தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

திடீரென தீப்பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்; மருதனார்மடத்தில் பதற்றம்!

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதனார்மடம் பகுதியில் இன்றையதினம்  மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.குறித்த மோட்டார் சைக்கிள் தானாகவே தீப்பற்றி எரிந்ததா, அல்லது யாராவது தீ மூட்டினரா என இதுவரை தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.குறித்த பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார்சைக்கிள் திடீரென தீப்பிடித்து முழுவதுமாக எரிந்துள்ளது. திடீரென மோட்டார்சைக்கிள் தீப்பிடித்து எரிந்ததில் குறித்தபகுதியில் பதற்றசூழல் உருவாகியுள்ளது. சம்பவத்தையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

பெரியவிளாத்தி க்குளம் அணைக்கட்டு அமைத்தல் மற்றும் வாய்க்கால் சீரமைப்பு தொடர்பில் ஆராய்வு

பெரியவிளாத்திக்குளம் புல்மோட்டைவெளிக்கு நேரில் சென்ற ரவிகரன் எம்.பி; அணைக்கட்டு அமைத்தல் மற்றும் வாய்க்கால் சீரமைப்பு தொடர்பில் ஆராய்வு வவுனியா – ஓமந்தை கமநலசேவைநிலையப் பிரிவிற்குட்பட்ட பெரியவிளாத்திக்குளம் கமக்கா அமைப்பின் கீழ் காணப்படும் புல்மோட்டை வயல்வெளிக்கு நேரடியாகச் சென்ற வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் புல்மோட்டை வெளிக்கான அணைக்கட்டை அமைத்தல் மற்றும் வாய்க்கால் சீரமைப்புத் தொடர்பில் ஆராய்ந்துள்ளார். வவுனியா – ஓமந்தை, பெரியவிளாத்திக்குளம் பகுதியில் கடந்தவருடம் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனால் மக்கள் குறைகேள் சந்திப்பொன்று நடாத்தப்பட்டிருந்தது. இதன்போது புல்மோட்டை வயல்வெளிக்கான அணைக்கட்டு அமைப்பது தொடர்பிலும், வாய்க்காலை சீரமைப்பதுதொடர்பிலும் இதன்போது அப்பகுதி மக்களால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 13.02.2026அன்று இடம்பெற்ற வவுனியா பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் குறித்த புல்மோட்டை வெளிக்கான அணைக்கட்டை அமைக்குமாறும், நீர்ப்பாசன வாய்க்கால் சீரமைப்பை மேற்கொள்ளுமாறும் நாடாளுமன்ற உறுப்பினர்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

சிறுபோகத்திலும் நெற்கொள்வனவிற்கு ஏற்றவாறு களஞ்சிய சாலைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் – ரவிகரன்

நெல் சந்தைப்படுத்தல்சபை சிறுபோகத்திலும் தவறிழைக்க முடியாது; சிறுபோக அறுவடைக்கு முன்னரே நெற்கொள்வனவிற்கு ஏற்றவாறு களஞ்சியசாலைகள் தயார்நிலையில் இருக்கவேண்டும் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து. நெல்சந்தைப்படுத்தல் சபையினர் தமது களஞ்சியசாலைகளில் ஏற்கனவே கொள்வனவுசெய்யப்பட்ட நெல்மூட்டைகளை அகற்றாது தேக்கிவைத்திருந்ததன் காரணத்தினால் 2025 – 2026ஆம் ஆண்டுகளுக்குரிய பெரும்போக காலத்தில் அறுவடைசெய்யப்பட்ட நெல்லை விவசாயிகளிடமிருந்து கொள்வனவுசெய்வதில் தாமதம் ஏற்பட்டிருந்ததாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில் 2026ஆம் ஆண்டிற்குரிய சிறுபோக காலத்திலும் நெல் சந்தைப்படுத்தல் சபை அத்தகைய தவறை செய்யக்கூடாதெனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், சிறுபோக அறுவடைக்காலத்திற்கு முன்னரே நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியசாலையில் தேங்கியுள்ள ஏற்கனவே கொள்வனவு செய்யப்பட்ட நெல் மூட்டைகள் உரியவகையில் அகற்றப்பட்டு, சிறுபோகத்தில் அறுவடைசெய்யப்படுகின்ற நெல்லை விவசாயிகளிடமிருந்து தாமதமின்றி கொள்வனவுசெய்வதற்கு ஏற்றவாறு களஞ்சியசாலைகள் தயார் நிலையில் இருக்கவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார். அத்தோடு வன்னி மாவட்ட அபிவிருத்தி…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

