செய்திகள் தாயகச் செய்தி 

யாழ் நாவற்குழி பகுதியில் வாகனம் விபத்து இரு இளைஞர்கள் உயிரிழந்து ள்ளனர்.

கிளிநொச்சி பகுதியிலிருந்து மணல் ஏற்றிக்கொண்டு பயணித்த டிப்பர் வாகனம் விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

விபத்து சம்பவம் நாவற்குழி பகுதியில் நேற்று (14.01.2026) இரவு இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கம் காரணமாக டிப்பர் வாகனம் மின்கம்பம் மற்றும் தொலைத்தொடர்பு கம்பம், சுவர் ஆகியவற்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் வட்டக்கச்சி பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய ராஜீவன் விதுசன் மற்றும் அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நாகராஜா ஜீவராஜ் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

இரு இளைஞர்களின் சடலங்களும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Comment