இலங்கை சிறப்புச் செய்தி 

உலங்கு வானூர்தி விழுந்து விபத்து; ஐந்து இராணுவ வீரர்கள் பலி

விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக உலங்கு வானூர்தி இன்று காலை அவசரமாக தரையிறங்கும்போது மதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் மோதியதில் ஐந்து இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

சம்பந்தப்பட்ட உலங்கு வானூர்தி மதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் மோதியது, அதில் இருந்த அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விமானப்படை உலங்கு வானூர்தி ஊழியர்கள் இருவரும், இராணுவ சிறப்புப் படை வீரர்கள் மூவரும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment