சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

சட்டவிரோத மணல் அகழ்வுச் செயற்பாடு களுக்கு காவல் துறையே காரணம். ரவிகரன் எம்.பி

ஒட்டுசுட்டானில் அதிகரித்துள்ள சட்டவிரோத மணல் அகழ்வுச் செயற்பாடுகளுக்கு காவல்துறையே காரணம் ரவிகரன் எம்.பி குற்றச்சாட்டு; புலிகள் சட்டம் ஒழுங்கினை பாதுகாத்தனரெனவும் சுட்டிக்காட்டு ஒட்டுசுட்டானில் அதிகரித்துள்ள சட்டவிரோத மணல் அகழ்வுச் செயற்பாடுகளுக்கு  காவல்துறையே ரவிகரன் எம்.பி குற்றச்சாட்டு; புலிகள் சட்டம் ஒழுங்கினை பாதுகாத்தனரெனவும் சுட்டிக்காட்டு முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் அதிகரித்துள்ள சட்டவிரோத மணல் அகழ்வுச் செயற்பாடுகளுக்கு காவல்துறையே காரணமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். அத்தோடு விடுதலைப்புலிகளின் காலத்தில் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்றதில்லை எனக் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர், விடுதலைப்புலிகள் முறையாக சட்டம் ஒழுங்கினைப் பாதுகாத்ததாகவும் சுட்டிக்காட்டினார். ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் 03.07.2025இன்று இடம்பெற்றது. இந்நிலையில் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் சட்டவிரோத மணல் அகழ்வுச்செயற்பாடுகள் அதிகரித்திருப்பதாகவும் அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டுமென்ற முன்மொழிவொன்றை ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் அபிவிருத்திக்குழுவில் முன்வைத்தார். இதன்போது கருத்துத்தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

செம்மணியின் இரண்டாம் கட்ட எட்டாம் நாள் அகழ்வின் போது 40 மனித எச்சங்கள்

செம்மணியின் இரண்டாம் கட்ட எட்டாம் நாள் அகழ்வின் போது 40 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்டம் இன்று எட்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்டது. யாழ் நீதவான் நீதிமன்ற நீதிபதி A.A. ஆனந்தராஜா அவர்களின் மேற்பார்வையில், தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ் சோமதேவா மற்றும் சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் பங்கேற்போடு அகழ்வு இன்று நடைபெற்றது. இதுவரை 34 முழுமையான மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. மேலதிகமாக, 6 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில் இரண்டு எலும்புக்கூடுகள் குழந்தைகளுடையதாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க