சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

முன்னாள் போராளி வைதேகி நேற்றைய தினம் 23.12.2025 சுகயீனம் காரணமாக ஆஸ்திரேலியாவில் சாவடைந்துள்ளார்

தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் மகளிர் படையணியில் தேசவிடுதலைக்காக பல களங்கள் பல்துறை பணிகளிலும் இறுதிவரை பயணித்த மகளிர் போராளி வைதேகி 23.12.2025 இன்று சுகயீனம் காரணமாக ஆஸ்திரேலியாவில் சாவடைந்துள்ளார்.அவருக்கு எமது இறுதிவணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

முல்லை மாவட்டத்தில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள விசேட கவனம் அமைச்சர் ஆனந்த விஜேபால

முல்லைத்தீவு மாவட்டத்தில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் நிவாரணம் வழங்கவும் அரசாங்கத்தால் விசேட கவனம் செலுத்தப்பட்டு நிதி ஒதுக்கப்படுமென்று அமைச்சர் ஆனந்த விஜேபால வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் நிவாரணம் வழங்கவும் அரசாங்கத்தால் விசேட கவனம் செலுத்தப்பட்டு நிதி ஒதுக்கப்படுமென்று அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் அனர்த்த நிவாரணப் பணிகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். வெள்ள அனர்த்த நிலைமை தொடர்பாக ஆராயும் சிறப்பு முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று முன்தினம் அம்மாவட்டச் செயலகத்தின் பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால தலைமையில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை மற்றும் அதனால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பாகவும் நிவாரணப்பணிகள் தொடர்பாகவும் குளங்கள், வீதிகள் பாலங்களுக்கு ஏற்பட்டுள்ள…

மேலும் படிக்க
உலக செய்திகள் செய்திகள் 

இஸ்ரேலின் தாக்குதல்களில் காசாவில் மேலும் இரு பலஸ்தீனர்கள் உயிரிழப்பு

முடக்கப்பட்டு வரும் உதவிகள் குறித்து ஐ.நா. கவலை   காசாவில் தொடர்ந்து போர் நிறுத்த மீறலில் ஈடுபடும் இஸ்ரேலின் தாக்குதல்களில் அங்கு மேலும் இரு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு பல இடங்களிலும் வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களும் இடம்பெற்றுள்ளன. காசா நகரின் கிழக்கு மற்றும் துபா பகுதிகளில் இஸ்ரேலிய போர் விமானங்கள் நேற்று (23) குண்டுகளை வீசியதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய போர் விமானங்கள் தெற்கு காசாவின் கான் யூனிஸின் கிழக்கு பகுதி மற்றும் டெயிர் அல் பலாஹ்விலும் தாக்குதல்களை நடத்தி இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.   போர் நிறுத்தத்தை இஸ்ரேல் தீவிரமாகவும் திட்டமிட்ட வகையிலும் மீறுவதாக கண்டித்த காசா அரச ஊடக அலுவலகம், போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது தொடக்கம் அதனை இஸ்ரேல் 875 தடவைகள் மீறி இருப்பதாக சுட்டிக்காட்டியது.…

மேலும் படிக்க