சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

செம்மணியின் இரண்டாம் கட்ட எட்டாம் நாள் அகழ்வின் போது 40 மனித எச்சங்கள்

செம்மணியின் இரண்டாம் கட்ட எட்டாம் நாள் அகழ்வின் போது 40 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்டம் இன்று எட்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்டது.
யாழ் நீதவான் நீதிமன்ற நீதிபதி A.A. ஆனந்தராஜா அவர்களின் மேற்பார்வையில், தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ் சோமதேவா மற்றும் சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் பங்கேற்போடு அகழ்வு இன்று நடைபெற்றது.
இதுவரை 34 முழுமையான மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. மேலதிகமாக, 6 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில் இரண்டு எலும்புக்கூடுகள் குழந்தைகளுடையதாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment