இலங்கை செய்தி. செய்திகள் 

கதிரியக்க தொழில்நுட்ப வியலாளர்கள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

நேற்றையதினம் அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கதினால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டமானது இன்று (22) காலை 8 மணி முதல் 7 நாட்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாளிகாவத்தை சிறுநீரக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளரின் தன்னிச்சையான செயல்பாடுகளுக்கு எதிராக சுகாதார அமைச்சு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த பிரச்சினை தொடர்பில் நேற்றையதினம் இரவு சுகாதார பிரதி அமைச்சருடன் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றது. இதன்போது, மாளிகாவத்தை சிறுநீரக வைத்தியசாலையின் பதில் பிரதிப் பணிப்பாளராக கடமையாற்றும் நபரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சட்டவிரோத மற்றும் ஒழுக்கமற்ற செயல் தொடர்பில் ஏற்கனவே உடனடி விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அத்துடன், ஒரு வார காலத்திற்குள் சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக பக்கச்சார்பற்ற விசாரணைக்குத் தேவையான சூழலை ஏற்படுத்தித் தருவதாகவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த வைத்தியசாலையின்…

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றுமை உடைகிறதா?

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றுமை உடைகிறதா? ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ கிரீன்லாந்து, வரி விதிப்புகள் மற்றும் தசாப்தங்களில் காணாத மிகப்பெரிய அட்லாண்டிக் கடந்த நெருக்கடி ✦ அறிமுகம்: நட்பு நாடுகளிலிருந்து எதிரிகளாகவா? ஆர்க்டிக் பிராந்தியத்தைச் சார்ந்த ஒரு மூலோபாயக் கருத்து வேறுபாடாக ஆரம்பித்த விடயம், இன்று முழுமையான அட்லாண்டிக் கடந்த (Transatlantic) அரசியல்-பொருளாதார நெருக்கடியாக உருவெடுத்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கிரீன்லாந்து விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக விடுத்துள்ள வரி விதிப்பு (Tariff) மிரட்டல்களும், கட்டாய அழுத்தங்களும் ஐரோப்பாவை ஆழ்ந்த கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளன. இந்த நிலைமை, ➽ ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றுமையை மட்டுமல்ல, ➽ நேட்டோ (NATO) கூட்டணியின் அடித்தளத்தையே சோதிக்கும் அளவிற்கு தீவிரமடைந்துள்ளது. நீண்ட காலமாக அமைதியான மூலோபாயப் பகுதியாகக் கருதப்பட்ட கிரீன்லாந்து, இப்போது ➽ வர்த்தகப் போர், ➽ கூட்டணி அரசியல், ➽ ஆர்க்டிக் இராணுவமயமாக்கல், ➽…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

அரசு வறுமையையும் ஏற்படுத்திவிட்டு மறுபுறம் அஸ்வெஸ்ம ஒழிப்புத் திட்டம் ; ரவிகரன் குற்றச்சாட்டு

அரசு மக்களுக்கு வறுமையையும் ஏற்படுத்திவிட்டு மறுபுறம் அஸ்வெஸ்ம என்ற வறுமைஒழிப்புத் திட்டத்தையும் செயற்படுத்துகின்றது; ரவிகரன் எம்.பி குற்றச்சாட்டு படையினர் மற்றும் அரசதிணைக்களங்கள் மக்களின் வாழ்வாதாரக் காணிகளை அபகரித்திருத்தல், சட்டவிரோத கடற்றொழில் மற்றும் இந்திய இழுவைப்படகுகளைக் கட்டுப்படுத்த தவறுதல், இறுதிப்போரில் ஒப்படைக்கப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கத்தவறுதல் உள்ளிட்ட செயற்பாடுகளின்மூலம் அரசானது மக்களுக்கு வறுமையை ஏற்படுத்திவிட்டு மறுபுறம் அஸ்வெஸ்ம என்ற நலன்புரி நன்மைகள் என்னும் வறுமை ஒழிப்புத் திட்டத்தை திட்டத்தை செயற்படுத்துவதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். எனவே உண்ண உணவுக்கு மாற்றாக உணவைப் பயிரிட்ட மக்களின் வாழ்வாதார நிலங்களையும், குடியிருப்பு நிலங்களையும் விடுவிக்குமாறும், தரையிலும் கடலிலும் மக்களை தொழில் புரியக்கூடியவகையில் வழிவகைகளை ஏற்படுத்துமாறும், காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் சிறையில் வாடும் உறவுகளை விடுவித்து அவர்கள் குடும்பங்களை ஆற்றுப்படுத்துமாறும் நாடாளுமன்ற உறுப்பினர்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் 400 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 1750 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது

