செய்திகள் தமிழ்நாடு இந்தியா செய்திகள் 

இந்தியாவின் விமான விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்

இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தின் சத்ரா மாவட்டத்தில் நடந்த விமான விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.ரெட்பேர்ட் ஏர்வேஸுக்குச் சொந்தமான விமான ஆம்புலன்ஸ் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.நேற்று (23) இரவு 7:11 மணிக்கு ராஞ்சி விமான நிலையத்திலிருந்து புது டில்லிக்கு புறப்பட்ட விமானம், இரவு 7:30 மணியளவில் ரேடாரில் இருந்து மறைந்துவிட்டது.அதனைதொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் குறித்த விமானம் அடர்ந்த காட்டுப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், விபத்தானது, இடியுடன் கூடிய மழை காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.உயிரிழந்தவர்களில், இரண்டு பணியாளர்களும் ஒரு நோயாளியும் அவரது உறவினர்களும் அடங்குவதாக மேலும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தமிழ்நாடு இந்தியா செய்திகள் 

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி வைகோ மனு தாக்கல்.

இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை நீக்கக் கோரி ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு 1991 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடை செய்தது.அதன் பின்னர் இந்தத் தடை இந்தியாவால் அவ்வப்போது நீடிக்கப்பட்டு வருகிறது.ஆரம்பத்தில் ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் பின்னர் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் தடையானது நீடிக்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டில், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA) கீழ் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டது. இந்த உத்தரவை U.A.P.A தீர்ப்பாயம் பின்னர் உறுதி செய்தது. தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து, வைகோ 2013 இல் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி மேன்முறையீடு ஒன்றை செய்திருந்தார்.இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் நீதிபதி…

மேலும் படிக்க
செய்திகள் தமிழ்நாடு இந்தியா செய்திகள் 

இலங்கை தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும்” – பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

சென்னை: இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் அங்குள்ள தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதிக்கும்; ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய இந்திய அரசு உடனடியாகத் தூதரக ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இலங்கையில் தற்போது நடைபெற்றுவரும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களால் இலங்கைத் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்படும் கடுமையான பாதிப்புகளை களைந்திட வேண்டுமென்றும், தமிழ் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையிலான ஒரு அரசியலமைப்புச் செயல்முறையினைக் கொண்டுவருவதற்கு, இந்திய அரசு இலங்கை அதிகாரிகளுடன் உயர்மட்ட அளவில் தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென்று கோரி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கையில் உள்ள…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தமிழ்நாடு இந்தியா செய்திகள் 

இயக்குநரான பாரதிராஜா திடீரென சுகவீனம் மருத்துவமனையில் அனுமதி.

தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற இயக்குநரான பாரதிராஜா திடீரென சுகவீனமடைந்ததைத் தொடர்ந்து சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தற்போது அவர் சுகவீனமடைந்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தமிழ்நாடு இந்தியா செய்திகள் 

ஒன்றிய அரசே! இலங்கை அரசின் சிங்களப் பௌத்த மதவாத அராஜகத்தை வேடிக்கைப் பார்க்காதே! வேல்முருகன்

ஒன்றிய அரசே! இலங்கை அரசின் சிங்களப் பௌத்த மதவாத அராஜகத்தை வேடிக்கைப் பார்க்காதே! தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.  இந்தியப் பெருநிலத்தில் வாழும் எட்டு கோடித் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உடனடியாக நடவடிக்கை எடு!தமிழ் மக்களுக்குச் சொந்தமான நிலங்களைத் திட்டமிட்டு அபகரித்து,புத்த பிக்குகள் மூலமாகத் தமிழர் பகுதிகளில் புத்த விகாரைகள் அமைக்கும் இலங்கை அரசின் சிங்களப் பௌத்த மதவாதத் தமிழர் விரோத அரசியல் போக்கைத்தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. சொந்த நிலத்தையும்,சொந்த வீட்டையும்,தாம் வழிபட்ட ஆலயத்தையும் காக்கும் நோக்கில் போராடிய, அப்பாவித் தமிழ் மக்களை ஈவிரக்கமின்றிக் கைது செய்து சிறையில் அடைக்கும் இலங்கை அரசு, அதே நேரத்தில் தமிழர் நில அபகரிப்பில் முன்னின்று செயல்பட்ட பிக்குவுக்கு, ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் ஒன்றாகச் சேர்ந்து விருது வழங்கி விழா நடத்துவது இலங்கையில் நிலவும் “ஜனநாயகத்தின் மீதானத்…

மேலும் படிக்க