மட்டு களுவாஞ்சிகுடியில் உழவு இயந்திரத்தின் மேல் ஏறி நின்ற டிப்பர்

மட்டு களுவாஞ்சிகுடியில் உழவு இயந்திரத்தின் மேல் ஏறி நின்ற டிப்பர் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் சற்றுமுன் விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.மட்டு கல்முனை சாலை வழியே பழுதான டிப்பர் ஒன்றை உழவு இயந்திரம் ஒன்று கட்டி இழுந்துக்கொண்டு சென்ற சமயம் உழவு இயந்திரத்தின் மேல் எதிர்பாராத விதமாக டிப்பர் ஏறியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது விபத்து நடைபெற்ற போது உழவு இயந்திர சாரதி கீழே குதித்து தெய்வாதினமாக உயிர்தப்பியுள்ளார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி காவல் துறையினர். மேற்க்கொண்டு வருகின்றனர்

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வடக்கின் பெரும் நீர்ப்பாசனத்தை நசுக்கப் பெரும் சதி – இரணைமடு விவசாயிகள் அமைப்பு போர்க்கொடி!

வடக்கின் பெரும் நீர்ப்பாசனத்தை நசுக்கப் பெரும் சதி – இரணைமடு விவசாயிகள் அமைப்பு போர்க்கொடி! வடக்கின் பெரும் நீர்ப்பாசனமான இரணைமடு நீர்ப்பாசனத்தின் கீழ் இருக்கும் 28 கமக்காரர் அமைப்புகளின் மீது அர்ச்சுனா எம்.பி கூறும் குற்றச்சாட்டுக்களில் உண்மைகள் இல்லை என்று கூறும் கமக்காரர் அமைப்புகளின் தலைவர், குறித்த எம்.பி உண்மைகளை ஆராயாது அரசியல் கதிரையின் மீது கொண்ட ஆசை காரணமாக ஒருதலைப் பட்சமாக கருத்துக் கூறுவதை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று (27) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கூறிய அவர் மேலும் கூறுகையில் -கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போது இரணைமடு கமக்கார அமைப்புக்களின் நிர்வாகம் பெரும் நிதி மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகவும்,பதிவு செய்யப்படாத அமைப்பு என்றும், பல்வேறு குற்றச்சாட்டுக்களை அர்ச்சுனா எம்.பி முன்வைத்திருந்தார்.அவர் குறித்த கருத்தை கூறும் முன்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

குஞ்சுக்கால் வெளியில் உப்பளம் அமைக்க முயற்சி நிறுத்திவைக்க நடவடிக்கை!

குஞ்சுக்கால்வெளியில் பெரும்பான்மை இனத்தவர்கள் உப்பளம் அமைக்க முயற்சிக்கும் தமிழர்களின் பூர்வீக்காணிகளை மீட்டுத்தர ரவிகரன் எம்.பி வலியுறுத்து; பிரச்சினைக்கு தீர்வுகாணும்வரை உப்பளம் அமைக்கும் செயற்பாடுகளை நிறுத்திவைக்க நடவடிக்கை – மாவட்டசெயலர் தெரிவிப்பு முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் குஞ்சுக்கால்வெளியில் பெரும்பான்மை இனத்தவர்களால் உப்பளம் அமைக்க முயற்சிக்கப்படும் காணிகள், தமிழ் மக்களின் அறுதி உறுதி தனியார் காணிள் எனவும், அந்தக்காணிகள் மீட்கப்பட்டு காணிகளுக்குரிய தமிழ் மக்களிடமே கையளிக்கப்படவேண்டுமெனவும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் கொக்குத்தொடுவாய் கிராமமக்களால் முல்லைத்தீவு மாவட்டசெயலாளர் அ.உமாமகேஸ்வரனிடம் எழுத்து மூலமான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதுடன், காணி ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் எழுத்துமூலக் கோரிக்கை மற்றும் காணி ஆவணங்களின் பிரதியைப் பெற்றுக்கொண்ட மாவட்டசெயலாளர் அ.உமாமகேஸ்வரன், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும்வரை உப்பளம் அமைக்கும் முயற்சிகளை நிறுத்திவைக்குமாறு வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தம்மால் கடிதம் அனுப்பப்படுமெனவும், இந்தப் பிரச்சினை தீர்க்கப்படாமல் அந்தப்பகுதியில் எந்தச்…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

ஈழத்தின் கிளிநொச்சி அக்கராயனில் நடந்தேறிய ‘ஏர் நிலம்’ உழைப்பாளர் மதிப்பளிப்பும் பொங்கல் விழாவும்

ஈழத்தின் கிளிநொச்சி அக்கராயனில் நடந்தேறிய ‘ஏர் நிலம்’ உழைப்பாளர் மதிப்பளிப்பும் பொங்கல் விழாவும். ‘எனது எழுபத்தெட்டாவது வயதில் கிடைத்த இந்த மதிப்பளிப்பு எனக்குள் உழைப்பின் காலத்து நினைவினை விதைத்தது’ என்று சொன்னார் மதிப்பளிப்பினை பெற்றுக் கொண்ட மூத்த விவசாயி ஒருவர் ‘ஏர் நிலம்’ தொண்டமைப்பின் ஊடாக ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்ற மூத்த உழைப்பாளர்கள் மதிப்பளிப்பும் பொங்கல் விழாவும் நிகழ்வானது 2026 ஆம் ஆண்டில் கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன் கந்தபுரத்தில்அமைந்துள்ள இலக்கம் 01 அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் நடைபெற்றது. ‘ஏர் நிலம்’ தொண்டமைப்பும், அக்கராயன் பிரதேச பொது அமைப்புகளும் இணைந்து இந்த நிகழ்வினை ஒழுங்கமைத்திருந்தன. ஏற்கனவே முறிகண்டி தருமபுரம், மாங்குளம், கற்சிலைமடு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் இந்நிகழ்வு இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. நிகழ்விற்கு ‘ஏர் நிலம்’ தொண்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட செயலாற்றுநர் கவிஞர் யே.லக்சிதரன் தலைமை வகித்தார்.…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

வவுனியா அபிவிருத்தித் திட்டங்களுக்காக ரூ. 950 மில்லியன் நிதி ஒதுக்கப் பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தித் திட்டங்களுக்காக ரூ. 950 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் தலைவரும், கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க தலைமையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று (26) இடம்பெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது. இந்த நிதி ஒதுக்கீட்டின் கீழ், வவுனியா நகர அபிவிருத்திப் பணிகளுக்காக ரூ. 250 மில்லியனும், பிரதேச அபிவிருத்தியின் கீழ் 36 வீதிகளை மேம்படுத்துவதற்காக ரூ. 250 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மாவட்டத்தில் உள்ள 9 பெரிய பாலங்களைப் புனரமைப்பதற்காக ரூ. 100 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.   மேலும், 500 மீற்றருக்கும் குறைவான நீளத்தைக் கொண்ட 21 கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காக ரூ. 350 மில்லியன் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.   இந்தக் கூட்டத்தின் போது,…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

குஞ்சுக்கால் வெளியில் பெரும்பான்மை இனத்தவர்களின் சட்டவிரோத உப்பளம்

குஞ்சுக்கால் வெளியில் பெரும்பான்மை இனத்தவர்களின் சட்டவிரோத உப்பளம் அமைக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தினார் ரவிகரன் எம்.பி; மாலை 03.00மணிக்கு முல்லை மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் குஞ்சுக்கால்வெளி பகுதியில் பெரும்பான்மையினத்தவர்களால் சட்டவிரோதமாக உப்பளம் அமைக்கும் முயற்சியொன்று 27.02.2026இன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அத்தோடு குறித்த பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கொக்குத்தொடுவாய்ப் பகுதி தமிழ் மக்கள், சட்டவிரோதமாக உப்பளம் அமைக்க முற்பட்ட பெரும்பான்மையினத்தவர்கள், வனஜீவராசிகள் திணைக்களம் ஆகிய தரப்பினரின் பங்கேற்புடன் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் 27.02.2026இன்று மாலை 03.00மணிக்கு கலந்துரையாடல் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் குஞ்சுக்கால்வெளி பகுதியில் வனஜீவராசிகள் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் மொழிபெயர்ப்பின்றி தனிச்சிங்கள மொழியில் சீற்றமடைந்த ரவிகரன் எம்.பி

வவுனியா ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் மொழிபெயர்ப்பின்றி தனிச்சிங்களமொழியில் இடம்பெற்ற கலந்துரையாடல்கள்; சீற்றமடைந்த ரவிகரன் எம்.பி வவுனியா மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் 26.02.2026இன்று இடம்பெற்ற நிலையில், குறித்த கூட்டத்தில் நீண்டநேரமாக மொழிபெயர்ப்பின்றி தனிச் சிங்களமொழியில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வந்தன. இந்நிலையில் சீற்றமடைந்து சபையில் எழுந்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இத்தகைய முறையற்ற செயற்பாட்டிற்கு தமது மிகக் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டார். குறித்த வவுனியா மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள், திணைக்கள அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டதரப்பினர்களில் பெருமளவானவர்கள் தமிழ் பேசுபவர்கள் என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது சுட்டிக்காட்டினார். எனவே இவ்வாறு முறையற்ற விதத்தில் மொழிபெயர்ப்பின்றி நீண்ட நேரமாக சிங்களமொழியில் கலந்துரையாடுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாதெனவும் நாடாளுமன்ற உறுப்பினரால் இதன்போது தெரிவிக்கப்பட்டது. அத்தோடு தமிழ் மொழிமூலமான மொழி பெயர்ப்பையும்…

மேலும் படிக்க