பெருந்தோட்ட தொழிலாளர்களின் மாதாந்திர சம்பளம் இம்மாதம் முதல் 400 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 1750 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பளம் இம்மாதம் முதல் 400 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.இதன்பிரகாரம் ,பெருந்தோட்ட தொழிலாளர்களின் மாதாந்த சம்பளம் 1750 ரூபா வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு பிரச்சினை என்பது பல வருடங்களாக நிறைவேற்றப்படாத கோரிக்கையாகவே இருந்து வந்தது. இந்நிலையில், தற்போதைய அரசாங்கம் மூலம் முன்வைக்கப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான அடிப்படை சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்தது.பெருந்தோட்ட கம்பனிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்ட இந்த தீர்மானத்துக்கமைய, இம்மாதத்திலிருந்து பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பளம் 400 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

2000 ரூபா நாணயத் தாள்கள் குறித்து மத்திய வங்கி  விசேட அறிக்கை

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள 2000 ரூபா நாணயத் தாள்கள் குறித்து மத்திய வங்கி  விசேட அறிக்கை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள 2000 ரூபா நாணயத் தாள்கள் குறித்து மத்திய வங்கி  விசேட அறிக்கை வௌியிட்டுள்ளது. நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்த புதிய நாணயத்தாள்களின் முக்கிய பாதுகாப்பு அம்சங்களடங்கிய தகவல்களே மத்திய வங்கியால் வெளியிடப்பட்டுள்ளன. இத்தாளின் நம்பகத் தன்மையை எளிதாக அடையாளம் காண்பதற்கான அறிவுரைகள் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இந்த 2000 ரூபா நாணயத் தாளை வெளிச்சத்திற்கு மேலே உயர்த்திப் பிடித்தால்,வாளினை கொண்ட சிங்கம் முழுமையாக தெளிவாக தெரியும், நிறம் மாறும். பாதுகாப்பு நூல் நீல நிறத்தில் இருந்து பச்சை நிறத்திற்கு மாறி, கொழும்பில் உள்ள கடிகார கோபுரத்தினை காட்டுகிறது.இதிலிருந்து போலித்தாள்களை அடையாளம் காண முடியும். மேலும் பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கு…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

56ஆவது உலகப் பொருளாதார மகாநாட்டிற்கு. சுவிட்சர்லாந்து புறப்பட்டார் பிரதமர் ஹரிணி

சுவிட்சர்லாந்தின்(Davos-Klosters ) டாவோஸ்-குளோஸ்டர்ஸ் நகரில் நடைபெறவுள்ள 56ஆவது உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் இலங்கையிலிருந்து புறப்பட்டார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ்-குளோஸ்டர்ஸ் நகரில் 2026 ஜனவரி 19 முதல் 23 வரை நடைபெறவுள்ள உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF): 56ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இன்று (19) அதிகாலை இலங்கையிலிருந்து புறப்பட்டார். “A Spirit of Dialogue” (உரையாடல் மனப்பாங்கு) எனும் தொனிப்பொருளின் கீழ் உலகப் பொருளாதார மன்றம் – 2026 கூட்டப்படவுள்ளது. இதில் அரச தலைவர்கள், முன்னனி பன்னாட்டு நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பப் புத்தாக்கச் சிந்தனையாளர்கள் உட்பட 3,000 இற்கும் மேற்பட்ட உலகளாவிய தலைவர்கள் ஒன்றிணையவுள்ளனர். இவ்விஜயத்தின்போது, பிரதமர் சர்வதேச மட்டத்திலான முக்கிய தலைவர்கள், உலகளாவிய நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் ஏனைய…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

வல்லைப்பாலத்தடியில் கார் கவிழ்ந்து விபத்து: தந்தை, தாய் மற்றும் மகள் படுகாயம் !

வல்லைப்பாலத்தடியில் கார் கவிழ்ந்து விபத்து: தந்தை, தாய் மற்றும் மகள் படுகாயம் ! யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் நேற்றைய தினம்.மாலை இடம்பெற்ற இந்த விபத்தில், காரின் கட்டுப்பாட்டை இழந்த சாரதி, அதனை வீதியோரத்திலிருந்த பாலத்திற்குள் செலுத்தியமையே விபத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. அதிவேகமாக வந்த கார், வல்லைப் பகுதியில் உள்ள பாலத்திற்குள் பாய்ந்து தலைகீழாகக் கவிழ்ந்துள்ளது. இதன்போது கார் அங்கிருந்த சேற்றுக்குள் புதைந்த நிலையில், அதில் பயணித்தவர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர். இந்த விபத்தில் திருநெல்வேலி ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் மகள் ஆகிய மூவரும் பகாயமடைந்தனர். காயமடைந்த மூவரும் உடனடியாக மீட்கப்பட்டு மந்திகை ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், விபத்துக்குள்ளான காரை மீட்டெடுக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க
ஈழ அரசியல் ஆய்வு கட்டுரை சிறப்புச் செய்தி 

