உலக அரசியல். கட்டுரை 

பிரித்தானிய குடிவரவு அமலாக்கம் – 2026 உள்ளூர் அளவிலான ஒடுக்குமுறைகள்,

பிரித்தானிய குடிவரவு அமலாக்கம் – 2026 உள்ளூர் அளவிலான ஒடுக்குமுறைகள், தேசியக் கட்டுப்பாடுகள் மற்றும் புதிய கைது கட்டமைப்பு ⧉═══════✦═══════⧉ அறிமுகம்: ஒரு புதிய அமலாக்கச் சகாப்தம் 2026-ஆம் ஆண்டுக்குள், ஐக்கிய இராச்சியம் குடிவரவு அமலாக்கத்தில் ஒரு தீர்க்கமான கட்டத்தை எட்டியுள்ளது. ஒரு காலத்தில் உள்துறை அமைச்சகத்தின் (Home Office) மையப்படுத்தப்பட்ட நடவடிக்கையாக மட்டுமே இருந்த இந்த அமைப்பு, இப்போது உள்ளூர் அதிகாரிகள், காவல்துறை, எல்லை முகமைகள், வேலை வழங்குநர்கள், வீட்டு உரிமையாளர்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் போக்குவரத்து நிறுவனங்கள் ஆகிய அனைத்தும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட ஒரு பல்முனை அமலாக்க அமைப்பாக மாறியுள்ளது. குடிவரவு கட்டுப்பாடு என்பது இனி எல்லை நுழைவுப் புள்ளிகளுடன் (Ports of Entry) முடிவடைவதில்லை. அது தங்குமிடம், வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதார சேவைகள் மற்றும் உள்ளூர் நிர்வாகம் என சமூகத்தின் அனைத்து அடுக்குகளிலும் ஆழமாகப்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்வு.

– உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக USD 5,000 எல்லையை கடந்துள்ளது. இதன் தாக்கம் இலங்கையிலும் தெளிவாகப் புலப்படுகிறது; இன்று கொழும்பு பெட்டா சந்தையில் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.🇱🇰 இலங்கை சந்தை நிலவரம் இன்றைய விலை (ஜனவரி 26, 2026): • 24 காரட் சவரன்: ரூ. 362,200 • 22 காரட் சவரன்: ரூ. 397,000 • விலை உயர்வு: ஒரு சவரனுக்கு சுமார் ரூ. 12,000 உயர்வு. • முன்னறிவிப்பு: பொருளாதார நிபுணர்கள் 2026 இறுதிக்குள் தங்க விலை USD 5,500 வரை செல்லக்கூடும் என கணிக்கின்றனர். செட்டியார் தெரு தங்க சந்தையின் தகவல்களுக்கு அமைய கடந்த வௌ்ளிக்கிழமை (23) ரூ. 385,000 ஆக காணப்பட்ட 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை இன்றைய தினம் ரூ.…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

சட்டவிரோதமாக மணல் அகழ்வில் மூவருக்கு ரூ. 1 இலட்சத்து 10 ஆயிரம் தண்டப்பணம்

சட்டவிரோதமாக அனுமதிப்பத்திரமின்றி மணல் அகழ்வில் ஈடுபட்டு கைப்பற்றப்பட்ட 3 உழவு இயந்திரம் உட்பட மூவருக்கு ரூ. 1 இலட்சத்து 10 ஆயிரம் தண்டப்பணம் விதித்து சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறகர் பகுதியில் அனுமதி வழங்கப்படாத இடத்தில் மண் அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய கடந்த வியாழக்கிழமை(22) சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பொலிஸ் குழுவினரும் மல்வத்தை விசேட அதிரடிப்படையினரும் இணைந்து அப்பகுதியை சுற்றி வளைத்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன் போது மண் அகழ்வில் ஈடுபட்டவர்கள் தப்பி செல்வதற்காக உழவு இயந்திரத்துடன் வீதி வழியாக சென்ற போது குறித்த சோதனை நடவடிக்கையில் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டதுடன் 3 உழவு இயந்திரங்கள் உட்பட 3 சந்தேகநபர்களையும் மணலுடன் கைது செய்து சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. பின்னர்…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

