செய்திகள் தாயகச் செய்தி 

கிவுல் ஓயா திட்டத்தை மீளாய்வு செய்யுங்கள்; இல்லையேல் நடைமுறைப்படுத்த இடமளியோம் சத்தியலிங்கம் எம்.பி

கிவுல் ஓயா திட்டத்தை மீளாய்வு செய்யுங்கள்; இல்லையேல் நடைமுறைப்படுத்த இடமளியோம் – மணலாறில் சத்தியலிங்கம் எம்.பி இறுக்கமாக தெரிவிப்பு…! கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் விளக்கமளிக்கும் கூட்டமொன்று இன்றைய தினம் (09.02.2025) மணலாறு பகுதியில் உள்ள மகாவலி அதிகாரசபையின் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது. பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க மற்றும் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி கூட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், வவுனியா முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேசசபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர். இந்த கூட்டத்திற்காக திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் பிரதேசங்களை சேர்ந்த பிரதேசசபை உறுப்பினர்கள், கமக்காரர் அமைப்புக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக கூட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டாலும், தமிழ் பகுதிகளை சேர்ந்த பிரதேசசபை உறுப்பினர்கள், கமக்காரர் அமைப்புக்களுக்கு முறையாக அறிவிக்கப்படவில்லை. இது தொடர்பில் கூட்டத்தின்போது பாராளுமன்ற…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

குடமுருட்டிப் பாலத்தை நிர்மாணிக்க வலியுறுத்திய ரவிகரன் எம்.பி

குடமுருட்டிப் பாலத்தை நிர்மாணிக்க வலியுறுத்திய ரவிகரன் எம்.பி; பாலத்தை அமைக்க நிதிஒதுக்கீடுசெய்யப்படும் – பிரதமசெயலாளர் தனுஜா முருகேசன் பதில் வவுனியாவடக்கு பாரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட நெடுங்கேணி கூழாங்குளம் வீதியில் அமைந்துள்ள குடமுருட்டிப் பாலத்தை நிர்மாணிக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார். வவுனியா வடக்கு மாவட்டசெயலக மாநாட்டுமண்டபத்தில் 10.02.2026இன்று இடம்பெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் விமல் ரத்நாயக்கவிடமே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இக்கோரிக்கையினை முன்வைத்திருந்தார். அதற்கமைய குறித்த பாலம் தொடர்பில் அமைச்சர் விமல் ரத்நாயக்க வீதி அபிவிருத்தித் திணைக்களத்திடம் விளக்கங்கோரியிருந்தார். அந்தவகையில் 19மீற்றர் நீளமான குறித்த குடமுருட்டிப் பாலத்தை அமைப்பதற்கு ஏறத்தாள 80மில்லியன்ரூபா அளவில் நிதி தேவைப்படுமென வவுனியா மாவட்ட வீதி அபாவிருத்தித் திணைக்கள பிரதம பொறியியலாளர் கே.கௌசிகன் பதில் வழங்கியிருந்தார். இந்நிலையில் மிகவும் பின்தங்கிய…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

யாழில் துப்பாக்கி சூட்டு வாகனத்திலிருந்து மீட்கப்பட்ட வாள்

சமிக்ஞையை மீறி சென்றதாக கூறி இன்று அதிகாலை அல்லைப்பட்டி பகுதியில் வைத்து, ஹையேஸ் வாகனம் ஒன்றின் மீது ஊர்காவல்துறை காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் வட்டுக்கோட்டை – சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்தான். இந்நிலையில் குறித்த வாகனத்தில் இருந்து வாள் ஒன்று காவல்துறையினரால் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த சம்பவத்தின் போது மேலும் இரண்டு இளைஞர்கள் குறித்த வாகனத்தில் இருந்த நிலையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவர்களை 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

தமிழ் மக்களுக்கு மரணத்தை ஏற்படுத்து கின்ற வலியே மகாவலி அதிகார சபை.ரவிகரன் எம்.பி

தமிழ் மக்களுக்கு மரணத்தை ஏற்படுத்துகின்ற வலியே மகாவலி அதிகாரசபை எனச்சுட்டிக்காட்டி கிவுல் ஓயா திட்டத்தை கடுமையாக எதிர்த்த ரவிகரன் எம்.பி தமக்கு மரணத்தை ஏற்படுத்துகின்ற வலியாகவே மகாவலி அதிகாரசபையை தமிழ் மக்கள் நோக்குவதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியதுடன், தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிப்புச்செய்து மேற்கொள்ளப்படும் மகாவலி அதிகாரசபையின் கிவுல் ஓயாத்திட்டத்திற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் மிகக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். அத்தோடு தமிழர் தாயகத்தில் ஆக்கிரமிப்புச் செயற்படுகளில் ஈடுபடும் மகாவலி அதிகாரசபை போன்ற திணைக்களங்களினாலேயே தேசியமக்கள் சக்தியின் ஆட்சி வீழ்ச்சியடையுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். மகாவலி அதிகாரசபையினால் முன்னெடுக்கப்படவுள்ள கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் 09.02.2026இன்று இடம்பெற்ற தெளிவூட்டல் கலந்துரையாடலில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போது நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், ■ கடுமையான அழுத்தங்களினாலேயே…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

கச்சத்தீவு திருவிழாவை முன்னிட்டு முன்னாயத்த நடவடிக்கை களில் இலங்கை கடற்படை

வரலாற்றுச் சிறப்பு மிக்க கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த திருவிழா எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில் கடற்படையினர் முன்னாயத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இம்முறை இலங்கையைச் சேர்ந்த 4000 யாத்திரிகர்களும் இந்தியாவைச் சேர்ந்த 4000 யாத்திரிகர்களுக்குமென 8000 யாத்திரிகர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை இம்முறை குறிகட்டுவானிலிருந்து கச்சதீவிற்கு படகுச் சேவைக்கான ஒருவழிக்கட்டணமாக ரூ. 1200 அறவிடுவது எனவும், நெடுந்தீவிலிருந்து கச்சதீவிற்கான ஒரு வழிக்கட்டணமாக ரூ. 1000 அறவிடுவது எனவும் குறிகட்டுவானிலிருந்து 46 தனியார் படகுகள் சேவையில் ஈடுபடவுள்ளது. அத்துடன் இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் போக்குவரத்து துறையினரின் பஸ்கள் 27 ஆம் திகதி காலை 4.00 மணி முதல் பி. ப 01.00 மணி வரை யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திலிருந்து சேவையில் ஈடுபடும். கடற்படையினரின் ஒழுங்கமைப்பில் கச்சதீவில்…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

திருமலை புத்தர் சிலை விவகாரம் : கஸ்ஸப தேரர் உள்ளிட் டோருக்கு நீதிமன்றின் உத்தரவு

திருகோணமலை டச்சு பே கடற்கரைக்கு அருகில் சட்டவிரோதமாக புத்தர் சிலை நிறுவி கட்டுமான பணிகளை மேற்கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 10 சந்தேகநபர்கள் இன்று (09) காலை திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் அடங்கலாக மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். 2025 ஆம் ஆண்டு நவம்பர் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில், கடற்கரை பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மை திணைக்களத்தின் அனுமதி இன்றி புத்தர் சிலை நிறுவப்பட்டு கட்டுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் குறித்த திணைக்களம் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த முறைப்பாடு தொடர்பில் பலாங்கொடை கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு தேரர்கள் உள்ளிட்ட 10 சந்தேக நபர்கள்…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

குடும்பிமலை பிரதேசத்தில் 3 ரொக்கட் லோஞ்சர்கள் மீட்பு.

சுவீடன் நாட்டில் தயாரிக்கப்பட்ட 3 ரொக்கட் லோஞ்சர்கள் மட்டக்களப்பின் குடும்பிமலை பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டதாக வாழைச்சேனை காவல்துறை.தெரிவித்தனர். இது தொடர்பாக பொலன்னறுவை இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலை அடுத்து குடும்பிமலை பிரதேசத்தில் அரங்கலாவ விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினரின் உதவியுடன் அண்மையில் இவை மீட்கப்பட்டதாகவும் இந்த ரொக்கட் லோஞ்சர்கள் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் காவல்துறை.தெரிவித்தனர். இவ்வாறு மீட்கப்பட்ட ரொக்கட் லோஞ்சர்கள் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணையை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை  காவல்துறை. மேலும் குறிப்பிட்டனர். இதனையடுத்து, இந்த ஆயுதங்கள் எவ்வாறு அந்தப் பிரதேசத்திற்கு கொண்டு வரப்பட்டன, யாரால் மற்றும் எந்த நோக்கில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டன என்பதைக் கண்டறிய பாதுகாப்புப் படைகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன. சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

சாணக்கி யனின் நியமனம்; கட்சிக்குள் புதிய சர்ச்சை.சீ.வி.கே. சிவஞானம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக இரா. சாணக்கியன் தெரிவு செய்யப்பட்டதையடுத்து கட்சிக்குள் முரண்பாடுகள் தோன்றியுள்ளதாக தெரிய வருகிறது. கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக இரா. சாணக்கியன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் சுமந்திரன் அறிவித்துள்ள போதும், இவரது நியமனம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லையென சீ.வி.கே.சிவஞானம் அறிவித்துள்ளார். இதிலிருந்து, இந்நியமனம் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சிக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இவ்விடயத்தில்கூட கருத்து ஒற்றுமைப்பட முடியாதுள்ள இக்கட்சி, இவ்விடயத்தில்கூட கருத்து ஒற்றுமைப்பட முடியாதுள்ள இக்கட்சி, எதிர்கால அரசியல் சவால்களை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்ற கேள்வியையே மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது. தலைமைப் பதவிகளைச் சுற்றிய உள்முரண்பாடுகள் தொடருமாயின், அது கட்சியின் நம்பகத்தன்மையையும், தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே, தனிநபர் ஆதிக்கங்களை விட கட்சியின்…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

சுகாதார சீர்கேட்டுடன் வவுனியா நகரில் இயங்கிய உணவகங்கள் மூடப்பட்டுள்ளது

சுகாதார சீர்கேட்டுடன் வவுனியா நகரில்  இயங்கிய பிரபல உணவகங்கள் சுகாதார பரிசோதகர்களால் மூடப்பட்டுள்ளது குறித்த உணவங்கள் சுகாதார பரிசோதகர்களால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது அவை சுகாதார சீர்கேட்டுடன் இருந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து குறித்த உணவகங்களை நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் திருத்தப்பணிகளுக்காக எதிர்வரும் 14 நாட்களுக்கு மூடுமாறு சுகாதார பரிசோதகர்களால் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.குறிப்பாக ஹொறவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள இரு உணவகங்கள், பழைய பஸ் நிலையப்பகுதியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகம், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்கு அண்மையில் அமைந்துள்ள பிரபல உணவகங்களுக்கே இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

நெல்சந்தைப்படுத்தல் சபையின் அசமந்தப்போக்கினால் விவசாயிகள் அவதி – ரவிகரன் சுட்டிக்காட்டு

முல்லையில் களஞ்சியசாலைகளை நிறைத்துள்ள 304மெற்றிக் தொன் நெல்; நெல்சந்தைப்படுத்தல் சபையின் அசமந்தப்போக்கினால் விவசாயிகள் அவதி – ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2025ஆம் ஆண்டு சிறுபோகத்தின்போது நெல்சந்தைப்படுத்தல் சபையினால் கொள்வனவுசெய்யப்பட்ட 304மெற்றிக்தொன் நெல் பயன்டுத்தப்படாமல் களஞ்சியசாலைகளில் நிறைந்திருப்பதால் ஏற்பட்டுள்ள களஞ்சியசாலை நெருக்கடியினாலேயே நெல்சந்தைப்படுத்தல்சபையினால் நெற்கொள்வனவு தற்போது விவசாயிகளிடமிருந்து நெற்கொள்வனவு மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அறியமுடிவதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். நெல் சந்தைப்படுத்தல் சபை 2025ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொள்வனவுசெய்யப்பட்ட நெல்லினை உரியவகையில் களஞ்சியசாலைகளில் இருந்து அகற்றியிருந்தால் தற்போது விவசாயிகளிடமிருந்து நெற்கொள்வனவு மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டிருக்காதெனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், தற்போது அரசால் நெற்கொள்வனவிற்கென நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளபோதும் நெல்சந்தைப்படுத்தல் சபையின் அசமந்தப்போக்கினாலேயே நெற்கொள்வனவில் தாமதம் ஏற்பட்டு விவசாயிகள் அவதியுறும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். இதுதொடர்பில் 06.02.2026இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு…

மேலும் படிக்க