சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

டினோஜாவின் சந்தேகத்தி ற்கிடமான மரணம்; நீதிகோரி வைத்திய சாலையை முற்றுகையிட்ட மக்கள்

சிறுமி டினோஜாவின் சந்தேகத்திற்கிடமான மரணம்; நீதிகோரி வைத்தியசாலையை முற்றுகையிட்ட மக்கள் முல்லைத்தீவு – சிலாவத்தை பகுதியைச்சேர்ந்த குகநேசன் டினோஜா என்னும் சிறுமி அண்மையில் சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்திருந்தார். இந்நிலையில் இவ்வாறு சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதிகோரி 29.12.2025இன்று முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை நுழைவாயிலை முற்றுகையிட்டு பெருந்திரளான மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்தவகையில் சிறுமி டினோஜாவின் மரணத்திற்கு நீதியைப் பெற்றுத்தருமாறு வலியுறுத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள், சிறுமியின் மரணத்திற்கு நீதிகோரும்வகையிலான வாசகங்கள் அடங்கிய பதாதைகளைத் தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது வைத்தியசாலை பணிப்பாளரை குறித்த இடத்திற்கு வரவளைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் சிறுமியின் மரணம் தொடர்பில் கேள்வி எழுப்பியதுடன், குறித்த மரணத்திற்கு நீதிகிடைக்கவேண்டுமெனவும் வலியுறுத்தியிருந்தனர். தொடர்ந்து குறித்த சிறுமியின் சந்தேகத்திற்கிடமான மரணத்திற்கு நீதியைப் பெற்றுத்தருமாறும் இதன்போது மக்களால் மகஜர்களும் கைளிக்கப்பட்டன. அந்தவகையில்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

மத்திய சுகாதார அமைச்சு விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளது

சிலாவத்தைப் பிரதேசத்தில் உணவு ஒவ்வாமை காரணமாக 12 வயதுச் சிறுமி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சு விசாரணைக்கு ஒத்துழைப்பு முல்லைத்தீவு மாவட்டத்தின் சிலாவத்தைப் பிரதேசத்தில் உணவு ஒவ்வாமை காரணமாக 12 வயதுச் சிறுமி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சு விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. இதற்கமைய மத்திய சுகாதார அமைச்சின் விசேட விசாரணைக் குழு முல்லைத்தீவுக்கு சென்றதாகவும் இது தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தனக்கு அறிவித்ததாகவும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் சமன் பத்திரன தெரிவித்தார். 6 விசேட நிபுணர்களைக் கொண்ட அறுவர் அடங்கிய குழு நேற்றய தினம் முல்லைதீவு மாவட்ட பொது மருத்துவமனைக்கு சென்று சிறுமியின் மரணம் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.இவ்வாறிருக்க மாகாணத்துக்குள் ஆரம்பிக்கப்பட்ட நிபுணர் குழுவின் விசாரணை அறிக்கை எதிர்வரும் ஒரு வாரத்தில் கிடைக்குமென்று…

மேலும் படிக்க