கேணல் கிட்டு : ஒரு கடிதம், ஒரு வாழ்வு, ஒரு தேசியத் தத்துவம் 𑁍 ஒரு புரட்சிகர மனதின் அறிவுசார், அறம்சார் மற்றும் வரலாற்று வாசிப்பு

கேணல் கிட்டு : ஒரு கடிதம், ஒரு வாழ்வு, ஒரு தேசியத் தத்துவம் 𑁍 ஒரு புரட்சிகர மனதின் அறிவுசார், அறம்சார் மற்றும் வரலாற்று வாசிப்பு ✦ அறிமுகம் : காலத்தைக் கடந்த ஒரு கடிதம் 1991 அக்டோபர் 21 அன்று, கிட்டு (சதாசிவம் கிருஷ்ணகுமார்) அவர்கள் ஜெனீவா நகரிலிருந்து தனது மனைவி டாலி அவர்களுக்கு ஒரு மிகுந்த தனிப்பட்ட கடிதத்தை எழுதினார். முதற்பார்வையில் இது ஒரு தம்பதியரின் தனிப்பட்ட உரையாடலாகத் தோன்றினாலும், காலப்போக்கில் அது ஒரு தத்துவ அறிக்கையாகவும், ஒரு அரசியல் சாட்சியமாகவும், மேலும் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கான அறவழி வழிகாட்டியாகவும் விரிவடைகிறது. முப்பத்தி மூன்று ஆண்டுகள் கடந்தபின், 2026 ஜனவரி 16 அன்று, இந்தக் கடிதம் வெறும் நினைவாக மட்டுமல்ல; ஒரு வரலாற்று ஆவணமாக உயர்ந்து நிற்கிறது. புலம்பெயர்ந்த வாழ்வின் உணர்வுப்பூர்வமான வலி,…

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

சந்தியில் ஐரோப்பா: ரஷ்யாவை சமநிலைப்படுத்துதல், இழந்த இராஜதந்திரம்

சந்தியில் ஐரோப்பா: ரஷ்யாவை சமநிலைப்படுத்துதல், இழந்த இராஜதந்திரம் மற்றும் ஐரோப்பிய முக்கியத்துவத்தின் நெருக்கடி ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ உக்ரைன் போர் ஒரு தீர்மானக் கட்டத்தை எட்டியுள்ள வேளையில், ஐரோப்பா ஓரங்கட்டப்பட்டும், பிளவுபட்டும், தனது சொந்த மூலோபாயக் குரலை வரையறுக்கப் போராடிக்கொண்டும் நிற்கிறது ✦ ஜெர்மனியின் திருப்பம்: பிரடெரிக் மெர்ஸ் மற்றும் முழுமையான தனிமைப்படுத்தலின் முடிவு ஜெர்மன் அதிபர் பிரடெரிக் மெர்ஸ் (Friedrich Merz) வெளியிட்டுள்ள கருத்துக்கள், 2022க்குப் பிந்தைய பெர்லின் அரசியல் நிலைப்பாட்டில் ஒரு ஆழமான மற்றும் தீர்மானமான மாற்றத்தைக் குறிக்கின்றன. பல ஆண்டுகளாக மாஸ்கோவுடன் எந்தவித ஈடுபாட்டையும் மறுத்து வந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் நீண்டகாலமாகத் தவிர்த்து வந்த ஒரு புவிசார் அரசியல் உண்மையை மெர்ஸ் இப்போது பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்: ரஷ்யா ஒரு ஐரோப்பிய வல்லரசு; அதை ஐரோப்பாவின் பாதுகாப்பு கட்டமைப்பிலிருந்து நீக்கிவிட முடியாது. தனது மிகப்பெரிய ஐரோப்பிய…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

யானை தாக்கி தேறாங்கண்டல் பகுதியில் இளைஞர் உயிரிழந்துள்ளார்

துணுக்காய், தேறாங்கண்டல் பகுதியில் வயல் காவலில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் யானை தாக்கி உயிரிழந்துள்ளார். கடந்த  15 2026 அன்று இரவு, வயல் நிலங்களை யானைகளிடமிருந்து பாதுகாப்பதற்காக காவலில் இருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.  உயிரிழந்தவர் தேறாங்கண்டல் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்  முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பகுதிகளில் அண்மைக்காலமாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் இரவு வேளைகளில் வயல் காவலில் ஈடுபடுவது வழக்கமாக உள்ளது யானைகளின் ஊடுருவலைக் கட்டுப்படுத்தவும், விவசாயிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க