செய்திகள் தாயகச் செய்தி 

செம்மணி பகுதியில் அகழ்வுப் பணிகள்

செம்மணி பகுதியில் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதிகளில் அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகியுள்ளது.   எனினும் குறித்த பகுதியில் செய்தி சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. கடந்த பெப்ரவரி மாத ஆரம்பத்தில் செம்மணி பகுதியில் உள்ள இந்து மயானத்தில் அபிவிருத்திப் பணிகளுக்காக குழிகள் வெட்டப்பட்டபோது அதற்குள் இருந்து மனித எச்சங்கள் மீட்கப்பட்டன. இது தொடர்பில் பொலிஸாரிடம் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, விடயத்தை பொலிஸார் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றதைத் தொடர்ந்து, பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி சம்பவ இடத்தில் நீதவான் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். இதன்போது, மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியை ஆய்வுக்கு உட்படுத்தவும், தொடர்ந்து அகழ்வுப் பணிகளை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாகவே, அங்கு அகழ்வாய்வு தற்போது ஆரம்பமாகியுள்ளது. துறைசார் வல்லுநர் பேராசிரியர் சோமதேவ கடந்த மூன்றாம் திகதியன்று மனித எச்சங்கள் அவதானிக்கப்பட்ட இடத்தில்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

நாடு முழுவதும் வீதி விபத்துகளில் 4 மாதங்களில் 965 பேர் பலி

இந்த ஆண்டு முழுவதும் பதிவான வீதி விபத்துகளில் மொத்தம் 965 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் மே 13 ஆம் திகதி வரை நாடு முழுவதும் வீதி விபத்துகளில் இந்த இறப்பு எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த காலகட்டத்தில், 902 போக்குவரத்து விபத்துகளும் பதிவாகியுள்ளன. இதன்போது, 1,842 பேர் கடும் காயங்களுக்கு உள்ளாகியும் உள்ளனர். கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் முறையற்ற வாகன பராமரிப்பு ஆகியவை பல விபத்துகளுக்குக் காரணம் என்று பொலிஸார் கூறுகின்றனர். போக்குவரத்து விபத்துகளைக் குறைப்பதற்காக நாடு முழுவதும் ஒரு சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது.

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

இறுதிப் போரில் இடம் பெற்ற குற்றங்க ளுக்கான பொறுப்புக் கூறலை உறுதி செய்ய ஐ.நா நடவடிக்கை எடுக்க வேண்டும்

இறுதிப் போரில் இடம்பெற்ற அட்டூழியக் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதி செய்ய ஐ.நா நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில், ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கான கூட்டுறவு குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு வலிந்து காணாமல் ஆக்கபட்டோரின் உறவுகள் சங்கம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த துன்பப்படும் வயதான தமிழ் தாய்மார்கள் சார்பாக குறித்த கடிதம் பொதுச் செயலாளர் ஏ.லீலாதேவியால் நேற்றைய தினம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இலங்கை பாதுகாப்புப் படையினராலும், அதனுடன் இணைந்த துணை இராணுவக் குழுக்களாலும் வலுக்கட்டாயமாக காணாமல் போனவர்களின் உறவினர்களான நாங்கள், பதினாறு ஆண்டுகளுக்கும் மேலாக நீதிக்காகப் போராடி வருகிறோம். பிப்ரவரி 20,…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

தமிழினப் படுகொலையை நினைவுகூறும் நினைவாயுதம் கண்காட்சி

யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தில் நேற்றைய தினம் தமிழினப்படுகொலையை நினைவுகூறும் ” நினைவாயுதம் கண்காட்சியில் பல்கலைக்கழக மாணவர்கள்    காட்சிப் படுத்தப்பட்டது  தமிழினம் பட்ட அவலங்களை கண்ட சோகங்களை உணர்வுபூர்வமாக மனதை உறுத்தும்படி அமைந்ததுn தொடர்ச்சியாக  இன்று 15ஆம் திகதியிலிருந்து ஞாயிறு 18ஆம் திகதிவரை மாணவர்கள், பொதுமக்கள் என சகலரும் பார்வையிடலாம்.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு யாழ். பல்கலையில் இரத்ததான முகாம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சமூகத்தின் ஒருங்கிணைப்பில் “குருதியால் தோய்ந்த நம் தேசத்திற்காய் ஒரு துளி குருதி” எனும் கருப்பொருளில் மாபெரும் இரத்ததான முகாம் ஒன்று இன்றைய தினம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், அதனை நினைவுகூரும் முகமாக இந்த இரத்ததான முகாம் முன்னெடுக்கப்பட்டது. இதில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு குருதிக்கொடையில் ஈடுபட்டனர். தமிழ், சிங்கள, முஸ்லீம் மாணவர்கள் என அனைவரும் இனம், மதம், மொழி பேதங்களை கடந்து இந்த இரத்ததான முகாமில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

குமுதினி படகு படுகொலையின் 40-ஆம் ஆண்டு நினைவு நாள்

1985ஆம் ஆண்டு மே மாதம் பதினைந்தாம் திகதி குமுதினிப் படகு வழமைபோல தனது சேவையை ஆரம்பித்தது. அன்று ஏறக்குறைய அப்படகில் அறுபதிற்கும் மேற்பட்ட பயணிகள் பிரயாணம் செய்தார்கள். நெடுந்தீவுத் துறைமுகத்திலிருந்து  குறிகாட்டுவான் நோக்கி வந்துகொண்டிருந்த சமயம் நயினை நாகபூசணி அம்மன் ஆலயம் அமைந்துள்ள நயினாதீவில் முகாமிட்டிருந்த கடற்படையினரின் இரண்டு பீரங்கிகள் பொறுத்தப்பட்ட விசைப்படகுகள் குமுதினிப் படகினை அண்மித்த போது அதில் பயணித்த மக்கள் அச்சம் கொள்ளத் தொடங்கினர். அவ்விரண்டு விசைப்படகுகளில் கடற்படையினர் தங்களுடன் கோடரி, கத்தி, அரிவாள் போன்ற கூரிய ஆயுதங்களையும் எடுத்து வந்திருந்தனர். இதைப் பார்த்த மக்கள் செய்வதறியாது கதறி அழுதார்கள். வந்த கடற்படையினர் குமுதினிப் படகினுள் மூன்று மாதக் குழந்தை உட்பட அனைத்துப் பயணிகளையும் ஒவ்வொருவராகக் கீழ்த்தளத்திற்கு அழைத்து மற்றவர்கள் அறியாமல் தாங்கள் எடுத்து வந்த கூரிய ஆயதங்களினால் வெட்டிக் கொன்றனர். கடற்படையின் இத்…

மேலும் படிக்க