பிரதமரை நரேந்திர மோடியை, இன்று (20) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சந்தித்து கலந்துரை யாடியுள்ளார்
இந்திய பிரதமரை நரேந்திர மோடியை, இன்று (20) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.இந்த இருதரப்பு சந்திப்பானது இன்று (20) நடைபெற்றுள்ளது.புதுடெல்லியில் இடம்பெறும் AI Impact 2026 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி இந்தியா சென்றுள்ள நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.இதன்போது AI Impact 2026 மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தமைக்காக ஜனாதிபதி அநுர இந்தியப் பிரதமருக்கு இதன்போது எனது நன்றிகளைத் தெரிவித்தார்..இந்திய – இலங்கை இடையிலான வரலாற்று ரீதியான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார, வர்த்தக மற்றும் கலாசார ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அத்தோடு, ‘டிட்வா’ சூறாவளி அனர்த்தத்தின் போது இலங்கைக்கு வழங்கிய விசேடமான ஒத்துழைப்பைப் பாராட்டியதுடன், அதற்காக இந்தியப் பிரதமருக்கு ஜனாதிபதி அநு நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