வவுனியாவில் காவல்துறையினரை மோதி தள்ளிய வாகனம்

வவுனியா ஈரட்டை, களுகுன்னமடுவ பகுதியில் இன்று 24 இடம்பெற்ற சம்பவம் .கட்டளையை மீறி பயணித்த சிறிய லொறி ஒன்றை காவல்துறை அதிகாரிகள் இருவரும் பின்தொடர்ந்து சென்றபோதே, லொறி சாரதி  காவல்துறை அதிகாரிகளை விபத்துக்குள்ளாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாககாவல்துறையினர்  தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளை விபத்துக்குள்ளாக்கிய போது  காவல்துறை அதிகாரிகள் இருவரும் தூக்கி வீசப்பட்டு வீதியின் ஒரு ஓரத்தில் விழுந்துள்ளனர். மோட்டார் சைக்கிள் லொறியில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்ட காட்சியும் பின்னால் வந்த வாகனத்தில் இருந்த ஒருவரின் கையடக்கத் தொலைபேசியில் பதிவாகியிருந்தது. விபத்தில் காயமடைந்த இரண்டு  காவல்துறையினரை தற்போது வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பூஓய பாலத்திற்கு அருகிலுள்ள இராணுவ முகாம் திசையில் சந்தேகநபர் தப்பிச் சென்றுகொண்டிருந்த போது, இராணுவத்தினர் அவரைக் கைது செய்து  காவல்துறையினரிடம்.  ஒப்படைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் லொறியும் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவத்தைப்…

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

போரின் சிவப்புக் கோடுகள்-ரஷ்யா, டொன்பாஸ் மற்றும் இராஜதந்திர மாயைகளின் சரிவு

போரின் சிவப்புக் கோடுகள் ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ ரஷ்யா, டொன்பாஸ் மற்றும் இராஜதந்திர மாயைகளின் சரிவு ✦ சமரசமற்ற கோடுகளால் வரையறுக்கப்பட்ட ஒரு போர் ✦ உக்ரைன் போரில் ரஷ்யா தனது கடுமையான புவிசார் அரசியல் கோட்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. ஒரு நிபந்தனையை அது மிகத் தெளிவாக முன்வைத்துள்ளது: கிழக்கு டொன்பாஸ் (Donbas) பிராந்தியத்திலிருந்து உக்ரைன் படைகள் முழுமையாக விலகாதவரை, அமைதி சாத்தியமற்றது. இந்த அறிவிப்பு வெறும் வாய்மொழி மிரட்டல் அல்ல — இது ஒரு மூலோபாய ரீதியான “சிவப்புக் கோடு” (Red Line). டொன்பாஸை ஒரு பேரம் பேசும் பொருளாக ரஷ்யா பார்க்கவில்லை. மாறாக, தனது தேசிய பாதுகாப்பு, இராணுவ வியூகம் மற்றும் அரசியல் நம்பகத்தன்மையோடு பின்னிப்பிணைந்த நிரந்தர பிராந்திய இலக்காகவே மாஸ்கோ அதனை கருதுகிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின்…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

கிளிநொச்சியில் இரண்டு வெடிக்காத குண்டுகள்.

கிளிநொச்சியில் இரண்டு வெடிக்காத குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பரந்தன் உமையாள்புரம் கிராம சேவையாளர் பிரிவின் விளாவோடை பகுதியில் உள்ள நெல் வயல் சாலையின் அருகே நேற்று (23-01-2026) இக்குண்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. குறித்த பகுதியில், 60 மிமீ வெடிக்காத இரண்டு குண்டுகள் இருப்பதை அப்பகுதி மக்கள் கண்டுள்ளனர். இதையடுத்து, அவர்கள் இச்சம்பவம் தொடர்பாகக் கிளிநொச்சி காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வருகை தந்த கிளிநொச்சி காவல்துறையினர், குறித்த இடத்தின் பாதுகாப்பைப் பலப்படுத்தியதுடன் வெடிக்காத இரு குண்டுகளையும் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பாக மேலதிக விசாரணைகளைக் கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

