அண்மை செய்தி செய்திகள் தாயகச் செய்தி 

இந்தியாவிலிருந்து கஞ்சாவை கடத்தி மூன்று பேர் கைது

இந்தியாவிலிருந்து கஞ்சாவை கடத்திமூன்று பேர் கைது

இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக பெருமளவான கஞ்சாவை கடத்தி வந்த மூன்று பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எழுவைதீவு கடற்பரப்பில் வைத்து, 323.35 கிலோ கேரள கஞ்சாவுடன் இவர்கள் மூவரும் நேற்று முன்தினம் (6) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களில் ஒருவர் பேசாலை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் மற்றைய சந்தேகநபர் குருநகர் பகுதியையும் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், அவர்களை பொலிஸாரிடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment