சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

பண்டிதர் பரந்தாமன் அவர்கள் மறைவு

ஈழத்து பண்டிதர்,  பாடலாசிரியர் வீ.பரந்தாமன் அவர்கள் நேற்றைய தினம் காலமானார். ‘மானம் ஒன்றே வாழ்வெனக் கூறி வழியில் நடந்தான் மாவீரன்’ என்ற பாடலில் தொடங்கி பல்வேறு பாடல்களை எழுதியதுடன் மட்டுமின்றி ஈழப் போராட்டக்களத்தில் பல்வேறு பங்காற்றியவர்.இந்நிலையில் இவர் இன்று பருத்தித்துறை புலோலியில் இயற்கை எய்தியுள்ளார். அவரது இறுதி நிகழ்வுகள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

தையிட்டியில் பெருமளவான காவல்துறை குவிப்பு

தையிட்டியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்ற கோரி இன்று (10) 2ஆம் நாளாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்நிலையில் அப்பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன் , கலகம் அடக்கும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர், தையிட்டியில் தனியார் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையை அகற்ற கோரி நேற்று (09) மாலை முதல் , காணி உரிமையாளர்கள் , மக்கள் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த போராட்டம் இன்றைய தினம் மாலை வரையில் நடைபெறவுள்ளது இந்நிலையில் விகாரைக்கு தெற்கில் இருந்து பெருமளவான சிங்கள மக்கள் பஸ்களில் அழைத்து வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

மேலும் படிக்க
தாயகச் செய்தி சிறப்புச் செய்தி 

வவுனியா இறம்பைக் குளம் பகுதியில் ரி-56 ரக துப்பாக்கிகள் இரண்டுடன் 450க்கு மேற்பட்ட ரவைகளும்  மீட்பு

 இறம்பைக்குளம் பகுதியில் வீட்டு வளாகத்திலிருந்து ரி-56 ரக துப்பாக்கிகள் இரண்டுடன் 450க்கு மேற்பட்ட ரவைகளும்  மீட்பு வவுனியா ஹொரவப்பொத்தானை வீதி இறம்பைக்குளம் பகுதியில் வீட்டு வளாகத்திலிருந்து ரி-56 ரக துப்பாக்கிகள் இரண்டுடன் 450க்கு மேற்பட்ட ரவைகளும் மீட்கப்பட்டன.   வீட்டின் உரிமையாளரினால் கழிவு தொட்டி ஒன்று அமைப்பதற்காக வீட்டின் பாவனையற்ற வாயில் முன்பாக குழி ஒன்றினை ஜெ.சி.பி உதவியுடன் இன்று (08.06.2025) காலை வீட்டின் உரிமையாளர் தோண்டியுள்ளார். இதன் போது அக் குழியினுள் துப்பாக்கி மற்றும் ரவைகள் காணப்பட்டதனையடுத்து வீட்டின் உரிமையாளர் காவல் துறையினருக்கு தகவல்  வழங்கியிருந்தார் சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு காவல் துறை மற்றும் தடவியல் பிரிவு  காவல் துறை ஆகியோர் வீட்டின் உரிமையாளர் மற்றும் வேலையாட்களிடம் விசாரணைகளை முன்னெடுத்திருந்தமையுடன் குழியினுள் ஒர் பையில் போடப்பட்டு உரைப்பையினுள் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்ட துப்பாக்கி…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

வவுனியாவில் இரத்தக் கறைகளுடன் இளைஞர் சடலம் மீட்பு!

