செய்திகள் தாயகச் செய்தி 

தீவிபத்து; நிலமைகளை நேரில் சென்று ஆராய்ந்தார் – ரவிகரன் எம்.பி

முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலையின் முன் தீவிபத்து; நிலமைகளை நேரில்சென்று ஆராய்ந்தார் – ரவிகரன் எம்.பி
முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலையின் முன்னால் 16.05.2025இன்று ஏற்பட்ட தீவிபத்தில் வர்த்தகநிலையங்கள் தீக்கிரையாகியுள்ளன.
இந்நிலையில் குறித்த பகுதிக்கு நேரடியாகச்சென்ற வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிலமைகள் குறித்து ஆராய்ந்துள்ளார்.
இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலையின் முன்பகுதியிலுள்ள உணவகமொன்றில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தால், குறித்த உணவகமும், உணவகத்தின் அருகேஇருந்த வர்த்தகநிலையமும் முற்றாக எரிந்து சேதமாகியுள்ளதுடன், அருகே இருந்த மேலும் சில வர்த்தக நிலையங்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
இந்நிலையில் குறித்த பகுதிக்கு உடனடியாக நேரடியாகச் சென்ற வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தீவிபத்தைக் கட்டுப்படுத்துவதில் கவனஞ்செலுத்தியதுடன், பாதிக்கப்பட்ட வர்த்தகநிலைய உரிமையாளர்களுடனும் கலந்துரையாடியதுடன், நிலமைகள் குறித்து ஆராய்ந்தார்.
அதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் தீயணைப்புப்பிரிவொன்று இல்லாமையினாலேயே கூடுதல் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
எனவே முல்லைத்தீவு மாவட்டத்தில் தீயணைப்பு பிரிவொன்றை ஏற்படுத்துவதுதொடர்பில் தம்மால் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் இதன்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment