சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

இராணுவத்தினர் அடாவடித் தனமாக தமது நெல்லை சந்தைப் படுத்துகி ன்றனர்;- ரவிகரன் எம்.பி சீற்றம்.

விவசாயிகள் நெல்லை சந்தைப்படுத்துவதில் நெருக்கடிக்குளாகும்போது இராணுவத்தினர் அடாவடித்தனமாக தமது நெல்லை சந்தைப்படுத்துகின்றனர்; இராணுவத்தினர் உடனடியாக வெளியேறவேண்டும் – ரவிகரன் எம்.பி சீற்றம். விவசாயிகள் நெல்சந்தைப்படுத்தல் சபையினூடாக தமது நெல்லை சந்தைப்படுத்துவதற்கு பாரிய நெருக்கடிளுக்கு முகங்கொடுத்துவருவதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், தமிழ் மக்களிடமிருந்து ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளில் உற்பத்தி செய்யப்பட்ட தமது நெல்லினை இராணுவத்தினர் அடாவடியாக நெல்சந்தைப்படுத்தல் சபையூடாக சந்தைப்படுத்தல் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு, நீராவிப்பிட்டிப் பகுதியில் அமைந்துள்ள நெல்சந்தைப்படுத்தல் சபைக்குரிய நெற்களஞ்சியசாலையில் 24.02.2026 அன்று விவசாயிகள் தமது நெல்லினை சந்தைப்படுத்துவதற்காக காத்திருந்தபோது அடாவடியாக அங்கு நுழைந்த இராணுவத்தினர் இவ்வாறு தமது 70மூட்டைகளுக்கும் மேற்பட்ட நெல்லினை சந்தைப்படுத்தல் செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். இந்நிலையில் இராணுவத்தின் இத்தகைய அடாவடிச் செயற்பாட்டை வன்மையாக கண்டித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர், முல்லைத்தீவு உட்பட வடக்கு கிழக்கெங்குமுள்ள இராணுவத்தினர் உடனடியாக வெளியேறவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். இவ்விடயம்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வாழ்வோம் வளம்பெறுவோம் கட்டம் 73இல், 61 பயனாளிகள் உள்ளீர்ப்பு.

வாழ்வோம் வளம்பெறுவோம் கட்டம் 73இல், 61 பயனாளிகள் உள்ளீர்ப்பு. வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களால் முன்னெடுக்கப்படும் வாழ்வோம் வளம்பெறுவோம் செயற்றிட்டத்தின் எழுபத்திமூன்றாம் கட்டமானது கடந்த 23.02.2026 அன்று முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள அவரது மக்கள் தொடர்பகத்தில் முன்னெடுக்கப்பட்டது. இக்கட்டத்தில் தாயகத்தைச் சேர்ந்த 61 குடும்பங்கள் உள்ளீர்க்கப்பட்டு அவர்களுக்கு அரிசிப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில், வாழ்வோம் வளம்பெறுவோம் என்ற பெயரிலான செயற்றிட்டமானது குறுங்கால வாழ்வுடமை ஊக்குவிப்பு நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. குறித்த செயற்றிட்டமானது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களால் கடந்த 17.05.2014 அன்று முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்டது. அந்தவகையில் நடைபெற்று முடிந்த எழுபத்திமூன்றாம் கட்டத்துடன் இதுவரையில் 3,936 குடும்பங்கள் உள்ளீர்க்கப்பட்டுள்ளன. மேலும் வாழ்வோம் வளம் பெறுவோம் 73ஆம் கட்டத்திற்குரிய நிதி…

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

ரஷ்யாவின் GRU தளபதி மீதான துப்பாக்கிச் சூட்டில் பிரித்தானிய தடயம்?

ரஷ்யாவின் GRU தளபதி மீதான துப்பாக்கிச் சூட்டில் பிரித்தானிய தடயம்? அலெக்ஸியேவ் கொலை முயற்சி மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ ✒️ எழுதியவர்: ஈழத்து நிலவன் தமிழ் தேசிய வரலாற்று ஆய்வாளர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர் ⊰❉⊱═════════════════⊰❉⊱ ✧. மேற்கத்திய உளவு அமைப்புகள் மீது FSB குற்றச்சாட்டு: அலெக்ஸியேவ் மீதான தாக்குதல் ரஷ்யாவின் மத்திய பாதுகாப்பு சேவை (FSB) GRU அமைப்பின் முதல் துணைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் விளாடிமிர் அலெக்ஸியேவ் மீதான கொலை முயற்சியை பிரித்தானிய உளவுத்துறை திட்டமிட்டதாக அதிகாரப்பூர்வமாக குற்றம் சாட்டியுள்ளது. * இலக்கு: அலெக்ஸியேவ் உயிர் பிழைத்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 2018-ல் சாலிஸ்பரி நோவிசோக் நச்சுத்தாக்குதலில் தொடர்பு இருப்பதாகக் கூறி அவர் ஏற்கனவே பிரித்தானிய தடைகளுக்கு உட்பட்டவர். *…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் வளிமண்டலவியல் திணைக்களம்

