ளதாக கூற முடியாது.  உண்மையான சுதந்திரமென்பது வெறும் அரசியல் சுயாட்சி மட்டுமல்ல. அது நீதியும் சமத்துவமும் பொறுப்புணர்வும் நிலவும் சமூக அமைப்பை…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

நச்சிக்குடா கடற்கரைப் பகுதியில் ஆமை இறைச்சி மற்றும் முட்டைகளுடன் 03 சந்தேக நபர்கள் கைது.

மன்னார் நச்சிக்குடா கடற்கரைப் பகுதியில் ஆமை இறைச்சி மற்றும் முட்டைகளுடன் 03 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது. ============================================ மன்னார் யாழ்ப்பாணம் பிரதான வீதி, நச்சிக்குடா கடற்கரைப் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது ஆமை இறைச்சி ஆமை முட்டைகளுடன் ன் மூன்று (03) சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளதோடு, அவர்களிடமிருந்து படகு ஒன்றையும் கைப்பற்றி உள்ளனர். மன்னார் நச்சிக்குடா கடற்கரைப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வடமத்திய கடற்படை கட்டளையைச் சேர்ந்த இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான படகு ஒன்று சோதனை செய்யப்பட்டது. அந்த நேரத்தில் சட்டவிரோத விற்பனைக்கு தயாராக இருந்த சுமார் 17 கிலோ ஆமை இறைச்சி மற்றும் 39 ஆமை முட்டைகள் மற்றும் ஒரு படகுடன் குறித்த மூன்று சந்தேக நபர்களை…

மேலும் படிக்க