இலங்கை செய்தி. தாயகச் செய்தி 

மன்னாரில் 150 மெகா வோட் காற்றாலை மின்உற்பத்தி நிலையம்

இலங்கையின் மின்சக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும்,புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளை விரைவுபடுத்தும் நோக்கோடும், மன்னார் – கொண்டச்சி பகுதியில் 150 மெகாவோட் கொள்ளளவு கொண்ட காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான முத்தரப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் நேற்று கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது.

வலுசக்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில், அமைச்சர் அநுர கருணாதிலக்க மற்றும் வலுசக்தி பிரதி அமைச்சர் அர்கம் இல்யாஸ் ஆகியோரின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.மன்னார், சிலாவத்துறை – கொண்டச்சி பகுதியிலுள்ள இலங்கை முந்திரி கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான அரசகாணியில் இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

சுமார் 31 நவீன காற்றுச் சுழலிகள் மூலம் 150 மெகாவோட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். மின்சார விநியோகத்தில் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த, மேம்பட்ட மின்கல மின்சக்தி சேமிப்பு அமைப்புடன் (BESS) இது இணைக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் மற்றும் சமூக பாதிப்புகளைக் குறைக்கும் வகையில், பறவைகள் தொடர்பான ஆய்வுகள் மற்றும் விரிவான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகள் (EIA) மேற்கொள்ளப்பட்டு இத்திட்டம் திட்டமிடப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் ஜி. எம். ஆர். டி. அபொன்சு, தேசிய அமைப்பு ஆபரேட்டர் நிறுவனத்தின் (NSO) தலைவர் கலாநிதி பிரதீப் பெரேரா, ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

அன்மைச் செய்தி

Leave a Comment