இன்றையதினம் (25) நாட்டின் தென் மாகாணத்திலும் இரத்தினபுரி, மொணராகலை, களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், வடமத்திய மாகாணங்களிலும் அநுராதபுரம், காலி, மாத்தறை, மொணராகலை, மன்னார், வவுனியா மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாகப் பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.காலியிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

தென் மாகாண ஆளுநராக பேராசிரியர் சுசிரிபால மானவடு,!

தென் மாகாண ஆளுநராக பேராசிரியர் சுசிரிபால மானவடு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, அரசியலமைப்பின் 154 ஆ பிரிவின்படி, நேற்று (24) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.இலங்கை கலை மன்றத்தின் வானொலி, பத்திரிகைகள் மற்றும் சமூக ஊடகங்களுக்கான உப குழுவின் துணைத் தலைவராகப் பணியாற்றும் பேராசிரியர் சுசிரிபால மானவடு, ருஹுணு பல்கலைக்கழகத்தில் சிங்களக் கல்விப் பிரிவின் தலைவராகவும், ருஹுணு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட உதவி நூலகராகவும் பணியாற்றியுள்ளார்.ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

யாழ்.ஊடக அமையத்தின் ஒழுங்கமைப்பில் ‘கிவுல் ஓயா அபாயத்தின் குறியீடா?’ என்ற தலைப்பிலான திறந்த கலந்துரையாடல்

யாழ்.ஊடக அமையத்தின் ஒழுங்கமைப்பில் ‘கிவுல் ஓயா அபாயத்தின் குறியீடா?’ என்ற தலைப்பிலான திறந்த கலந்துரையாடல் யாழ்.ஊடக அமையத்தின் மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்றது. ஊடக அமையத்தின் ஸ்தாபகர் இ.தயாபரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், நாடாளுமன்ற உ றுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், து.ரவிகரன், ப.சத்தியலிங்கம் ஆகியோரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன், தவத்திரு வேலன் சுவாமிகள், சட்டத்தரணி ஐங்கரன் குகதாசன், மற்றும் யாழ்.பல்கலைகழக கலைப்பீட பீடாதிபதி எஸ்.ரகுராம், யாழ்.பல்கலைழகமாணவர் ஒன்றிய பிரதிநிதிகள், எல்லைக் கிராமங்களை சேர்ந்த மக்கள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமான மேற்படி கலந்துரையாடலில், கிவுல் ஓயா திட்டத்தின் ஊடாக தமிழ் மக்களின் நிலங்கள் அபகரிக்கப்படும் விவகாரம் மற்றும் சுற்றுசூழல் பாதிப்புகள், யானை – மனித மோதல், போன்ற பாதகமான விளைவுகள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன்,…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

முல்லை கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளரைச் சந்தித்தார் ரவிகரன் எம்.பி; நெல் உலர்த்திகளின் நிலை தொடர்பில் கேட்டறிந்தார்.

முல்லை கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளரைச் சந்தித்தார் ரவிகரன் எம்.பி; நெல் உலர்த்திகளின் நிலை தொடர்பில் கேட்டறிந்தார். முல்லைத்தீவு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளரைச் சந்தித்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், முல்லைத்தீவு மாவட்டத்தில் பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களின் பொறுப்பிலுள்ள நெல் உலர்த்திகளின் நிலைதொடர்பில் கேட்டறிந்துகொண்டார். இச்சந்திப்பானது முல்லைத்தீவு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது. அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் பொறுப்பிலுள்ள ஒரு நெல் உலர்த்தியும், பனங்காம்பற்று பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் பொறுப்பிலுள்ள நெல் உலர்த்தியுமே பயன்பாட்டில் இருப்பதாக கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாரால் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவிக்கப்பட்டது. அதேவேளை விசுவமடு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் பொறுப்பிலுள்ள மற்றுமொரு நெல் உலர்த்தியும், கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் குமுழமுனையிலுள்ள நெல் உலர்த்தியும், துணுக்காய் பலநோக்கு…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி புலச் செய்திகள் 

