தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

துன்னாலை காட்டுப் பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

அரச புலனாய்வுத் துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், துன்னாலை காட்டுப் பகுதியில் நீண்டகாலமாக இயங்கி வந்த சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் நெல்லியடி பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

இந்த சுற்றிவளைப்பின்போது 20,000 மில்லிலீற்றர் கசிப்பு, 540,000 மில்லிலீற்றர் கோடா, கசிப்பு உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் மோட்டார் வாகனம் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் துன்னாலை பகுதியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ற ஏனைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை நெல்லியடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, அண்மைக்காலமாக வடமராட்சி பிரதேசத்தில் சட்டவிரோத கசிப்பு விற்பனை அதிகரித்து வருவதாக பிரதேசவாசிகள் கவலை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அன்மைச் செய்தி

Leave a Comment