வவுனியாவில் இரத்தக் கறைகளுடன் இளைஞர் சடலம் மீட்பு! வவுனியா காத்தார்சின்னக்குளத்தில் இரத்தக்கறைகளுடன் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலத்தினை காவல்துறை இன்று (04) மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் அமைந்துள்ள தற்காலிக வீடொன்றில் இளைஞர் ஒருவரின் சடலம் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது. பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற  காவல்துறை சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அதேபகுதியை சேர்ந்த செல்லத்துரை கபிநாத் என்ற 24 வயதான ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். குறித்த சடலத்தில் இரத்தக்கறை படிந்துள்ள நிலையில் குறித்த மரணம் கொலையா? என்ற கோணத்தில் காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதேவேளை உயிரிழந்த இளைஞர் நேற்று (03) மாலை இளைஞர் குழுவொன்றுடன் மோதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் இன்று காலை அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைகளை முன்னெடுத்துவரும் வவுனியா…

மேலும் படிக்க
தாயகச் செய்தி சிறப்புச் செய்தி 

யாழ்.பொதுசன நூலகம் தீயூட்டி எரிக்கப் பட்டமையின் 44 ஆவது ஆண்டு நினைவுநாள்

யாழ்ப்பாணம் பொதுசன நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டமையின் 44 ஆவது ஆண்டு நினைவுநாள் இன்று (01) அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 9.00 மணியளவில் பொதுசன நூலகத்தில் இந்த நினைவேந்தல் இடம்பெற்றது. நினைவேந்தலின்போது யாழ்ப்பாண பொதுசன நூலகத்தை உருவாக்குவதற்கு காரணகர்த்தாவாக விளங்கிய செல்லப்பாவிற்கும், யாழ்ப்பாண பொதுசன நூலகத்தை எரியூட்டப்பட்டதை அறிந்து உயிரிழந்த அருட்கலாநிதி தாவீது அடிகளாருக்கும் மலர் தூவி சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. நினைவேந்தலில் யாழ் மாநகர சபையின் ஆணையாளர் ச.கிருஷ்ணேந்திரன் நூலக ஊழியர்கள், வாசகர்கள் ,பொதுமக்கள்ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.யாழ்ப்பாண பொதுநூலகம் 1981 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1ஆம் திகதி சிங்கள குழுவால் தீயூட்டப்பட்டது. நூலகம் எரிக்கப்பட்ட காலத்தில், அங்கு சுமார் 97,000 அரிய நூல்கள் இருந்ததுடன், தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகவும் திகழ்ந்தது.  

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி இலங்கை 

பிரபல சிங்கள நடிகை மாலினி பொன்சேகா காலமானார்

இலங்கை சினிமாவின் ராணி என்று அழைக்கப்படும் மாலினி பொன்சேகா இன்று (24) அதிகாலை காலமானார். சிறிது காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர் உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். மரணிக்கும்போது அவருக்கு 76 வயதாகும். 1947 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் திகதி களனியில் பிறந்த அவரது இயற் பெயர் வன்னி ஆராச்சிகே மாலினி செனஹெலதா பொன்சேகா எனும் பெயரில் பிறந்த இவர், பின்னர் இலங்கை சினிமாவில் மாலினி பொன்சேகா எனும் பெயரில் பிரபலமானார். 1963 ஆம் ஆண்டு மேடை நாடகங்களில் அறிமுகமான திருமதி மாலினி பொன்சேகா, 1968 ஆம் ஆண்டு புஞ்சி பபா எனும் சிங்கள திரைப்படத்தின் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். 1963 ஆம் ஆண்டு “நோரத ரத” நாடகத்துடன்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு யாழ். பல்கலையில் இரத்ததான முகாம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சமூகத்தின் ஒருங்கிணைப்பில் “குருதியால் தோய்ந்த நம் தேசத்திற்காய் ஒரு துளி குருதி” எனும் கருப்பொருளில் மாபெரும் இரத்ததான முகாம் ஒன்று இன்றைய தினம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், அதனை நினைவுகூரும் முகமாக இந்த இரத்ததான முகாம் முன்னெடுக்கப்பட்டது. இதில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு குருதிக்கொடையில் ஈடுபட்டனர். தமிழ், சிங்கள, முஸ்லீம் மாணவர்கள் என அனைவரும் இனம், மதம், மொழி பேதங்களை கடந்து இந்த இரத்ததான முகாமில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