ஒக்ஸ்போர்ட் யூனியனில் நாமல் ராஜபக்ஷ உரை இரத்து இனப்படுகொலையே காரணம். தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

தமிழர்கள் மீது ராஜபக்ஷக்கள் நிகழ்த்திய இனப்படுகொலை காரணமாகவே, ஒக்ஸ்போர்ட் யூனியனில் நாமல் ராஜபக்ஷ நிகழ்த்தவிருந்த உரை இரத்துச் செய்யப்பட்டுள்ளது என்று பிரிட்டன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.இது தொடர்பில் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ளதாவது:- “ஒக்ஸ்போர்ட் யூனியன் ஏற்பாடு செய்த உரை அல்லது உரையாடல் நிகழ்வுகள் எந்தக் காரணத்துக்காகவும் இரத்துச் செய்யப்படுவதில்லை. அவ்வாறு இரத்துச் செய்வதை கருத்துச் சுதந்திரம் மீதான தாக்குதலாகவும், தன் புகழுக்கான இழுக்காகவும் அந்த நிறுவனம் கருதுகின்றது. இவ்வாறான நிலையில், நாமல் ராஜபக்ஷவின் ஒக்ஸ்போர்ட் உரை இரத்துச் செய்யப்பட்டமை அரிதான மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவாகும். இதற்கு, நாமலின் குடும்பத்தால் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலையே காரணம். நாமல் ராஜபக்ஷவின் குடும்பம் தமிழர்களுக்கு எதிராக இழைத்த போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் சொல்லொண்ணாத் துயரங்கள் உலகறிந்தவை. அந்தப் பாதகமான…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

வீதி அபிவிருத்தி திணைக்கள பொறியியலாளரைச் சந்தித்தார் ரவிகரன் எம்.பி;

வீதி அபிவிருத்தி திணைக்கள பொறியியலாளரைச் சந்தித்தார் ரவிகரன் எம்.பி; வீதிச் சீரமைப்புக்கள் குறித்து கலந்துரையாடல் முல்லைத்தீவுமாவட்ட வீதி அபிவிருத்தி திணைக்கள பொறியியலாளரை வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 23.02.2026நேற்று சந்தித்து கலந்துரையாடினார்.அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்ட வீதி அபிவிருத்தித் திணைக்கள அலுவலகத்தில் இடம்பெற்ற இச் சந்திப்பில் வீதிஅபிவிருத்தித் திணைக்களத்திற்குரிய சீரின்றிக் காணப்படும் வீதிகளின் சீரமைப்பு மற்றும் வய்க்கால் சீரமைப்புத் தொடர்பில் கவனஞ்செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

எல் மென்சோ — உலகின் மிக ஆபத்தான கார்டெல் வியூகவாதியின் எழுச்சி, ஆட்சி மற்றும் வீழ்ச்சிஒரு நிழல் பேரரசின் முடிவு

எல் மென்சோ — உலகின் மிக ஆபத்தான கார்டெல் வியூகவாதியின் எழுச்சி, ஆட்சி மற்றும் வீழ்ச்சி ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ ✦ ஒரு நிழல் பேரரசின் முடிவு ‘எல் மென்சோ’ என அறியப்பட்ட நெமேசியோ ரூபன் ஒஸ்குவேரா செர்வாண்டஸ் கொல்லப்பட்ட சம்பவம், 21-ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தபால்பா மலைப்பகுதியில் அமைந்திருந்த ரகசிய கட்டளைத் தளத்தை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட தீவிர ராணுவ நடவடிக்கையிலேயே அவர் உயிரிழந்தார். துப்பாக்கிச் சண்டையின் போது கடுமையாக காயமடைந்த அவர், அவசர சிகிச்சைக்காக விமானம் மூலம் மாற்றப்பட்டபோது உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது மரணம் நிகழ்ந்த சில மணிநேரங்களிலேயே வன்முறைச் செயல்கள் வெடித்தது, அவர் இறந்த பின்னரும் அவரது கட்டளை வலையமைப்பு செயல்பாட்டிலேயே இருந்ததை வெளிப்படுத்தியது. ✦ ஒரு கார்டெல் வடிவமைப்பாளரின் பின்னணி எல் மென்சோவின் வாழ்க்கை…

மேலும் படிக்க