பாலத்திலிருந்து குதித்த தாழங்குடா பகுதியைச் சேர்ந்த யுவதி உயிரிழப்பு

மட்டு கல்லடிப் பாலத்திலிருந்து குதித்த தாழங்குடா பகுதியைச் சேர்ந்த யுவதி உ+யிரிழப்பு மட்டக்களப்பு தலைமையக  காவல்துறை.பிரிவிற்குட்பட்ட கல்லடி பழைய பாலத்தில் இருந்து இன்றிரவு (23) 7 மணியளவில் குதித்த யுவதி ஒருவரை பிரதேச இளைஞர்கள் மற்றும் . காவல்துறையினர் மீட்டெடுத்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் தாழங்குடா சமூர்த்தி வங்கி வீதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளங்கோ விதுசாயினி எனும் யுவதி என அடையாளங்காணப்பட்டுள்ளது இவர் கடந்த வருடம் உயர் தர பரீட்சை எழுதியவர் எனவும் தெரிய வருகின்றது. மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக காவல்துறை. மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

வேகக் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் விபத்து

கிளிநொச்சி நோக்கி பயணித்த வேன் கட்டுப்பாட்டை இழந்து குடமுருட்டி பாலத்தில் மோதி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. வேகக் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று காலை 9.30 மணியளவில் பரந்தன் பூநகரி வீதியில் இடம்பெற்றுள்ளது. விபத்திற்குள்ளான குறித்த வாகனத்தில் பயணித்த மூவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் பாராளுமன்றில் கலந்துரையாடல்;எதிர்ப்பேன் என்கிறார் – ரவிகரன் எம்.பி

கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் வெள்ளியன்று பாராளுமன்றில் கலந்துரையாடல்; எதிர்ப்பேன் என்கிறார் – ரவிகரன் எம்.பி தமிழர்கள்மீதான கட்டமைக்கப்பட்ட இனவழிப்பின் வடிவமான கிவுல்ஓயா திட்டத்தினைச் செயற்படுத்துவதுதொடர்பிலான கலந்துரையாடலொன்று எதிர்வரும் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ளநிலையில், குறித்த கலந்துரையாடலில் தம்மால் கடுமையான எதிர்ப்பு வெளியிடப்படுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் 21.01.2026இன்று இடம்பெற்ற கமத்தொழில், கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்கூட்டத்தில் கிவுல்ஓயா நீர்ப்பாசனக் கட்டுமானத் திட்டத்திற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் எதிர்வரும் 23ஆம்திகதி கிவுல் ஓயாத்திட்டம் தொடர்பான கலந்துரையாடலொன்று ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதாகவும் அக்கலந்துரையாடலில் குறித்தவிடயம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்குமாறு அமைச்சர் கே.டீ.லால்காந்த இதன்போது தெரிவித்துள்ளார். இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் குறித்த கமத்தொழில், கால்நடை வளங்கள் காணி…

மேலும் படிக்க
பொதுவான செய்திகள் 

அரசைப் பாதுகாப்பதற்கான முன்மொழியப்பட்ட சட்ட வரைபு.திறந்த கலந்துரையாடல்

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான முன்மொழியப்பட்ட சட்ட வரைபு தொடர்பான திறந்த கலந்துரையாடல் சட்டம் மற்றும் கொள்கைகளுக்கான யாழ்ப்பாணக் கற்கை நிலையத்தின் ஒருங்கிணைப்பில், இன்று 20.01.2026 அன்று தந்தை செல்வா கலையரங்கில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் அரசியற் பிரமுகர்கள் சமூக செயற்பாட்டாளர்கள், இளையோர் மற்றும் மகளீர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என ஏறத்தாழ 100 பேரளவில் பங்குபற்றியிருந்தனர். தொடக்க உரையாற்றிய அந் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி கலாநிதி.க. குருபரன் (யாழ் பல்கலை சட்டத்துறை முன்னாள் தலைவர்) பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உறுதியளித்திருந்ததைத் சுட்டிக்காட்டி, மேலும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குகின்ற விடயமானது என்.பி.பியின் சிங்கள மொழி மூல தேர்தல் விஞ்ஞானபத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை என்னும் விடயத்தினை ஜே.வி.பியின் ஆரம்பகால உறுப்பினர் லயனல் போபகேயின் அண்மைய கட்டுரையில் உள்ள விடயத்தினையும் மேற்கோள்காட்டி, பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கி…

மேலும் படிக்க