குமுதினி படகு படுகொலையின் 40-ஆம் ஆண்டு நினைவு நாள்

1985ஆம் ஆண்டு மே மாதம் பதினைந்தாம் திகதி குமுதினிப் படகு வழமைபோல தனது சேவையை ஆரம்பித்தது. அன்று ஏறக்குறைய அப்படகில் அறுபதிற்கும் மேற்பட்ட பயணிகள் பிரயாணம் செய்தார்கள். நெடுந்தீவுத் துறைமுகத்திலிருந்து  குறிகாட்டுவான் நோக்கி வந்துகொண்டிருந்த சமயம் நயினை நாகபூசணி அம்மன் ஆலயம் அமைந்துள்ள நயினாதீவில் முகாமிட்டிருந்த கடற்படையினரின் இரண்டு பீரங்கிகள் பொறுத்தப்பட்ட விசைப்படகுகள் குமுதினிப் படகினை அண்மித்த போது அதில் பயணித்த மக்கள் அச்சம் கொள்ளத் தொடங்கினர். அவ்விரண்டு விசைப்படகுகளில் கடற்படையினர் தங்களுடன் கோடரி, கத்தி, அரிவாள் போன்ற கூரிய ஆயுதங்களையும் எடுத்து வந்திருந்தனர். இதைப் பார்த்த மக்கள் செய்வதறியாது கதறி அழுதார்கள். வந்த கடற்படையினர் குமுதினிப் படகினுள் மூன்று மாதக் குழந்தை உட்பட அனைத்துப் பயணிகளையும் ஒவ்வொருவராகக் கீழ்த்தளத்திற்கு அழைத்து மற்றவர்கள் அறியாமல் தாங்கள் எடுத்து வந்த கூரிய ஆயதங்களினால் வெட்டிக் கொன்றனர். கடற்படையின் இத்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

மாணவி வித்தியா படுகொலை 10 ஆண்டுகள் நிறை கவனயீர்ப்பு போராட்டம்.

புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு நேற்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்தன. இந்த மாணவிக்கு நிகழ்ந்த கொடூரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பொதுவாக பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நேற்று (13) வேலணை சந்தியில் கவனயீர்ப்பு போராட்டமொன்று நடத்தப்பட்டது. இப் போராட்டத்தினை சமூக மட்ட அமைப்புகள் ஒன்றிணைந்து முன்னெடுத்தன. இதில் சமூக மட்ட அமைப்பினர், கல்விமான்கள், கட்சி சார்ந்தவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பறையொலி எழுப்பி, “பாலியல் வன்புணர்வுக்கு எதிராக ஒன்றிணைவோம், பாலியல் வன்புணர்வுக்கு எதிரான நீதிக்கு சட்டவாக்கத் துறையே கவனம் செலுத்து, பாலியல் வன்கொடுமைக்கு எதிராக மௌனத்தை கலைப்போம், பாலியல் வன்கொடுமைக்கு நீதி வேண்டும், பெண்களை இழிவுபடுத்தாத ஊடகங்கள் வேண்டும், ஊடகங்களே பாலியல் வன்கொடுமைகளை பாதுகாக்காதே, பாலியல் சுரண்டல்களின் கதவுகளை மூடுவோம், உரிமையின் எல்லைகளை…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

வல்வெட்டித்துறை நகரில்  முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்!

வல்வெட்டித்துறை நகரில்  முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்! – நேற்றைய தினம் 12.05.2025  வல்வெட்டித்துறை நகரில் தமிழ் மக்களிடத்தில் அரிசி பெற்றுக்கொள்ளப்பட்டு தமிழனப்படுகொலையை நினைவுகூரும் முகமாக படுகொலை செய்யப்பட்ட எம் தமிழ்ச்சொந்தங்களை நினைவேந்தி.முள்ளிவாய்க்கால் கஞ்சி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் உணர்வுபூர்வமாக மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.      

மேலும் படிக்க