நெல்சந்தைப்படுத்தல் சபையின் அசமந்தப்போக்கினால் விவசாயிகள் அவதி – ரவிகரன் சுட்டிக்காட்டு
முல்லையில் களஞ்சியசாலைகளை நிறைத்துள்ள 304மெற்றிக் தொன் நெல்; நெல்சந்தைப்படுத்தல் சபையின் அசமந்தப்போக்கினால் விவசாயிகள் அவதி – ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2025ஆம் ஆண்டு சிறுபோகத்தின்போது நெல்சந்தைப்படுத்தல் சபையினால் கொள்வனவுசெய்யப்பட்ட 304மெற்றிக்தொன் நெல் பயன்டுத்தப்படாமல் களஞ்சியசாலைகளில் நிறைந்திருப்பதால் ஏற்பட்டுள்ள களஞ்சியசாலை நெருக்கடியினாலேயே நெல்சந்தைப்படுத்தல்சபையினால் நெற்கொள்வனவு தற்போது விவசாயிகளிடமிருந்து நெற்கொள்வனவு மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அறியமுடிவதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். நெல் சந்தைப்படுத்தல் சபை 2025ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொள்வனவுசெய்யப்பட்ட நெல்லினை உரியவகையில் களஞ்சியசாலைகளில் இருந்து அகற்றியிருந்தால் தற்போது விவசாயிகளிடமிருந்து நெற்கொள்வனவு மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டிருக்காதெனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், தற்போது அரசால் நெற்கொள்வனவிற்கென நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளபோதும் நெல்சந்தைப்படுத்தல் சபையின் அசமந்தப்போக்கினாலேயே நெற்கொள்வனவில் தாமதம் ஏற்பட்டு விவசாயிகள் அவதியுறும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். இதுதொடர்பில் 06.02.2026இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு…
மேலும் படிக்க