வடக்கு மாகாணத்தில் நில தீர்வு தொடர்பாக வர்த்தமானியை திரும்பப் பெற்றுள்ளது அரசாங்கம்
வடக்கு மாகாணத்தில் நில தீர்வு தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானியை அரசாங்கம் திரும்பப் பெற்றுள்ளது. வடக்கு மாகாணத்தில் உள்ள பல கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாக விவசாயம், கால்நடை, நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சகத்தின் கீழ் உள்ள நில உரிமை தீர்வுத் துறையால் வர்த்தமானி அறிவிப்பு எண் 2430 கடந்த ர்ச் 28, அன்று வெளியிடப்பட்டது. இந்நிலையில்,வடக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல்வாதிகள் தொடர்ந்தும் அரசாங்கத்தின் இந்த செயற்பாட்டுக்கு எதிராக களத்தில் இறங்கியிருந்த நிலையில்,தற்சமயம் குறித்த வர்த்தமானியை அரசாங்கம் திரும்பப் பெற்றுள்ளது.
மேலும் படிக்க